சனி, 14 ஜனவரி, 2012

நட்பின் மீது நம்பிகையது வைத்தல்,
உரிமையாகும் உறவுக்குப் பரிசு ..!
பிரிவுகள் வருவதை தடுத்து நிருத்தல ,
உதயமாகும் உறவுக்கு வழி ...!
தேடி வரும் நோய்களை தடுத்துனிருத்துமாம்,
தலை காக்கும் தருமம் ...!
விட்டுக் கொடுத்து வாழும் நட்பு ,
தடவிக் காக்கும் உறவு ...!
எதிர் பார்த்து வருவோருக்கு கொடுத்துதவுதல் ,
குளிந்த மனதின் தர்மம்...!
நட்பு போல தொரு பாசம் எதுவுமில்லை ,
இதயம் கொடுக்கும் பரிசு ..!

ஒரு பெரு மூச்சில்விழும் காட்சிகள் !

விழிக் குளங்கள்
கண்ணீரை இறைக்கும் !

விசனமில்லாத
முகங்களுக்குள்
விஷமேறிய தோள்களாக
சில முகவரிகள் ....!

கிடைக்காத போதும்
கிடைத்த பொழுதும்
கேள்வியையே
வெளியிடும்
மூச்சுக்குள் ...!

பாலையும் நீரையும்
பகுத்தறிந்து
நோக்கும்
அன்னமும் இதுகண்டு
அலறித்துடிக்கிறது ..!

ஓ...,
அந்த இருளுக்கும்
வேலையில்லை
மனிதர் மனங்களில் தான்
குடி கொண்டது ..!

கொடுமையும்
கொடிய பார்வையும்
என்னில்படுவதனால்
என் விழிகள்
என்றுமே ......!