செவ்வாய், 22 ஜூலை, 2014


சகீ
நான்
இம் முறை -
பெருநாளைக்கு புதிய உடுப்பு
வாங்கவே மாட்டேன்

காரணம் -
காஸாவில்
என்
இஸ்லாமிய சகோதரங்கள் 
கபன் பிடவை வாங்கிக் கொண்டு உள்ளார்கள்

அத்தோடு -
பெரு நாள் அன்று
என்னுயிர் தாத்தா என்னை விட்டுப் பிரிந்து
40தாவது நாள் ..!

இறைவா
உன்னையே வணங்குகின்றோம்
உன்னிடமே
உதவி தேடுகின்றோம் ..!


மண்ணில் மனிதனாப் பிறந்து

உலகினைப் பார்த்தேன்

மனசு கலங்கத் துவங்கியது

மனிதனின் உயிர் இழப்புக்களைப் பார்த்து ..!

தென்றல்



காற்றுகள் பல வந்தும்
கலங்கிடாமல் நிற்கின்ற
ஆற்றலுள் ளொன் நானென்று
அகங்காரம் கொண்ட ஒரு
வாட்டமுள்ள ஆல மரம்
வாழை யொன்றை நோக்கியது !

சிறியவனே நீ இந்தச் 
செகத்தினிலே வாழ்ந்து விடும்
அரு கதையோ சில காலம்
அறிவாயோ என்று ரைத்துப்
பெருஞ் சத்தம் போட்டுத் தன்
பேரிரைச்சலைக் காட்டியது

வாழை மரமோ வாய்திறவா (து)
வருத்தமுடன் நிற்கையிலே
காலையிலே வீசிய புயற்
காற்றதனால் எதிர் நின்ற
அவவால மரம் விழுஞ் சத்தம்
அவ் வாழைக் கொலித்ததுவாம் !

குழந்தைகளின் உடம்பில்
இஸ்ரேலியர்களின் தாக்குதல்
உயிர் பலிகள்

ஆயிரம் ஆயிரம் இதயங்கள்
மன்ம்வருந்தியழுது பிராத்தனை
யா அல்லாஹ் .

குண்டுகள் துளைக்க
அப்பாவிகள் உடம்பு 
காஸாவில் .

உயிர் மரணித்து கிடக்கின்றது
பெருநாள் ஆடை என்பதில்
கபன் பிடவை மணக்கின்றது

எத்தனை முகங்களை பார்த்தவள் நீ
அத்தனையும் மாறும் நினைவிலிருந்தே - நேசமென
போலி யுறவுகளை நம்பாதே பேரழிவு சூழ்ந்திடும்;
நாடாதே நன்மையென்று உணர்.....!

ஞாயிறு, 13 ஜூலை, 2014



வாழ்க்கையின் எண்ணிக்கை  தலை மூடியில் 
தெரிகின்றது 
கருப்பின் நிறம் வெள்ளையின் மாற்றமாய் ...!


நட்பு புனிதமானது ! 
புரிந்துணர்வுடன் வாழும் வரையிலும்!!