வெள்ளி, 5 ஏப்ரல், 2013



சகீ 
மனசு 
அன்பைத் தேடும் 
அனால் - 
அன்பு 
மனசைத் தேடாது ..!


மனிதப் படைப்பில் பல விதமான குணங்களும் 
சேர்ந்தது தான் உலகம்

அணுகுண்டை விட மோசமான ஆயுதம் தான் பொறாமை


என்னைப் பற்றி பேசாதே 
உலகமே உன்னை பற்றி பேசுகிறது


கவிஞன் பிறந்து வளர்கின்றான்.
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன.



உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது 
இதயத்தின் உணர்வுகள் 

வயிற்றுப் பசியின் கொடுரம் 
குடல் சுருங்கி அழுகிறது 
வறுமையின் வெளிப்பாடு 

பட்டம் பதவி கௌரவம் 
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு


ஏழைகளின் புள்ளடிகள் 
எதிர்பார்ப்போடு போடப்படுகின்றது 
பயனடைவது அரசியல்வாதி !

பொய்வாக்குறுதிகளை 
மழையாய் பெய்கின்றாகள் 
கிராமத்து எம்பிகள் !

இஸ்லாத்தில்அச்சுறுத்தல் 
மனதில் பதட்டம்
மனிதாபமற்றவர்களின் வெறித்தனம் !

பணத்தைப் போல்
குணம் மாறும்
சிலரது வசதி இருக்கும் வரைக்கும்!

வசதியில்லையென்றாலும்
மனிதனாய் வாழ்கின்றாகள்
ஏழை எளியோர்கள் !

கஷ்டப்பட்டு உழைத்தாலும்
சுவையாக உறிஞ்சப் படுகின்றது
நோண்டும் கரங்களின் குருதி (தேநீர் )