சனி, 19 பிப்ரவரி, 2011

நிழல்!!!

நேசித்தவளின்
பாசம் மட்டும்
நிழலாடுகிறது
இதயத்தில்....

நான்....நீ.....

அழுகை சத்தத்தோடு
பிறந்தேன்
நான்
என்
சந்தோசத்தோடு
கலந்து
சிரித்தாய் நீ!!!

காத்திருப்பு...

கறுப்பு மாறிய
உன்-
வெள்ளை முடியில்
ஜொலிக்கின்றன...
மரணத்தின் தடவல்கள்....

கைதி!!!

உன் இதயச்சிறையில்
தரிசிப்பதற்கு
கனாக் காணும்
ஆயுள் கைதி
நான்....

ஏமாற்றம்!!!

அந்தப் பணக்காரவாலிபனுக்கு-
சரீரப்பசி!
சில-
ஏழைக் கண்ணிகள்
வர்ணிக்கப்படுகிறார்கள்...!

விழி போன பின்....

எத்தனையோ யுகங்களாய்
உன்-
அன்பு மடலைத் தேடினேன்!
கிடைக்கவில்லை!
நேற்று-
நீ போட்டாயாம்
அம்மா
வாசித்துக் காட்டினாள்!
நேற்றுத் தான்
விபத்தொன்றில்
நான்
கண்களை
இழந்து விட்டேன்...!

புதன், 16 பிப்ரவரி, 2011

நபி பெருமானார்!!!!


மண்ணகத்தை மாற்ற வந்தார்!
நபி பெருமானார்-மாந்தர்
இன்னல் யாவும் தீர்க்க வந்தார்
நபி பெருமானார்!

இறுதித் தூதராக வந்தார்
நபி பெருமானார்-வாடும்
வரியவரைத் தேற்ற வந்தார்
நபி பெருமானார்!

வானில் நிலா போலொளிர்ந்தார்
நபி பெருமானார்-நல்ல
தீனின் ஒழியாத் திகழ்ந்தார்
நபி பெருமானார்!
இஸ்லாத்தைப் பரப்பவந்தார்
நபி பெருமானார்-மாந்தர்
கஷ்டமெலாம் தீர்க்க வந்தார்
நபி பெருமானார்!

பாவக்கறை தீர்க்க வந்தார்
நபி பெருமானார்-கொடுஞ்
சாபவினை போக்க வந்தார்
நபி பெருமானார்!

அறியாமை அகற்ற வந்தார்
நபி பெருமானார்-தூய
நெறி புகட்டி அருள வந்தார்
நபி பெருமானார்!!!