ஞாயிறு, 13 ஜூலை, 2014

சுவர்க்கத்தின் பாதம் ..!



கருவறையிலிருந்து
கபூறறை வரை
தொடரும்உறவுஉம்மா ..!!

என் வாழ்கையின் 
சுவர்க்கத்தின் பாதம்
எ ன் உயிரின் மறு பாதி உம்மா 


கவி வடிக்க 
எனக்கு 
கரு தந்தவள் உம்மா 

ஆயுள்
சுருக்கத்தைக் கொடுத்து விட்டாய்யா   அல்லாஹ் 
என் மன -
சுமைகளையும் இறக்கிவைப்பாய் நீயே..!


இன்று அகில உலக அன்னையர் தினம். 

தாய்மைக்கு மகிழும் உலகம் போல் 
தாய்க்கு மகிழ்ச்சி அன்னையர் தினம்.
வாழ்த்துகள் வாழ்த்துக்கள் அன்னையர் எல்லோருக்கும் !

கடந்த காலங்கள்


மூச்சுக் காற்றில் 
சுவாசமாய் போய் விட்ட 
என் -
கடந்த காலங்கள் 
இன்றும் ...
என்றும் 
எப்போதும் 
இளமையானவை
பசுமையானவை 
இனிமையானவை 
மறக்கமுடியாதவை !

மரச்செடியினுள்ளே 
மொட்டாகி விட்ட என் 
வயதுப் பூக்கள் நாட்பத்தி நான்காவது 
இதழ்களை விரித்தபடி 
நாட்பத்தைந்தில் 
பழமாகின்றது
இந்த -
கோடை காலத்துப் பழங்களைப் போல 

சனி, 12 ஜூலை, 2014

எப்படி எப்படி தாங்கிக் கொள்ள ...?




ஒவ்வொரு பொழுதும்
வாழ்வா …? சாவா ..? எனும்
உள்ளத்தின் கேள்விகளுக்கு 
விடை சொல்லமுடியாமல் ,


உடம்புக்கு தெம்பூட்டி 
மருந்து  ஊட்டி 
பொறுமை  காத்து
பேனை பிடித்து எழுதும் 
நான்-
எழுத்தாள(ர்)றென்று ...!

மா கவி பாரதி



தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல   
பாவினை ஊட்டினான் மனங்களிலே 
சுவையுடன் கவி பாடினான் -தமிழ் 
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப்  படைத்தான் - கெட்ட 
சாதி பேதங்களை மாற்றினான் 
உழைத்து வாழப் பாடினான் -வீணே 
சோம்பரியாய்  கிடப்போரை விரட்டினான் 

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை 
உயர்வாய் மதித்து போற்றினான் 
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ் 
பற்றின் உயர் வினைக் கூட்டினான் 

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை 
மதித்து நின்று வாழ்த்தினான் 
மண்ணின் மாணிக்கம் அவளென்று --தினம் 
 பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு 

அடிமைத் தனத்தை சாடினான் 
நாட்டின் நடப்புக்களையும் பாடினான் 
சாவுக் கஞ்சாது எழுதினான்  -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான் 

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே 
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த 
மா கவி பாரதி விண்ணிலே ....

வேதனை



தொடரும் வியாதி 
தடவும் வறுமை 
 உயிருக்கு போராடும் உடம்பு  

கண்ணீர் பஞ்சம்
காண்பது அரிது
உடம்பில் வழியும் வியர்வைத் துளி 

உணர்த்திச் செல்கிறது
பணம் 
வாழ்க்கையில் நிறைவேறா கனவுகள்  

உள்ளத்தில்ளிருக்கும் வேதனை 
புரியாமல் வாழ்கிறார்கள்
சோதனையின் சாபம் 

யா அல்லாஹ் ...!



கருணை உள்ளமாய் என்னை படைத்தாய் 
யா அல்லாஹ்  
நன்றி செலுத்திடல்  வேண்டும் 
என் மனமாற உன்னை நினைத்து தொழுது 
 
பிறப்பிலே தந்திட்டாய் முஸ்லிம் நாமம் 
மார்க்கத்திலோ பற்றுள்ள மனசு 

அருள் மறை திரு மறையில் உலகின் அத்தாட்(ச்)சிகள்  
தஜ்விதாய் ஓதிட  அவை மனதில் 
நிச்சயம் கிடைக்கும் பயன் (பலன் )
உலகம் உள்ளவரையில் 
 
உள்ளத்தில் வஞ்சகமில்லா அன்பு 
ரத்த நாளங்களிலே பாசத் துடிப்பு 
மெல்லிய் இதயமென என் உள்ளத்து உணர்வு  
குறை யேது மின்றியே பொழியுது 
நபி வழியே  சுவாசிக்கும் மூச்சு 
 
கருணை உள்ளமாய் என்னை படைத்தாய் 
யா அல்லாஹ்....!
நன்றி செலுத்திடல்  வேண்டும் 
என் மனமாற உன்னை நினைத்து 

திங்கள், 2 டிசம்பர், 2013

கவி பாடினான்




தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று –என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ..