ஞாயிறு, 6 மார்ச், 2011

அன்பு!!!!!

வாழ்வுச் செடியின்
அன்பு மலர்களை
உறவுத் தென்றல்
தழுவிச் செல்லட்டும்!

அல்லாஹ்வே அறிவிப்பாயா …….

இதோ
இஸ்ராயீல்
என்னை;
நெருங்கிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு  முன்
அறிவிப்பாயா?
அல்லாஹ்வே  நீ  எனக்கு
இஸ்ராயீலிடம்
துப்பாக்கிக்  கொடுத்தா,துரத்திவிட்டாய்?
இன்றேல்
வெட்டு வாளுடனா  வெளிக்கிடவைத்தாய்.
அதுவும்  இன்றேல்
கண்ணிவெடி  கொடுத்துக்
காத்திருக்க  வைத்தாயா……?
அல்லாஹ்வே
இதை  எனக்கு
அவசரமாய்  அறிவிப்பாயா..?

தலைக் கனமாய் வாழேன்….


தூய இஸ்லாம்!  வழியில் பிறந்தேழுந்தேன்!
மடமை யனைத்தையும் வீரமாய்  துடைத்தெறிந்தேன்!
ஈமான்  தனைக் கொண்டு  புத்தியாய்நடை  பயின்றேன்!
மாற்றம் படைத்து வைப்பேன்! அறியமை அகற்றி வைப்பேன்!
திருமறை ஓதலோடு: மார்க்கக் கல்வியை நான் கற்றேன்!
உயிர் பிரியும் நாள் வரைக்கும் தீனுக்காய் நான் துடிப்பேன்!
வீண் விரயயின்றி  இறை வழியில் செலவளிப்பேன்!
சுவாசிக்கும் மூச்சியிலும் கலிமாச்சொல்லி மகிழ்றிருப்பேன்!
அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றி நடந்த பெண்ணல்ல
உண்மை முஸ்லிம் வயிற்றில்! அவதரித்த ஈமானியப் பெண்
இறை வணக்கத்தை இன்பமுடன் கடைபிடித்தவள் யான்
திசை மாறி வசை படி தலைக்கணமாய் வாழேன் யான்
மார்க்கப் போதனையை மழையாய் பொழியும்
தித்திக்கும் தேனாற்றல் தானாகப் பெற்றவள் நான்
எத்திசைப் போனாலும் என்னிதயம் அல்லாஹ்வை
வணங்கிப் போற்றிறிற்கும்! புகழினை பாடி நிற்கும்!

இங்கேயும் ஒரு ஓலம்..

இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…!
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு
இறைவா
என்னை உலகத்துக்குள்
இறங்கி வைக்காதே
மனிதர்கள் இப்போது
பூமியில் இல்லையாம்,
அதனால் எனக்கு
உலகத்துக்குள் போக
பயமாக இருக்கிறது
அதோ!
வெடிச்சத்தம்
கருப்பைக்குள் இருக்கும்
என்னுடைய செவிகளையும்
செவிடாக்க முனைகிறது
கற்பழிப்பு…
கொலை…
கொள்ளை….
அப்பப்பா
வேண்டாம் இனி
மனிதப் பிறவி
இறைவா
கருவறைக்குள்ளேயே
எனக்கு ஒரு
கல்லறை  அமைத்துவிடு!

நல்லறங்கள் பெற்றிடுவாய்!!

கொள்கையிலே சிறந்த நல்ல குலமகளே!
கோலமிட்டு வாசலிலே நிறைப்பவளே!
உள்ளமதில் உவகை தரும் மனைவிளக்கே:
உனக்கெந்தன் வாழ்த் துண்டு ஏற்றிடுவாய்!
அன்னத்தின் அழகு நடை உனக்கு உண்டு!
அன்புள்ளம் உன்னிடமே நிறைய உண்டு!
எண்ணத்தில் நல்லொளிர்வு உனக்கு உண்டு!
இறும்பூது எய்துகிறேன் உன்னைக் கண்டு!
இல்லறத்தில் நல்லறத்தைக் கண்டிடுவாய்!
இன்பத்தை தினமும் நீ நுகர்ந்திடுவாய்!
வெல்லுகிற பாதையிலே பயணஞ் செய்வாய்!
வெற்றிகளை வாங்கி நிதம் வாழ்ந்திடுவாய்!

திங்கள், 21 பிப்ரவரி, 2011

என்னருகே வாருமையா!

கன்னி யென் இதயத்தைக் காவு கொண்ட
காளையரே நீ ரெந்தன் கனவில் வந்தே!
என்னாளும் வாட்டுவது போது மையா!
இக் கணமே! என்னருகே வாருமையா!

வஞ்சி யென் இதயமலர் தன்னில் வீசும்!
வாசந்தான் உம்மீது கொண்ட காதல்
துஞ்சியுயிர் போகுமட்டும் தொலைந்திடாது
தூயவரே உமதெண்ணம் கலைந்திடாது!

பூப் போன்ற எழில் வதனம் காட்டி நெஞ்சில்
பொலிவான காதல் மலர் பூக்க வைத்தீர்!
காப்பாவீர் எந்தனுக்கு வாழ்வில் என்றும்!
காதலுடன் துணையாக நிலைப்பீர் நன்றாய்!

ராஜாவே! உனக்காக ஏங்கி இன்னும்!
ராத்திரிகள் நழுவுவது ஆகாதையா!
ரோஜாவாய் எனை நீரும் சூடிக் கொள்ள !
உடனோடி என் பக்கம் வருவீரையா!

அறிவாள் உணர்க!

அரபு நாட்டின் வெம்மையிலே!
அனுதினம் வெந்தாய் பணத்துக்காய்!
இரவும் பகலும் ஓயாது
இயந்திரம் போலே நீயுழைத்தாய் !

விறகாய் அங்கே நீ யெரிந்தாய் !
வீட்டில் அடுப்பு எரிவதற்காய்
உறவைப் பிரிந்தாய்.உயிரென்று
ஒம்பும் கௌரவம் அங்கு தீர்த்தாய்!

மண நாள் "மாலை"வாடு முன்னர்
வானிற்  பறந்து நீ சென்றாய்:
பணந்தான் வாழ்க்கை என்றெண்ணி:
பைத்திய மானோர் பலருண்டு:

துணையே! பணமும் வாழ்க்கைக்கு
துலங்கும் அறிவால்!நீயுணர்க!
இணையே!இல்லா!வாழ்க்கையிலே
இன்பம்!அன்பு உறவன்றோ!

தாழித்  தங்கம் விற்றே நீ!
தாவிச் சென்றாய் பொருளீட்ட
வேலியில்லா மனத்  தரையில்
விதைத்தாய் நீயும் பேராசை

கேலிக் கூத்தாம் உன் வாழ்க்கை
கிடைக்கும் பணத்தால்!கிடைக்காது !
பாழாய் போன இளமை சுகம்:
வருமோ! மீண்டும் நீயுணர்வாய்!