ஞாயிறு, 13 ஜூலை, 2014


வாழ்ந்து பார்க்க ஆசை 
மரணம் 
தடவிச்கொள்ளும்  வாழ்க்கை 

உலகம் தான்
புரியவில்லை
எப்படி மதிப்பீடு செய்வது ...?

மனித உயிர் 
வாழும் வயிறு 
பாரமில்லை சுமப்பதற்கு  

இறைவன் அருள்
கருவின் உருவம் 
புரிவதில்லை மானிட பிறப்பு !

சூரியன் உதிக்கும்  வரையில் படுத்துக் கிடந்தால்விரைந்து தடவும்  தரித்திரம் ...!



விடியும் முன்பு எழுந்து தொழுதால் சுடராய் உதிக்கும்  (தடவும் ) அருள் !

காலத்தின் கோலம் !



பிறப்பு -இறப்பு
ஒருமுறை
ஓராயிரம் போராட்டங்கள்…!
காலத்திடம்
வயதினை ஒப்படைத்துக்
பழுத்துச் செல்கின்றன முடிகள் ..!
ஒவ்வொரு வெள்ளை முடிகளுக்குள்ளும் நகர்கின்றது
நிகழ் காலத்தின் ஆயுள்
சொந்தமாக்கிக்  கொண்டோம்
வாழ்வு
மின்னலாய் மறைகின்றது ..1
காலத்தின் கோலம் !
அவரவர் வயசு அடிப்படையில்
அவரவர் வாழ்வின் மறைவு ..!

காலத்தால் அழியாத கலை ..!




சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை 

தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப் 

பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின் 

கண்ணிரண்டும் காதற் கயல் !


சோலைக் கிளியைச்  சூவென்று நானோட்டும் 

சேலையுடுத்த   கிளி செவ்வந்தி -ஆளை 

மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள் 

நயந்தொழுகும் அவை நின்று நரை !


சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !

வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை 

இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது 

எது வென்று புரிய வில்லை ஏம !


வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை 

கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக் 

கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள் 

அருங்காதல் நெஞ்சத்து அலை !


வெடித்த வெள்ளரியின் விதை போன்ற   பற்சிரிப்பு !

கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த 

ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும் 

காலத்தால் அழியாத கலை ..!

மனதின் வலி



அந்த முள்ளி வாய்க்கால் கனவுடனே வரும் சுசியுடைய 
நினைவினூடே நான் நடக்கையில்
அதிசீக்கிரத்தில் மாறாது  மனதின் வலி.

அன்பின் தோழியாக இருந்த உறவின் 
நெருக்கத்தில்  இழப்பின் தாக்கம்.

நாடி நர்ம்புகளுடனே  ஓடிய  
குருதி யோட்டங்களுக்குப் 
பின்னால் உயிருக்கு
வழிவிட்டு 
முள்ளி வாய்க்காலில்  நான்.

தாமதமாகத்தான் தெரிந்தது அது
தாக்குதலிருந்து கசிந்து போனது 
நான் ஊட்டிய என்  சுசியுடைய 
ரத்த வாடை என்று....!

பிராத்தனை துளிகள் ..!





பிறந்து வாழுகின்ற உயிர்களின் எதிர் பார்ப்புக்கள்
இறந்து போகின்ற உள்ளங்களின் வேதனைகள்
வேடிக்கைப் பார்க்கின்ற இரக்கமில்லா ஜீவங்கள் ..!
உயிரற்ற சடலத்தை சுமப்பதற்கு
நான்கு தோள்கள் கரம் கொடுக்க
மறுமை வாழ்வை நிலையுருத்தி நிற்கும் மரணம் ..
பிறப்பும் இறப்பும் இணைந்துவாழும் வாழ்க்கை .
நிலையற்ற நினைவுகளைஉறிஞ்சியெடுக்கின்ற மனசு
எல்லாம் மறைகின்றன இரவு பகல் மாற்றங்களில்
இஸ்மாயில் நபியின் தாகத்தை தீர்க்க ,
ஊற்றெடுத்த சம்ஷம் நீரினை குடிக்க
போட்டி போடுகின்ற நல்லடியார்கள் மத்தியில்
வாழ, எல்லையற்ற சோதனைகள் தொடர
பல நல்ல இதயங்கள் நொந்து மறைந்தனர்
அப்பாவி உள்ளங்கள் மானம் காத்து..
எத்தியோப்பிய மண்ணில்
எலும்புக் கூடுகளாய் வாழும் உறவுகளுக்கு
இதயம் பிழிந்தோடும் பிராத்தனை துளிகள் ..!