வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

யா அள்ளாஹ் ..





கல்புக்குள்  ஈமானையும்
இறை நம்பிக்கைனையும் ஏற்படுத்தி வாழ்ந்தாலும்
அது
சிலரைக் கண்டு , அச்சப்பட்டு வாழ்கின்றது 

சில மனிதர்களுக்குக்
அன்பினைக் காட்டிநேசித்தாலும் 
அது- 
தீமைகளை சுமையாக்கி விடுகிறது 

மனிதனுக்கு
நல்ல ஆத்மாவை  இறைவன்  கொடுத்தாலும்
பேராசைபொய்திருட்டுகொலைகொள்ளை,களவு 
போட்டி பொறாமை ,சூது,வாது என்று  
மனத்தளவிலாவது செய்து
கபடதாரியாக இருந்து  வாழ்கின்றார்களே !


மனமோ ஏங்கித் தவிக்கின்றது யா அள்ளாஹ் !

வெள்ளி, 21 டிசம்பர், 2018

திறமைகளைப் போற்றுவோம்

திறமைகளைப்  போற்றுவோம்  
......................................................................

சிறுவர்களை  வாழ்த்துவோம்  - அவரவர் 
திறமைகளைப்  போற்றுவோம்
கல்வியிலே முன்னேறுவோம் - உயர்
கல்புடன்  வாழ்திடுவோம் .

என்றுமே  இதயத்தில்  - தினம் 
இறையருளை நாடிடுவோம்
நல்லதையே  போதித்த  - நம் 
நல்லாசானை  போற்றிடிவோம் .

சொத்தாய் சொந்தமாய்  - மன 
நிறைவாய்  நினைத்திடுவோம்
நிழலாகவே  நிழலாடிய - எம்  
பெற்றோரை மதித்திடுவோம்.

 போட்டியும்    பொறாமையும்   - இன்றி
பொறுமையை  பெறுவோம் 
பற்றும் பாசமும்  - அவர்களே  
பரிவுடனே பார்த்திடுவோம் .

புதன், 28 டிசம்பர், 2016


உயிரும் ,மூச்சும் பறக்கும் தூசு
பிறப்பு, 
வளர்ப்பு,
இருப்பு உணர்வுகளை புதைக்க உள்ளத்தை தோண்டலாமா ?.
இறப்பு
எல்லாம்
அடையாளம் காணமுடியாத தடங்கள் கூட !
துயரங்களோடு நல்ல பரிச்சயம்
இது நிரந்தரமற்ற மனிதப் பிறப்பு என்பதால்
எந்த நிலத்தை பிடிப்பது
எப்படி பணம் சேர்ப்பது
யாரோடு போட்டி போடுவது
பொறாமைப் படுவது
குழி யாருக்கு தோண்டுவது
இவை எல்லாம் மனித ஆத்மாக்களின் ஆசைகள்
யார் பெற்ற பிள்ளை பொறுமையானவர்
நல்லவர்
அமைதியானவர்
ஏமாற்றாதவர்
தீங்கு செய்யாதவர்
தவறு செய்யாதவர்
அன்பானவர்
பிறரை மதிப்பவர்
உதவி செய்பவர்
இத்தியாதி இத்தியாதி
படைத்தவனுக்குத் தெரியும்.!
முக நூலில் வம்பை ஏற்படுத்துவதற்காய்
தினந்தோறும்
நெட் கபே காரரிடம்
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டால் .
அய்யாமுல் ஜாஹிலியா காலத்தை
அப்படியே கடைபிடித்திருக்கின்றான்
பிர்அவூன் வரலாற்றை படித்திருக்கின்றான்
பெண்கள் மீதுஅட்டகாசம் நடத்துகிறான்.
அப்பாவி மக்களுக்கு
தொல்லை கொடுக்கிறான்.
யார் மனசு துடிக்கின்றது
அலசிப் பார்க்கவும் தெரிகிறது.!
மழைத் துளி அவன் மீது பட்டுத் தெரித்தது
அழுக்கு அகற்றிய படி தேய்த்துக் குளிக்கிறான்.
அவனுக்கு யார்மீதும் பரிதாபம் இல்லை
அன்பு இல்லை
பாசம் இல்லை
பற்று இல்லை.
உணர்வுகளை புதைக்க
உள்ளத்தை-
தோண்ட மட்டும் தெரிந்திருக்கிறது
.
பிறப்பு
ஓர் வரமென்று
எப்படிச் சொல்ல முடியும் ?
மரணம்
ஓர் விதி என்று
யாரால் சொல்ல முடியும்??

ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தட்டிவிடும் - தொழுகை


 

தட்டிவிடும் சக்ராத்வேதனையத் தட்டிவிடும் - தொழுகை
சுவர்க்கக் கதவின் திறப்பு !

வாதாடும் அல்லாஹ்விடம் வாதாடும் தொழுகை
பாவக்கறை அகற்றும் சோப்பு !

