வெள்ளி, 5 ஏப்ரல், 2013





நான் பரிமாறிக்கொண்ட
சந்தோசத் துளிகளை விட
இன்று நான்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்
மிகவும்-
பெறுமதி வைந்தவை !


சிறு வயதில்
பெற்றவர்களைப் பிரிந்தே 
படிப்பதற்காய்
விடுதி வாழ்க்கை !

வாழும் பருவத்தில் 
பெற்றவர்களை இழந்து 
புலம்பி வாழும் மனசு 

வாழ்க்கை வேதனை தான் 

கொஞ்சம்
கொஞ்சமாய்
நகர்கின்றன
ஆத்மாவின் துடிப்புக்கள்
வயதின் எண்ணிக்கைகள் !

என்னாச்சு
என்று கேட்கிறார்கள்
மனசு
பனிக்கட்டி போல
துயரம் வந்தால்
கரைந்து போய்விடும் !







கண்ணுக்கு காணாத தென்றல் காற்று
வீட்டுக்குள்ளிருக்கும்
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று
முற்றத்தை நோக்கி பாய்கிறது.

மரக்கிளைகளை தேடி
அலைகிறது காற்று.

புழுக்கத்தின் தாக்கம்
வியர்வையின் கசிவு

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை.

நாவில் வறட்சி
தாகத்தில் உமிழ் நீர் வற்ற
தொண்டை அழுது துழாவுகிறது.

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட
ஒரு மண்ணறையை நோக்கித்தான்

நிம்மதியற்ற தேடலாய் வாழ்க்கை
நிலையற்றுக் கிடக்கின்றன
 


புழுதில் புரழும் 
வாழ்க்கையென்று 
நினைத்து விடாதே 

மண்ணில் பிறந்தே 
மனித வாழ்வு 
என்று நினைத்துக் கொள்


வெயிலின் சூட்டால் 
உடலின் குருதி கொதித்து அலறுகின்றது 

விரும்பினாலும் 
விரும்பாவிட்டாலும் 
பரவிவிட்டநெருப்பைப் போல் 
அது பற்றி எரிகின்றது 

குளிர்காலம் 
கிழக்கு மண்ணை எட்டிப் பார்க்கவில்லை 
என்றாலும்
புழுக்கம் அதிகமாக இருந்தது
வியர்வையின் நீர்த் துளி

சூரியனின் ஒளிக் கதிர்
என் உடலினை தழுவுகிறது (கழுவுகிறது )

வங்கால விரிகுடா மண்ணில்
மெல்லுடலியின் மீது விழும் அலைத் துளிகளாய்
படுகிறது கச்சான் காற்று

கடற் கரையில்
செத்து விழும் மீன்கள்
இன்னொருவாழ்வினை தரிசிக்காமலே
மனித ஜென்மங்களுக்கு உணவாக்கப் படும்

நிலத்தை உறிஞ்சும் வேர்களின் நுனிகளாய்
என் ஆன்மாஈரமாக்கப் போகிறது.

வெயிலோடு
கலந்து விடும் தலைவலி
ஒரு பெண்ணின்உடலை
நோவிக்கிறது

வாசம் வீசும் பூக்கள்
தம் தண்டுடல்களைக் காப்பாற்றிக்கொள்ள
உமிழ் நீரின் அல்லது (சிறு நீரின் )துளிகளை
உறிஞசி யெடுக்க துடிக்கின்றன

நான் பிறந்த மண்
சஹாரா பாலை வனமாகியது

என் மனம்
சந்தோசமற்று தொலைகிறது

சூரியன் மறைகின்றன
இருள் நேரம்
தடவும் இரவுகள்

ஒவ்வொரு விடியலும்
தினமும் இனிப்போடு சேரும் நீரழிவு நோய் போல
புதிய வேதனையோடு தாக்குகிறது !
















யாசித்துப் பெருவதல்ல அன்பு 
நேசித்துப் பெறுவதே அன்பு

நட்பு















பல்லாண்டுகள்
மூச்சுக்களாய்
சுவாசித்துநேசிக்கிறேன் .

யாரோ
போட்டி

பொறாமையின் வடிகால் வெடித்து விடுகிறது

கொஞ்சம் பொறுமையாய்யிருங்கள்

மேடு, பள்ளம், ஆறு ,குளம் குட்டைகள் எல்லாம் வெள்ளமாய் ஒடி வருவேன்

மனதையும்
மனித நேயத்தையும்
உள்ளத்து உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும்
எதிர்பார்ப்புக்களையும்
அணை போட்டு அடைத்தாலும்

உடைத்தெழும் (உடைத்தோடும் )
உறிஞ்சி யெடுக்கும்
விரும்பியவற்றை ...!