வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வாழ்க்கையில்
நிலைத்திருக்க வேண்டிய
மாபெரும் சொத்து 
பொறுமை ..!
உன்னை மறந்த
நினைவுகளை 
என்னால் சுவாசிக்க முடியாத போது 
என்னை மறந்த நினைவுகளை 
உன்னால் -
எப்படி சுவாசிக்க முடியும்
அன்பைத் தேடி 
கண்கள் -
அழுவதை விட 
இதயம் துடிப்பது அதிகம்












உன்னை 
தேடி தவிக்கின்றேன் 

சகீ -

கனவிலாவது உன் 
தரிசனம் கொடு..!
எனக்கு !
நீ
எதிர் பார்க்கும் அளவிற்கு 
எனதன்பு -
தூரமாக இருக்கலாம் 

அனால் -
உன்னன்பை நேசிக்கும் 
அளவிற்கு -
உயிரானவள்

உன் நினைவுகளின் 
அருகில் இருப்பவள்

உழைத்து உழைத்து நாமுந்தான் ஓட்டாய் தேய !
உளையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம் !
இழைத் தே நாம் இடுப் பொடிய ! ஈ ரம் மில்லா ..
இதயத்தார் இருந்துறிஞ்சி "மேலே "சென்றார் !

முதுகினிலே ! கூ டையினை தாங்கி நாமும் !
முது கொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்ந்தோம் 
புது வாழ்வு ! நாம் கண்டதில்லை !
புல்லர்கள் வாழ்வுக்கே ! உரமாகிப் போனோம் !

ஓட்டை'லயம் 'தானெமது உலகும் வாழ்வும் '
உழைப்புத் தான் உயிரெமக்கு !ஓய்வோ தூக்கம்
காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
கனவுகளோ ! கண்ணீரில் கரையக் கண்டோம் !

மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க !
மணி மணியாய் வியர்வையினை வடித்து தந்தோம்
நிலை மாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
நின்மதியாய் வாழும் நாள் எனறு பூ க்கும் !

தொப்புள் கொடி உறவு தந்த
பாசம் எங்கு போனது ?
உடன் பிறப்பைத் தேடிச் சோர்ந்து போய்
துயரம் மனதில் துடிக்குது

உறவு மகரந்தத்தை உறிஞ்சிக் கொண்டு
வண்டு எங்கு பரந்தது ?
பச்சோலையை அறுத்துப் போடுவதற்காய்
புதிய தென்னை தேடுது !

நேசித்த இதயத்தை பிரித்த பின்னர்
பொறாமை எங்கு போகுது?
பொய்க்காக வாயை திறக்கும்
நாவு ருசிக்க பழியைத் தேடுது !

விட்ட மூச்சு சுவாசிக்கும் காற்றில்
வயது எங்கே போகுது ?
புதை குழியில் வாழ வேண்டித்
நல்லமல்களை தேடுது !