பொறுமையும் பெருமையும் தொழுவருககருக் கென்றென்றும்
பரிசாய் கிடைக்கும் ஜன்னத்துல் பிர்தொஸ் !

ஓதாமல் இருக்கும் மனமே பாழ்வீடு
சுட்டு எரிக்கும் நெருப்பு !

போட்டி பொறாமை கெ ட்டவர்களுக் கெப்போதும்
நல்ல பாம்பின் அழகு !

பொழியும் இறையருள் நினைக்காமல் கிடைக்கும்

மாணிக்கத்துக்கு கேற்ற மதிப்பு !

நினைவுகளில் கனவுகளின் ஏக்கங்கள் ...!





நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள் ...!
இரவின் மறைவில்
விடியலின் உதிர்ப்பில் 
மருந்தும் கையுமாய்
எழுந்தும் எழும்பாத
நிலையில் நாம் ..!

உள்ளத்து உணர்வில்
விண்ணும்,மண்ணுமாய்
இடியும் மின்னலுமாய்
கடலும் அலையுமாய்
இன்னும்.இன்னுமாய் ..
நினைவுகளில்
கனவுகளின் ஏக்கங்கள்
கொஞ்சம் மனதில்
வேதனைத் துளிகள் ...!
காலையும், மாலையும் நகரும்
வைத்தியர்களுடனும் தாதிகளுடனும்.
குடும்பத்தாருடனும் ,பார்வையாளர்களுடனும்
அனுதாப் பேச்சுக்களுடனும்.!
பிறப்பின் விதையில்
மரணப் பயிர் -முளைக்கிறது.!
போட்டிப் பூக்களும் பொறாமைப் பூக்களும் ,
வஞ்சகக் பூக்களும் ,
சூது வாதுப் பூக்களும் , பலவண்ண
குனப்பூக்களும் , பேய்களும்
பிசாசுகளும்
என் படுக்கையைகிழித்து
ஏளனமாய்ச் சிரிகிறது.!
மனதுக்குள்
விதி சதியாய் மாறிப்
போராடுகிறது.!
வாழ்வில்
துன்பங்களும், துயரங்களும்
மட்டுமே
கவலையின்றிச்
உடம்பினைச் சுமக்கின்றது !

அல்லாஹ்வே அருள்




மனதில் மகிழ்வும் முகத்தில் சிரிப்பும் 
மண்ணில் அமலும் மறுமையில் நன்மையும் 
பெறும் படியாய் நல்லருள் தருவாய் 
பொழிவாய் அல்லாஹ்வே அருள் !

புனிதம் மணக்கும் ஹஜ் ..!


மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!
பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !
இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !
சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே
ஆடைகளை புதிதாய் பூண்டு
அகந்தனில் மகிழ்ச்சி பூண்டு
வாழுவோர்க் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே !
ஸம் ஸம் தண்ணீரை மாற்றி
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ ந்திடும் ஹஜ்ஜே வாழி ..!

01-அல்லாஹ்வின் அருட்கொடை தனிலே அருளுண்டு
ரப்பில் ஆலமீன் ரஹ்மத்தாலே - நல்ல
வரங்கொண்ட வல்லோன் அருள்மறை ஓதுகின்ற
நாவல்லவோ தீனுல் இஸ்லாம் !


02-இல்மை கற்பிக்கும் இதயம் வேண்டும் இறைவனே 
அருளை தந்தான் அல்குர்ஆணை; இறக்கினான்
அறிவினை தொலைக்காதே அல்லாஹ்வை தொழுதுபார் !
சுஅரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !


03-
அரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !

.மனம் மகிழும்நாள் ! மக்கா நகரில் 
மானிடர் வரவைக் கண்டு களிக்கும்நாள்!
எண்ணி லடங்கா ரஹ்மத் .

இறையின் சிறப்பு !


மகத்து மண்ணில் ஸம் ஸம் ஊற்றில்
நாவினை சுவைக்கும் நீர்!
மக்கள் நிறையும் மக்கமா நகரில்
ஹஜ்ஜினை நிறைவேற்றும் ஹாஜி
சபா மர்வாவில் ஓடும் தொங்கோட்டத்தில்
மாறிடும் வியாதியின் தொல்லை !
வெள்ளை ஆடையில் காபன் உடையில்
மரணத்தை நினைக்கும் உயிர் !
ஈமானிய நெஞ்சத்தில் இனிமையான உணர்வு
படைத்த இறைவனுக்கு நன்றி !
மறுமை வாழ்வில் மண்ணறை வாழ்க்கையில்
தெரியும் இறையின் சிறப்பு !

சனி, 28 பிப்ரவரி, 2015



உன் உயிரில்,
உன் உறவில்,
உன்சுவாசத்தில் ,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால்
யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக !

