திங்கள், 23 ஏப்ரல், 2012

உடலிலும் உயிரிலும்

நிலைத்திருக்கும் ..(நிறைந்த்திருக்கும்)

அருள் மறை திருக்குர் -ஆன்

மனித ஆத்மாக்கள்

உன் முன்னே

பயப்படுகின்றன ...!

உதடுகள்

எழுத்துக்களை உச்சரிக்கின்றன

உன் வசனத்தை

மனங்கள் மனனமாக்கி

வசப்படுத்திக் கொள்ள..!

இரவும் பகலும்

நினைவவூட்டும் உன் வாசனங்களால்

இதயங்கள்உணர்ந்து

பாவங்களை செய்ய மறுக்கின்றன !

மறுமையின்

சுவர்க்கத்தை நாடி உன்னிடம்

மனம் மன்றாடி நிற்கும்..

பட்டு மேனியைக்

தொட்டுப் பார்க்க

வரவழைக்கும் மண்ணறை..!

அற்புதங்கள் காட்டும்

அல்லாஹ்வின் பேரற்புதமே குர் ஆண்
சகீ
உன் தாயும் என் தாயும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் -
அல்லாஹ்வின் படைப்பில்
நானும் -நீயும்
ஒரு உயிரில் கலந்த பிறப்புக்கள் ...!
தோழி
வானத்தை முத்தமிடா பூமியைப் போல
நீ- எனக்கு
உறவாய் கிடைத்தாய்...!

ஆனால் -நீயோ ,
தூரத்து தண்ணீர் தாகத்துக்குஉதவாதென்று
சொல்கிறாய்!

பிறகு -ஏன்
எனக்காக
உன் கண்ணில் நீர்?..
சகீ
நீ விடும்
ஒவ்வொரு மூச்சும்
உன்னை சுமக்கும்
சுவாசங்களாய்
எனக்குள் நகர்கின்றது
உன்
நினைவுகளோடு சங்கமிக்கிறது ...!
சகீ
ஆயுள் முழுவதும் உனக்காக
பிராத்தனை செய்கின்றேன்
நீ -
அல்லாஹ்வுககாக
அவன்
நல்லடியாராக
வாழ வேண்டுமென்பதற்காக ....!

வியாழன், 19 ஏப்ரல், 2012

முற்றுப் பெறாத வினாக்களாய் ....?
.....................................................................
கண் திறந்து பார்க்கையில்....
மனச் சுமையாய் இருந்தது என் கனவு
அன்பும் ,பாசமும் நிறைந்த...
மனதில் ஓர் இருளாய் நிகழ்வு ...!

உன் மனதினை நேசித்துப் பார்க்க ..
பல சோதனைகள் செய்தே இடம் தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை நேசிக்க மாட்டாய் என....

எனக்கு பாசம் காட்டிய
உன் சுவாசம் ...
வெறும் வேஷம் என்றறியேன்....?

அன்பே .
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாய் என்று .
அழுது துடிக்கின்றேன் ..
ஆயூள் முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்...
என்பதை அறியாமல் ...!

உன்னிலிருந்து பெற்ற அன்பை
தூய உறவில் -
வைத்துக் காப்பாற்றுவாய் என்றெண்ணினேன்....

திசையரு கருவியற்ற கப்பலைப் போன்று ...
வரண்ட நாவுக்கு பாலைவனத்து கானல் நீர் போன்று ...
கொதிக்கும் மண்ணில் துடிக்கும் புழுப் போன்று ....
எனை விட்டு விட்டு போவாய் ....
என அறியாமல்.......! புரியாமல் ...!!

நேசித்தவள் மனம் அறியாமல்...
பாசம் காட்டியவள் அன்பு புரியாமல்
யாரையோ நினைத்து அழுது அழுது ....
வாழ்கின்றேன்......
என் மன நிம்மதி இல்லாமல் ....

அன்பானவளின் இதயம் அறியேன் ......?
ஆனாலும் -
எனை நேசித்த ......
உறவுகள் என் உயிரின் உணர்வுகளாய் ..

என் மனதிற்கு ......
பாசம் ... காட்டியோர்
என் ஆத்மாவின் ... சுவாசமாய் .
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் நட்புள்ளங்களாய் ....
வாழ்கின்றோம் ஓர் இதயத்தில் ....
ஓட்டிப் பிறந்த சிசுக்க்களாய் ....

நட்புள்ளங்களின் ஆழம் அறியோம்
ஆதலால் ..
தோழி அன்று உன்...
மனதினில் நான் பூவாய்.....
மணந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
மனமின்றி -
எனை நேசித்து வளர்த்தாய்
தோழி -
உன் உறவு
இன்று -
என் மனதில் முற்றுப் பெறாத வினாக்களாய் ...?
குணம் மாறி போகும் இதயத்தின் மன நிம்மதி இல்லா வாழ்வு இல்லறம்  தனிமையில் வாழ்ந்து பாருங்கள், விட்டுக் கொடுத்து நடந்து பாருங்கள், இரு உயிர்கள் ஒன்றாய் இருந்து மனம் விட்டுப் பேசுங்கள் வாழ்க்கையில் சந்தோசத்தை தேடிப்பாருங்கள்,  கவலைகளைதட்டி விடுங்கள் நிம்மதியை தேடுங்கள் ,  வாழ்க்கை இதயத்தின் நிழல் கொஞ்சம் ஆறுதல் கொடுங்கள் உங்கள் நினைவுகளை சிறகடிக்க விடுங்கள்,  மனதில் சந்தோசம் அடையுங்கள், ஒரே மனதுக்குள் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்  சந்தேகத்தை விரட்டுங்கள் உண்மையைப் பேசுங்கள், வாழ்க்கையில் , நம்பிக்கை வையுங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுங்கள் ...  இவை அனைத்தையும் செயலில் செய்து பாருங்கள் இல்லறம் உங்களுக்கு நல்லறமாகும் ...!