திங்கள், 18 நவம்பர், 2013
என் உறவு .....!
அன்பு நிறைந்திட பாசம் காட்டிடத் தோழியானாள்
மனதில் நுழைந்தவள் உயிரினில் கலந்திடும் குருதியானாள்
உண்மை நட்பு நெருங்கிட சுடர் தரும் சூரியனா னா ள்
மனம் குளிந்திட பாசம் காட்டிட்டும் அன்னை யானாள்
துன்பம் துளைந்திட இனிமை த ந்திடும் உயிரானாள்
கவிதை எ ழுதிட மனதை தூண்டிடும் கு(க )ருவானாள்
கருணை கா ட்டியவள் சகலமு மறிந்தவள் முக நூலில்
அன்பு தொடந்திட இனிது மகிழ்ந்திடும் என்னுற வானாள்
ஞாயிறு, 29 செப்டம்பர், 2013
மீட்டெடுப்போம் ..
துடித்து மடியும்
அப்பாவி உயிர்களை
காப்பாற்றும் பணியில்
தவமாயிருக்கும்
ரஷ்யா நாட்டவரே ...
இந்த குழந்தைகளின்
பிரிவுத் துயரினைப் பார்த்து
போராட்ட தளத்திற்கு
விரைந்து வாருங்கள் !
அமெரிக்காவின் தோழமையுடன்
சகாவாசம் வைத்திருக்கும்
கொடூர வல்லரசுகளுக்கு
உயிரின் பெறுமதியை
செயல்களால் காட்டுவோம் ..!
சிரியா நாட்டில்
அங்கவீணர்களாயிருக்கும்
அப்பாவிமக்களை
காப்பாற்ற பிராத்திப்போம்
உயிர்களை கொலை செய்கின்ற
படு பாவிகளுக்கு
உணர்வுகளின் வலியினை
வேதனைகளாய் கொடுபோம் ..!
எங்கள் உறவுகளில்
இருக்கையை போட்டமர்ந்துள்ள
ஒட்டுண்ணி விரோதிகளை
அடித்துத் துரத்திடுவோம்
அப்பாவி உயிர்களிருந்து
குருதி நீரைப் பிழியும்
மனிதாபிமானமற்றவர்களே ...,
உயிருக்காய் போராடி
அவலக் குரலெழுப்பும்
அப்பாவி உயிர்களை மீட்டெடுப்போம் ..!
தலைக்கனம்பிடித்த மனித நேயமற்ற
தலைவர்களை -
ஆட்சியில்லாமல்
,வல்லரசுகளின் கைப்பிள்ளைகளாயிருக்கும்
துரோகிகளை
காப்பாற்றுவோம் ..!
வாழ்வதற்கும்
சாவுவதற்கும் ...வழி
காட்டிக் கொடுக்கும்
அக்கிரமக்காரர்களுக்கு .
இறைவனின் விலாசத்தினை
விசாலப் படுத்துவோம் ..!...
பணப் போர்வைகளிலுள்ள
பாவிகளுக்கு -
அடிமைச்சேவகம் புரியும்
கொலைகார நாடுகளை
விடுதலை செய்விப்போம் ...!
இஸ்லாமிய மண்ணின்
இனிய பிறப்புக்களே..., ...
அருள் மறை
அல் -குர்ஆனை ஓதி
அல்லாஹ்விடம் தூஆ கேளுங்கள் ..!
திருந்தாத உள்ளங்களினால்
துருப்பிடித்துபோன்
இரும்பு உள்ளங்களுக்கு
ஐந்து நேர அதான் ஓசை
ஆரோக்கியம் கொடுக்கட்டும் ..!
சிரியா நாட்டு
அகதிகளுக்கு -சவூதியாவது
குவைத்தாவது ...
கட்டாரவது ...
.ஈரான் -ஈராக்காவது ..
உதவிகள் செய்யட்டும்...!
மக்களை பிடிக்கும்
போட்டி பொறாமைகளுக்கும் ....
நய வஞ்சகததனத்திற்கும் .
இஸ்ராயிலின் பணிக்கு
அல்லாஹ் -
சுனாமியைக் கொடுக்கட்டும் ...!
அழிவைக் கொடுக்கட்டும்
நாசமாய்போகவைக்கட்டும் ..!
இனிமேலாவது -
இந்த -
தாய்யுள்ளங்களின்
பிறப்பின் வலி புரிந்தாவது
மானிட ஜெனமங்கள் திருந்த்ட்டும்..!
இதயங்கள் திறக்கட்டும் ...!!
நிலையற்ற வாழ்வினை உணரட்டும் ....!!!
புனிதம் மணக்கும் ஹஜ்
மண்ணாக வாழ்வில் முஸ்லிம்
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜு க்கு முண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!
பாவத்தை யகற்றி நெஞ்சை
பா வென மாற்றும் ஹஜ்ஜை
தாபமாய் தரிசித் தோர்கள்
தரணியில் ஹாஜி யாவார்
இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்போர் ஹஜ்ஜில் தானே
சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே
ஆடைகள் புதிதாய்ப் பூண்டு
அகத்தினில் மலர்ச்சி பூண்டு
வாழ்வோருக் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே
ஸம்ஸம் தண்ணீர் மாற்றிப்
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ த்திடும் ஹஜ்ஜே வாழி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