அவள்
மனசு எனக்கு தெரியாது
என் மனசு
அவளுக்கு தெரியாது
ஆனாலும் -
"ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகளாய்"


கருவில் வளர்ந்து கல்பில் நிறைந்து
அன்னையின் வடிவமாய் அப்படியே இருக்க
உயிரும் உள்ளத்தின் உணர் வுகளுமே
கண்ணில் காணும் கனவு !

அன்பின் மனசு காட்டுவது அருட்கொடை!
உள்ளத்தின் உணர்வும் வரமாகி உயிரும்
உண்மையின் பேரெழில் ! உத்தம நண்பியை
இதயத்தில் வைத்தே இரு.

அன்புகாட்டும் பாசமிகு அண்ணியை உள்ளத்தினில்!
அணைத்தேன் அம்மாவைப் போல் அப்படியே -துள்ளும்
இதயத்தில் பாசத்தை ஊட்டினேன் உள்ளக்
கதவும் திறந்தது கண்டு

அத்தான் ..என்றலருகிறாள் அனீதா
அவனோ டுபா(ய்)யினிலேவானாள்
எத்தனையோ கனவுகளை
இதயத்தில் சுமந்த இவள்
பித்தானாய் வாழ்வு இனி வீணாள் !

முன்னேற்றப் படியை மூடிவிடும் பகை
விளையாடும் விதியை விலக்கிடத் துடிக்கும்
அறிவை ! அதையும் அழகாய் காட்டும்
கல்வியை போதிக்கும்குரு சுடர்.

நலமே செய்யும் உருவங்கள்!



காட்டில் வாழும் மிருகங்கள்
கயமை செய்யா உருவங்கள்!
நாட்டில் வாழும் மனிதரிலும்
நலமே செய்யும் உருவங்கள்!
ஏட்டில் படித்த அறிவில்லை
இறையைக் காணும் நெறியில்லை!
காட்டில் கூடி வாழுகிற
காட்சி கூட நாட்டிலி(ல்)லை !
உயர்வு தாழ்வு அவைக்கில்லை
உலகை ஆளும் ஆவலில்லை !
கயமை மிருக வாழ்க்கையிலே
கானல் கூட அரிதாகும்!
பொறாமை கொண்ட அகமில்லை
புரியுந் தன்மை அவைக்கில்லை!
கருமை நெஞ்சத் திலுமில்லை!
காட்டில் ஒன்றைக் கூடிவரும்
உள்ளம் தன்னில் ஒரு எண்ணம்
ஒரு நாள் கூட வைத்து விடா(து)
கள்ளம் கொண்ட மனிதரிலும்
காட்டு மிருகம் மேலாமே....

கையெழுத்து! தலையெழுத்து!



பிச்சை போட வேண்டாம்!
புகழ் தேட வேண்டாம்!
ஏழை எளியோரை நினைத்துப் பாருங்கள் – அந்த
அல்லாஹ்வே உங்களுக்குத் துணையிருப்பார்!
இருப்பதை வைத்துச்
சிறப்பாய் வாழ்வோம்
இறைவனை வணங்கி!
நிம்மதியாய் இருப்போம்
போட்டி பொறாமை
சண்டை சச்சரவு
இவையெல்லாம் எதற்கு?
மனதிலே விஷமென்றால்
எதற்கு மனிதாபிமானம்?
மனதில் நச்சுத்துளி கலந்து
சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப்
பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?
மனமும் உடலும் கருகிய பின்
குடும்பம் இருந்து என்ன பயன்?
சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு
வேடிக்கை பார்த்து என்ன பயன்?
உறவே சீரழிந்த பின்
பணமும் பிணமும் எதற்கு?
எழுத்தில் எல்லா வரிகளும்
தலைக்கனம் நோக்கிப் போகிறது!
உடலும் உள்ளமும் ஊனமுற்றே
வாழ்வு வீணாய்ப் போகிறது…
கையெழுத்து
நன்றாகயில்லையெனினும்
பரவாயில்லை – தலையெழுத்து
நிம்மதியாக அமைய
வழிகாட்டுங்கள்…!
ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல
ஒரு இனத்தின் வேதனை…!


அன்னையின்அன்பே அணைத்திடும் ஆத்மாவின்
அரவணைபாம்:தொப்புள்கொடிஇணைதல் அருளாம்:
அழுகின்ற சிசுக்கு கொடுக்கின்ற பால் .


மரணத்தை நாடிப் பிறந்தவர்கள்
நாம் -
வாழப் பிறந்தவர்கள் அல்ல
இதயம் உண்டு 
எதையும் சுமக்க
வாய் உண்டு
கொடுமை மறைக்க
மானம் உண்டு
மரியாதை காக்க
உள்ளம் உண்டு
அன்பை சுமக்க
அச்சம் உண்டு
இறையை வணங்க
எல்லாம் இருந்தும் ஏது பயன் ..?
உயிர் அற்றுப் போகும் உடம்பாச்சே
உடலை விட்டுப் போகும் உயிராச்சே ..!