திங்கள், 21 பிப்ரவரி, 2011

மாமிக்கு வேண்டிய ம(று)ருமகள்!

அழகுக்கு  ஓருருவாய்  அவனியிலே!
அமைய வேண்டும் எனக்கு மோர் மருமகளே!
பழக்கத்தில் பெருந்தன்மை சொலிக்க வேண்டும்;
பண்பாட்டை மறவாது நடத்தல் வேண்டும்!

கற்றறிந்த பெண்மகளாய் இருத்தல் வேண்டும்-கணவன்
கருத்தறிந்து விருந்தளிக்கத் தெரிய வேண்டும்;
பற்றோடு குடும்பத்தைப் பேண வேண்டும்;
பத்தினியாய் குலமானம் காக்க வேண்டும்;

சண்டையோடு சச்சரவைத் தவிர்க்க வேண்டும்;
சாடை,கோள் இழிவுரைகள் விலக்க வேண்டும்;
தன்னொளிரும் வெண்ணிலவாய்த் திகழ வேண்டும்;
தன் பதியைத் தெய்வமென மதிக்க வேண்டும்;

குணத்திலுயர் குன்றாக நிற்க வேண்டும்;
குற்றங்கள் தனைபொறுக்கு முள்ளம் வேண்டும்;
பணமிருந்தும் திமிரில்லா திருக்க வேண்டும்;
பாசமலர் இதய(ம்) மணம் வீச வேண்டும்;

பெண்மையதன் குணமனைத்தும் ஒருங்கே வேண்டும்;
பேரழகுப் "பேரர்"கலைத் தரவும் வேண்டும்;
மண்ணகத்தில் எனகேற்ற ம(று)ருமகளாய்;
மாமியென்னைத் தன் தாயாய் மதிக்க வேண்டும்.

மருமகள் வர வேண்டும்!

அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்

கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!

நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.

தட்டிக்கழிக்கலமோ ?



பட்டுக்கன்னம் தொட்டுக் கொஞ்ச  இட்டமில்லையோ?
கட்டழகி என்னைவட்ட மிடவில்லையோ?
தொட்டுத் தொட்டுப் பேசிக்கிட்ட வரவில்லையோ?
எட்டி நின்று பார்க்கும் நேரம் நட்டமில்லையோ?

எட்டு இரு வயதுப்பெண் சிட்டு அல்லவோ?
பட்டுப்பூச்சி சிட்டைத் தேடி வரவில்லையோ?
தட்டுத்தடு மாறி நிலை கெட்ட தென்னவோ?
சுட்டும் விழிச் சுடர்பட்டுத் தவிப்பில்லையோ?

ஒட்டி உற வாடக்கட்ட ளைக்களுமுண்டோ?
கட்டித்தங்க மிவள் வட்ட மதியல்லவோ?
 பொட்டு இட்டுக் கூந்தலள்ளிக் கட்டவில்லையோ?
பூஞ்சிட்டிவள் கரந்தொட்டுப் பேசவில்லையோ?

பட்டிக்காடோ ?பட்டணமோ? பதிலெதுவோ?
கெட்டித்தன மாவதற்க்கு  மனமில்லையோ?
சுட்டிப் பெண்ணைக் கட்டிக் கொள்ள நினைவில்லையோ?
சட்டம் ஏதும் உண்டோ? வீண் சங்கடமுண்டோ?

பெட்டைக் கோழி அழைப்பதைத் தட்டலாகுமோ?
தொட்டுத்தாழி கட்ட நகை நட்டு வேண்டுமோ?
மொட்டுமல ராவதற்க்குத் "துட்டு"வேண்டுமோ?
பெட்டையர்க ளென்றால் என்ன "மட்டம்"ஆகுமோ?



சனி, 19 பிப்ரவரி, 2011

அநியாயம்!!!

நேற்று நடு நிசியில்
கண்ட;
காதல் கனவுகளின்
ஆனந்த ராகத்தைக் கலைத்தது
சந்தியிலே கேட்ட
துப்பாக்கி ராகங்கள்...

நினைவுகள்!!

முட்கள் நிறைந்த
ரோஜா செடியினுள்
வாசம்மட்டுமா வீசுகின்றது???
உனது-
நினைவுகளும் தான்......

சகீ!!!!

கல்லுக்குள்ளே ஈரமுண்டு-
என்பதை-
நான் புரிந்துகொண்டேன்..
சகீ-
உனக்குள்ளே
என் நினைவுகள்
இருப்பதனால்!!!

தேசம்!!!

வாசமில்லாத
தேசமிது
நீ
ஆட்சிக்கு வருவதற்கு
முன்.....