ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
அழகிய விழியில்
அபிநயம் புரியும்
தேவதையே;
உன்னை அர்ச்சனை செய்யும்
நினைவுகளில்
என் ஆன்மா பூக்கிறது.....!
வெண்மதி போலே
இதயவானில் பவனி வரும்
அன்புத் தேவதையே:
உன் புன்னகையில்
நான் புதியவனாகிறேன்....!
நினைவுகளில் ஆனந்தம்
காணும்_
இந்தக் காதல்
பித்தனுக்காக
நீ ராகமிசைக்க
வரமாட்டாயோ?
காலம் கரைந்தும்
கனவாகிப் போகும்
நம் கதைகளை
நிஜமாக்குவதற்கு
துடிக்கும்
எனக்காக
நீ பாதத்தை நகரத்து....
மலர்களால் மட்டுமல்ல
இவனின் மனமே
உனக்கு
ஆராதனை செய்யக்
காத்துக் கிடக்கிறதடி.
இறையோன் அருளொளியை எழுது!
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !
வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?
கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
இயற்கையின் எழிலை எழுது!
உலகின் அற்புத வளத்தை எழுது!
சுரக்கும் சுகந்தம் தன்னை எழுது!
தூய நட்பு உள்ளத்தை எழுது - நண்பா
அனைத்தையும் மனம் திறந்து எழுது!
பெண்மை தனையே எழுதி - தாய்மை
பொங்கி யெழும் கருணையையேன் மறந்தாய் !
வானம் பூமியை எழுது!
ஆழ் கடல் அற்புதத்தை எழுது!
வான் பொழியும் மழையை எழுது!
தரை மேல் விழும் சுடரை எழுது!
பசி பட்டாணி பஞ்சத்தை எழுது!
மரம் செடி கொடியை எழுது!
எண்ணிலா இயற்கை அழகை எழுது!
தாய் குலத்தை வர்ணிப்பதேன்...?
கலை இலக்கியத்துள்ளே நகரும்
போட்டி பொறாமை தன்னை
கவிதை வரிகளாய் எழுது - பாரில்
எழுந்துள்ள பஞ்சத்தை எழுது!
மின்னலாய் பிரகாசிக்கும் இயற்கை
அழகினை போற்றி எழுது!
நல்லவை எல்லாம் விட்டு - எழுத
உலகினில் பெண்மையா வேண்டும்....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






