ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
வேண்டாம் கண்ணே
என் உறவு உனக்கு
இல்லாமலே போகட்டும்.....!
என் நினைவு உன்னை
துயரங்களுக்கு தழுவிச் செல்லும்.....!
காணாமல் போன நினைவுகளை
எண்ணி எண்ணி
உன்னை நோவினை செய்யும்.....!
சொந்தமென்றும்
பந்தமென்றும்
பாசமென்றும்
பற்றுயென்றும்
உன் மனதை
அழிக்கச் செய்யும்....!
வேண்டாம் கண்ணே
என் தொடர்பு உனக்கு
இல்லாமலே இருக்கட்டும்.....!
என் உறவு உந்தன்
மனதினை மாற்றும்
சுகமான சுகத்தில்
ஒரு தீச்சுடராய் சுடும்....!
துயரங்களையெல்லாம்
உடம்பில் -
பாரமாய் சுமத்தும்
கலங்கமற்ற உள்ளத்தில்
தொடரும் சந்தோஷத்தை
பிணியாய் மாற்றும்!
அதனால் வேண்டாம்
கண்ணே.....!
என் உறவு
உனக்கு
தொடராமலே
நகரட்டும்....!
உருவம் சிதைந்திட்ட
உண்மைகள்....
கற்களைப் பூசி -
மறை வேதம் மறந்த
எழுத்து நர்த்தனங்கள்!
பொல்லாத வாதங்களிலும்
பொய்மையின் தழுவலிலும்
புளித்துப் போய்...
புழு அரித்துப் போன
பேச்சுக்கள்....
தகவல் தொடுத்ததே
அவரவர் -
தரங்களை நிர்ணயித்த
அசிங்கங்கள்!
'புதிய சக்தி'களைப்
புறக்கணித்தே எழும்
என் -
புதுமைத் தத்துவங்கள்!
இன்று உனது...!
நாளை எனதே!என்ற
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






