சனி, 14 ஜனவரி, 2012

மண்ணில் மரணிப்பது மெய் ,ஆனால்
மரணித்தும் மறவாது பேசப்படுவது ,
அவன் விட்டுச் செல்லும் நூல் ..!
விட்ட மூச்சுக்களாய்,
நீ -
என்னை
நினைத்து விடலாம் 1
ஆனால் -
நான்
சுவாசமாய் உன்னில்
மூச்செடுப்பதை உணராமல்
நீ ..!
நல்லவை நினைத்தால் கேட்டவை அகன்றிடும் ,
தூய மனசுடன் வாழு ..!
நட்பைப் பெற்றிடப் பொய்மை உரைக்காதே
உறவை தொலைக்காதே - உந்தன்
பாசத்தை இழக்காதே ..!
நட்பு சுவாசம் தரும் மூச்சு -உறவை
வளர்த்தல் அன்பெனக் கூறு ..!
நட்பினை உயிராய் பேணு -நீ
அன்பினை தூய்மையெனப் போற்று ..!
துன்பம் ,துயரம் கோபம் போக்கு ,
தன் நட்பென நோக்கு ..!