வெள்ளி, 5 ஏப்ரல், 2013



என்னைப் பற்றி பேசாதே 
உலகமே உன்னை பற்றி பேசுகிறது


கவிஞன் பிறந்து வளர்கின்றான்.
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன.



உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது 
இதயத்தின் உணர்வுகள் 

வயிற்றுப் பசியின் கொடுரம் 
குடல் சுருங்கி அழுகிறது 
வறுமையின் வெளிப்பாடு 

பட்டம் பதவி கௌரவம் 
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு


ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !

இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம் !

பணத்தைப் போல்
குணம் மாறும்
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!

வசதியில்லையென்றாலும்
மனிதனாய் வாழ்கின்றாகள்
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும்
சுவையாக உறிஞ்சப் படுகின்றது
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )




நான் பரிமாறிக்கொண்ட
சந்தோசத் துளிகளை விட
இன்று நான்
சிந்தும் கண்ணீர்த்துளிகள்
மிகவும்-
பெறுமதி வைந்தவை !


சிறு வயதில்
பெற்றவர்களைப் பிரிந்தே 
படிப்பதற்காய்
விடுதி வாழ்க்கை !

வாழும் பருவத்தில் 
பெற்றவர்களை இழந்து 
புலம்பி வாழும் மனசு 

வாழ்க்கை வேதனை தான் 

கொஞ்சம்
கொஞ்சமாய்
நகர்கின்றன
ஆத்மாவின் துடிப்புக்கள்
வயதின் எண்ணிக்கைகள் !

என்னாச்சு
என்று கேட்கிறார்கள்
மனசு
பனிக்கட்டி போல
துயரம் வந்தால்
கரைந்து போய்விடும் !







கண்ணுக்கு காணாத தென்றல் காற்று
வீட்டுக்குள்ளிருக்கும்
என்னை
எப்படி தடவிச் செல்கிறது ..?

உடம்பு இன்னும் இன்னும் தடவு யென்று
முற்றத்தை நோக்கி பாய்கிறது.

மரக்கிளைகளை தேடி
அலைகிறது காற்று.

புழுக்கத்தின் தாக்கம்
வியர்வையின் கசிவு

பாதங்கள்
காணல் நீரைத் தேடி -
பாலைவனத்தில் தவிப்பதே வேலை.

நாவில் வறட்சி
தாகத்தில் உமிழ் நீர் வற்ற
தொண்டை அழுது துழாவுகிறது.

இந்த வாழ்க்கையின் நகர்வுகூட
ஒரு மண்ணறையை நோக்கித்தான்

நிம்மதியற்ற தேடலாய் வாழ்க்கை
நிலையற்றுக் கிடக்கின்றன