வெள்ளி, 11 நவம்பர், 2011

இல்லறவாழ்வை நல்லறமென காத்தல்
மனைவி குணத்தின் உயர் குன்று ..!
நன்றி மறவா நற்பொறுமை
மண்ணில் வீசும நறு மனக் காற்று ...!
இன்னல் கொடுக்கா இன் சொல்
பெண்ணுக்கு பரிசாகும் குணம் ...!
உயிராய் வாழும் கருணை வடிவங்கள்
மூச்சாய் சுவாசிக்கும் தோழி ..!
நம்பிக்கையில் வாழும் மனித வாழ்வு
நல் வழி தவறாத மனசு ....!
புகழ்தேடி முறை தவறல்
விறகை( மனதை ) ஏரிக்கும் தீக் குச்சி ...!
தோழி,
என் மரணம்
நோயினாலோ....
சதியினாலோ...,
விதியினாலோ.....
... இயற்கை அழிவினாலோ...
விபத்துக்களினாலோ....
தாக்குதலினாலோ......
பலி வாங்குதலினாலோ....
இயற்கையாகவோ .....
நேர்ந்தாலும் -
எனக்கு பரவாயில்லை..!
ஆனால்
என்னுள்ளிருக்கும்
உன் நினைவுகளை மறந்து
பிரிந்து ...
இழந்து ....
என்னால் வாழ முடியாது..!
தயவு செய்து என்னை
தனிமை யாக்கி விடாதே...!
மனதை நோவினை செய்து
மரணத்தை தடவ வைத்துவிடாதே
நீ பேசாமல் மௌனம் சாதிப்பது
என்னால் -
தாங்க முடியாது ...!
உயிரை இழக்க முடியாது ...!!
நினைவுகளை அழிக்க முடியாது ...!!!