திங்கள், 23 ஏப்ரல், 2012

சகீ ..,
ஒவ்வொரு சுவாசங்களும்
உன்னை மூச்சுக்களாய் சுவாசிக்கின்றது .
பாசத்தோடு நினைக்கின்றது

நான்
உன் மூச்சு
என்னை நீ விட்டாலும்
மீண்டும் சுவாசித்துத்தான்
வாழ வேண்டும்...
சகீ ..
உன் மடியில்
என் கண்ணீர் துடைக்க
சோல் கொடு
அல்லது
தோள் கொடு ....!
திரு மறையே
தினம் தினம்
உன்னை
ஓதி ஓதி
மனமகிழ்ந்து வாழ ஆசை.


அதனால்
ஐந்து நேரத் தொழுகையிலும்
அருளாய் பொழிகின்ற
இனிய மறையில்
பல ஸூசுக்களை மணனம் செய்தேன்

அந்த மறைக்குள்
நுழைய ...நுழைய
மன ஆறுதல் அதிகம் ....!
அல்ஹமதுலில்லாஹ் ....
மனதுக்குள்
கற்பனைகளின் தூறல்கள் .

சிந்திய துளிகளை
சேர்த்து
சேமித்து குடமாக்கும்

பேனா எழுதியதில்
கண்கள் பார்க்கும்
மனங்கள் மகிழும்

கதையும் கவிதையும்
விமர்சன மொழி பேசும்.
பத்திரிகைச் செய்திகளில்
மின்னலும் தோன்றும் !

இதயக் கடலில்
சூரியன் குளிக்கும்.

மானம் இழந்த
அலையெனும் கன்னி
முத்தம் கொடுத்து
கரையை தடவிக்கொள்ள‌
அந்தி பூத்து
கவி வீசும் ...இது
நறுமணப் பூக்களின்
புதுக்கவிதை வாசங்கள்

இனிப்பில் மொய்க்கும் ஈக்களாகி
உடம்பை குழைத்த‌து

விரட்டும் வ‌ண்ண‌ம்
அடிம‌ன‌ இதயத்தை
வ‌ருடிக்கொடுக்கும்
அன்பு -
விரிந்து பரந்து
உறவைச் சுமக்கும்

நட்பின் சுரப்புகள்
மனங்களின் வழியே
பாசம் தெரியும்....
அன்பு தெரியும்...
ஆழம் தெரியும்...
அவள் முகமும் தெரியும்....

அவள்
நேசித்த வரிகளோ
பொங்கி வழிந்தது
கவிதை முகம்


ஒரு கவிதை விழுந்த‌தில்
அந்த பேனா கூட‌
காணமல் போனது ...!
தோழி உன்னைக் கண்டா லென்ன
காணாமல் வந்தா லென்ன
இதய வானின் உதயத்தின் சுடர்
உள்ளத்தின் உறவு என்ப தாலே
நட்பினை மதித்து வாழும்
பாசமே நினைவுகளின் சுவாசமாவர்
அன்பென இணை வொமாயின்
அருளினை பெறுவோம் நாமே...
அன்பை நினைத்தவுடன் பெற முடயாது.
ஆனால் அது ஒருவரை உயிராய் நேசிக்கும் ...!
சகீ
உன் மனதில்
என் இதயம் உறங்க
இடம் கொடு...!