ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பார்த்தால்
சிரிக்கிறது உதடு
நீ
பேசினால்
சுடுகிறது மனசு !
வேதனைகள் :
தொடரும் போது _
அழுது வடிப்பது
கண்கள் அல்ல
மனசு !
நட்பை
கடுகளவு கூட_
சந்தேகிக்காதே
அது
குருதியை விட :
மேலானது !
உன்
ஆயுள்நீடிப்பதற்கு :
நீ
ஏழைகளின் கண்ணீரை
துடை !
சந்திக்க வில்லை
இதுவரை,
உன்னைவிட
மோசமான உறவை !
பணத்தை -
தேடி வைப்பதற்குள்;
வியாதி
பிணமாகிப் போகிறது....!
போலியோடு மறைகின்றது:
இன்மை வாழ்க்கை -
மெய்யோடு அழைக்கின்றது:
மறுமை வாழ்க்கை..!