திங்கள், 22 ஆகஸ்ட், 2011
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011
திருமண வாழ்த்துக் கவிதை
மண மக்கள்
செல்வன் ஜமால்அப்துல்பாரி
மணமகள் ..பாத்திமா உஸாமா பானு
மண நாள் ..28.07.2011.
...காலைச் சுடரொளி கண்களில் படர
மாலை வான் நிறம் வாங்கிய வதனம்
முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
வாழ்விலோர் திருநாள் காணும்
மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
செந்திரு போல் விளங்கும்
செந்தமிழ் பானுமகள் பெண்மை
மாண்புறும் பெருநாள் உந்தன்
மணநாளில் ஹிதாயாவின் வாழ்த்தை
வானத்தின் மழைத்தூ வலாய்
குளிர்தமிழ்க் கவிதை யாலே
பெய்திட வந்தேன் வளம்
பெருக நும் வாழ்வின் வயல்
வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
நோக்கினில் உயர்ந்த பாச மருமகளே
தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க...!!
மாசணு காத மனத்துள் வாய்மை
தேசு படர தெளிந்த நீ ரோடையின்
ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
வீசும் தென்றலில் மேதினி பரவ.....!!!
பாரி மகனின் கருணை மனத்தால்
சாய்ந்த மருதூர் தந்த மருமகள்
இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
உஸாமா இன்றுன் வாழ்வில் இணைந்து
எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
தலைவன் பாரியோடு சார்ந்து இல்லற
வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்...
"இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
எழிலாய் அமைந்த மருமகளே அதன்
சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
செவ்வர விந்த மலரே,மலரின்
உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே...!
மேலாம் நிதியே!என்றெலாம் போற்றும் ...
சங்க காலத் தமிழிலக் கியத்தின்
மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக...!
போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
காதலில் இருவர் கலந்தொரு மித்து,
பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்
கோபுரம் போலு யர்ந்த
கொள்கையும்,அகன்ற வான் போல்
ஆதுரம் மிகு குணமும்
ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
சீருற பெற்று வாழ
திகழ் பரம் பொருளாம் இறை
தூதரின் நெறிகள் பேணி
சுகம் பெற வாழ்த்து கின்றேன்....!
"மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை..."
"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின் "என வள்ளுவன்
தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!
பெண்ணின் பெருமையெலாம்
பேசும் திருக்குறளின்
நுண்ணரிய கருத்தெல்லாம்
நுணுகிச் சுவைத்து நலம்
பண்ணி ஆயிரங் காலப்
பயிராய் தலைத்திடுவீர்...!
குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
கோடி இன்பம் கூட்டும் மழலை
மொழிகளின் இனிமையும்
செவிகளின் நிறைய....!
உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
இருவர்க் காம் எனும் இயல்பின ராகி....
நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்
நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் - என்னை மறவாது
"செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ்வீர்...!
என வாழ்த்தும்
குறையா அன்பில் உங்கள்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி
போ நீ
உள்ளத்திலே நிம்மதி யோங்க
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க
அப்பாவிப் பெண் களாக
வாழ்ந்திடனும் மர்ம மனிதரே ஓடு
...மனிதனை மனிதன் கழித்து
உயிரினை அழித்து விழ்த்திச்
சனியனாம் ஆட்டம் போடும்
கிரீஸ் மனிதரே போ நீ
பாய்ந்து பாய்ந்து நாளும்
பயமுருத்தும் அவலம் மாறி
தாயுடன் பிள்ளை யாகத்
தழுவிடப் பேய்யுருவமே ஓடு
வீ ட்டுக்குள் பெண்களை அடக்கி
வீதியில் ஆண்களை கூட்டி
கூட்டு வாழ்கை யைக் கொல்லும்
கொடிய கள்ளனே ஓடு
அமைதியே சொர்க்க மாகும்
ஆனந்த வெள்ள மஃதே
மனிதரெனும் கொடிய பாவியே
பெண்களை விட்டு ஓடு
ரமழான் மாதம்.....!
புனிதமாம் ரமழான் மாதம்:
போற்றிடும்! இறையோன் வேதம் :
இனிதென! மனிதர் வாழ்வு
இலங்கிட அருளும் மாதம்!.
...நோன்பினை நோற் போருள்ளே!
நுளைந்திடும் நல்லுணர்ச்சி :
மாண்புறை குழந்தை யொத்த!
மனம் வரும்! பாவம் தீரும் ;
சுவர்க்கமோ! நோன்பாளர்க்கு
சுகமுடன் காத்திருக்கும் ,
தவத்திரு நோன்பு நோற்போர்
தலத்தினில் மேலோராவர் !
