வெள்ளி, 5 ஏப்ரல், 2013



புழுதில் புரழும் 
வாழ்க்கையென்று 
நினைத்து விடாதே 

மண்ணில் பிறந்தே 
மனித வாழ்வு 
என்று நினைத்துக் கொள்


வெயிலின் சூட்டால் 
உடலின் குருதி கொதித்து அலறுகின்றது 

விரும்பினாலும் 
விரும்பாவிட்டாலும் 
பரவிவிட்டநெருப்பைப் போல் 
அது பற்றி எரிகின்றது 

குளிர்காலம் 
கிழக்கு மண்ணை எட்டிப் பார்க்கவில்லை 
என்றாலும்
புழுக்கம் அதிகமாக இருந்தது
வியர்வையின் நீர்த் துளி

சூரியனின் ஒளிக் கதிர்
என் உடலினை தழுவுகிறது (கழுவுகிறது )

வங்கால விரிகுடா மண்ணில்
மெல்லுடலியின் மீது விழும் அலைத் துளிகளாய்
படுகிறது கச்சான் காற்று

கடற் கரையில்
செத்து விழும் மீன்கள்
இன்னொருவாழ்வினை தரிசிக்காமலே
மனித ஜென்மங்களுக்கு உணவாக்கப் படும்

நிலத்தை உறிஞ்சும் வேர்களின் நுனிகளாய்
என் ஆன்மாஈரமாக்கப் போகிறது.

வெயிலோடு
கலந்து விடும் தலைவலி
ஒரு பெண்ணின்உடலை
நோவிக்கிறது

வாசம் வீசும் பூக்கள்
தம் தண்டுடல்களைக் காப்பாற்றிக்கொள்ள
உமிழ் நீரின் அல்லது (சிறு நீரின் )துளிகளை
உறிஞசி யெடுக்க துடிக்கின்றன

நான் பிறந்த மண்
சஹாரா பாலை வனமாகியது

என் மனம்
சந்தோசமற்று தொலைகிறது

சூரியன் மறைகின்றன
இருள் நேரம்
தடவும் இரவுகள்

ஒவ்வொரு விடியலும்
தினமும் இனிப்போடு சேரும் நீரழிவு நோய் போல
புதிய வேதனையோடு தாக்குகிறது !
















யாசித்துப் பெருவதல்ல அன்பு 
நேசித்துப் பெறுவதே அன்பு

நட்பு















பல்லாண்டுகள்
மூச்சுக்களாய்
சுவாசித்துநேசிக்கிறேன் .

யாரோ
போட்டி

பொறாமையின் வடிகால் வெடித்து விடுகிறது

கொஞ்சம் பொறுமையாய்யிருங்கள்

மேடு, பள்ளம், ஆறு ,குளம் குட்டைகள் எல்லாம் வெள்ளமாய் ஒடி வருவேன்

மனதையும்
மனித நேயத்தையும்
உள்ளத்து உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
அணை போட்டு அடைத்தாலும்

உடைத்தெழும் (உடைத்தோடும் )
உறிஞ்சி யெடுக்கும்
விரும்பியவற்றை ...!







திங்கள், 25 மார்ச், 2013

கள்ளம் கபடம் இல்லாத .. 
உறவைத் தேடு !

அன்புக்காக உறவைத் தேடு!

ஆனால்.......

இதயமே இல்லாத உறவைத் தேடாதே!

அன்பில்லாத இதயத்தை தேடாதே

ஏனெனில்

ஆயுள் வரை உன்னால் கலங்க முடியுமா ..?

சுமையை தாங்க முடியுமா ...?
உடலையும் உயிரையுஞ் சேர்த்து - நல்ல 
விண்ணையும் பூமி மண்ணையுஞ் சேர்த்து
அருள் மறை திருக் குர் ஆணில் 
அற்புதவசனங்களை இறக்கி வைத்தான் இறைவன் ...!
என் வயசு என்னை விட்டுப் போகலாம் 
என் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல்........
ஆனால், 
என்னுள் வாழும் ..
உங்கள் நினைவு 
என் இதயத்தில் 
தாயே 
வாழ்ந்து கொண்டு இருக்கிறது வளந்து கொண்டு இருக்கிறது !