வியாழன், 9 மே, 2013


மரம் வளர்க்க முன் 
மனித நேயத்தை வளர்ப்போம்

புரிந்து வாழ்வதை விட 
புரியாமல் வாழ்ந்து போவதே சிறந்தது


நம்பினோர் கெடுவதில்லை
நம்பினோரை கெடுத்தவர்கள்........?



புதைக்கப்பட்ட சில மனிதர்களின் அசிங்க விதைகளில்இருந்து தான்
மண்ணின் மேல் மனித நேயம் நச்சு மரங்களாய் வளர்கின்றது


ஒரு மன இறுக்கத்தையும் மாற்றிடும் சக்தியாக, 
மனக் கவலைகளைப் போக்கிடும் மருந்தாக 
புன்னகையும் சிரிப்பும் மனதோடு நிலைத்திருக்கவேண்டும்


வாழ்வில் வெற்றி மதிப்பை பெற்றுத் தரும் 
தோல்வி வாழ்வதற்கு பாடம் கற்றுத் தரும்


இரவும் பகலும் மாறும்பொழுது 
மனிதணும் மனமும் மாறத்தான் செய்கிறது