சனி, 12 நவம்பர், 2011

குற்றம் செய்யாத கைதிகள்
வீட்டில் -
முதிர் கன்னி ...!
நட்பு என்பது புனித வரமாகும்
தூய்மையாய் பழகி வாழு ...!
பொறாமை உள்ளத்தை வளர்க்காத இதயம்
சுகம் தரும் தென்றளின் தடவல் ...!
இலக்கியப் பணியை நேசிக்காத மனிதன்
பொழியும் அருளினை பெறாத மனசு
காதலையும் மனதையும் புரியாதோன் வாழ்வை
அரிக்கும் (அழிக்கும்) விஷக்கிருமி
ஏழை இதயத்தை பேணிக்காப்பான்
வாழும் படைப்புக்களில் உயர் மனசு ...!
தோழி ,
நான்
ஓயாது கிழம்பும்
கடல் அலையாய் ;
விடாது தொடரும்
... கண் இமைகளின் சிமிட்டள்களாய்:
சுவாசமாய் நகரும்
மூச்சுக்களாய்....... இருப்பேன்...!
நீ ,
மின்னலோடு தொடரும்
இடியாய் மாறினாலும்
நான் தாங்குவேன்,
எரிமலையாய் வெடித்தாலும் ,
விசப் புயலாய் மாறினாலும் ,
நிழ நடுக்கமாய் அதிர்ந்தாலும் தாங்குவேன்
ஏனெனில் ,
நான் உன்னுயிராக வேண்டும் ...!
நீ -
என்னுயிராக வேண்டும் ...!