சைத்தாணை சிறையில் பூட்டித்
தடுத்திடும்! மாதம் ரமழான் !
வைத்தாளும் இறையோ னன்பை
வாங்கி நாம் மகிழும் மாதம்!
பாவங்கள் தீர்ந்து நல்ல!
பலன் வரும் நோன்பினாலே
சாபங்கள் தீரும்! வானோர்
சலுகைகள் வந்து சேரும்!
ஐந்து நற் கொடைகள் தன்னை
அருளித் தன் "உம்மத்திற்கு"
தந்துளா னிறையோன்! நோன்பைத்
தவறிடல் பாவமாகும்....!
சனி, 13 ஆகஸ்ட், 2011
மிதக்கும் கனவுகள்...!!
மனசு
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்
துடிக்கும்..
கற்பனைகள்
என் உள்ளத்தின் உணர்வுகளாய்
பிம்பம் சேர்க்கும்...
சுவாசத்தின்
ஏக்கப் பெரு மூச்சு
என் கவலைக்கு தீ மூட்டும்
பிள்ளைப் பேறு நேரம்
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..
சிசுவின் கதறல்களுக்கு பால்
கொடுக்க
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய
சின்னக் கரங்கள் விளையாடும்.
பாசம் சுரந்து
தாய்மையின் உணர்வுகளில்
என் மன விழிகள்..!!
ஆத்மாக்களின்
பரிதாப அவலங்கள்
காணாமல் போக
சிசுக்களின் பிறப்புக்களில்
இதயம் மகிழும்...
இல்லற வாழ்விலே
இணைந்து போக
கனவுகள் மிதக்க
என் தமிழைப் போல்
எழுத்துக்கள் கவிதையாகும்
கலையுலகில்....
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்
துடிக்கும்..
கற்பனைகள்
என் உள்ளத்தின் உணர்வுகளாய்
பிம்பம் சேர்க்கும்...
சுவாசத்தின்
ஏக்கப் பெரு மூச்சு
என் கவலைக்கு தீ மூட்டும்
பிள்ளைப் பேறு நேரம்
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..
சிசுவின் கதறல்களுக்கு பால்
கொடுக்க
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய
சின்னக் கரங்கள் விளையாடும்.
பாசம் சுரந்து
தாய்மையின் உணர்வுகளில்
என் மன விழிகள்..!!
ஆத்மாக்களின்
பரிதாப அவலங்கள்
காணாமல் போக
சிசுக்களின் பிறப்புக்களில்
இதயம் மகிழும்...
இல்லற வாழ்விலே
இணைந்து போக
கனவுகள் மிதக்க
என் தமிழைப் போல்
எழுத்துக்கள் கவிதையாகும்
கலையுலகில்....
வெளிச்சத்துக்கு வந்து விடு...... !!
நீ
வெளிச்சத்தின்
விலாசத்தை
விசாரிக்கிறாய்
பிறரிடம்
அது உன்
விழி வாசல்களில்
உட்கார்ந்திருப்பதை
உணராமல்
சமூக விலங்குகளுக்கு
சத்தியம் செய்து கொடுத்தாய்
சத்தியம் எது
என்று உணராமல்
இப்போது
உன்
உடல் காட்டுக்குள்
உணர்ச்சித் தீ
அடிக்கடி
பற்றிக் கொள்ள
நீ
அவதிப்படுகிறாய்
வெளியுலகத்திற்கு
நீ தூய்மையானவள் தான்
இருந்தாலும்
உள்ளத் தூய்மைக்கு
உணர்ச்சித் தூரிகை
உரசி உரசி
அடிக்கடி
வண்ணம் தீட்டுகிறதே
உணர்துக் கொள்
இன்னும் உன்
உணர்ச்சிக் கலை
உறங்கவில்லை என்று
இங்கே
ஒரு சோலைவனம்
உனக்காக காத்திருக்க
நீ ஏன் இன்னும்
பாலைவனத்துக்கு
பல்லைக் காட்டுகிறாய்
போலி வாழ்க்கைக்கு
கட்டிய தாலியை
கழற்றி எறி
உனக்காக ஏற
இன்னும் ஒரு தாலி
இங்கே காத்திருக்கிறது
உன்
உணர்ச்சித் தொட்டாக்களே
ஒரு நாள்
சமூக விலங்குகளை
சுட்டு வீழ்த்தும்
அதற்கு முன்னே
கழற்றி
எரிந்து விட்டு
நீயே வந்து விடு
இருட்டுக்குள் நீ
குருட்டுக் கண்
கண்டது போதும்
இனி
வெளிச்சத்துக்கு வந்து விடு......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






