திங்கள், 25 மார்ச், 2013
நயமடைவார்
ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செய லா ற்றுகிறான் -ஆம் !
இவ்வுல காளும் இறைவனோ நாம் செலும்
பாதையை மாற்றுகிறான் .
மனத்தின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் !-எக்
கணத்திலும் மனத்தை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான் !
முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே -மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே !
மனமோ ஆன்மாவுக்குள் ளிருக்கும்
சுதந்திரப் பொருளாகும் -அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்!
மனத்தைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் -நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !
கரையான்களாய் அரிக்கும் மனசு .....
பழுதுகலாக்கி விட்டு
சங்கிலித் தொடர்களாய் -
சந்தோஷம் கொண்டாடும் ..!
ஆனாலும் -
தூசுகளிடமிருந்தோ ....
தூள்களிடமிருந்தோ ....
எனக்கு -
எந்த வியாதிகளும்
தடவித் தரவில்லை அவை ...!
பார்த்தாயா.....?
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?
கண்களில் பட்டதா ...?
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?
மழை தூவுகிறது -
பொந்துகளில் ...!
அறிவு படைத்த மனிதன்
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!
சாதி மத பேதங்களில் .....
மானிடர் வாழ்வு
போராடுகிறது ...!
சொத்து சுகங்களில்
உயிர் -
பலியாகிறது ...!
உறவுகளின் போராட்டத்தில்
மனிதம் -
அழிகின்றது ...!
பகைவர்களின் எதிர்ப்புக்களில்
உரிமை -
இழக்கப்படுகிறது .....!
தோழியின் மனம் ,
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!
இதயத்தின் ஏக்கங்களோடு,
மனிதர்களின் செயல்களோடு -
காலத்தின் தரிப்பிலே ......!
மனிதர்களின் பகையிலே .....
துயரத்தின் உணர்வுகள் ....
உணர்வுகளின் தாக்கங்கள் ....
இடிபோல
முழங்கியெழும்....!
பட்டாசு போல
சிதரிப் போகும் ....!
சங்கிலித் தொடர்களாய் -
சந்தோஷம் கொண்டாடும் ..!
ஆனாலும் -
தூசுகளிடமிருந்தோ ....
தூள்களிடமிருந்தோ ....
எனக்கு -
எந்த வியாதிகளும்
தடவித் தரவில்லை அவை ...!
பார்த்தாயா.....?
எறும்புகளின் அந்த ஒற்றுமையை ..?
கண்களில் பட்டதா ...?
ஒன்றோடு ஒன்று சந்தித்து முத்தமிடுவது ....?
மழை தூவுகிறது -
பொந்துகளில் ...!
அறிவு படைத்த மனிதன்
யோசித்த வண்ணம் இருக்கிறான் ...!
சாதி மத பேதங்களில் .....
மானிடர் வாழ்வு
போராடுகிறது ...!
சொத்து சுகங்களில்
உயிர் -
பலியாகிறது ...!
உறவுகளின் போராட்டத்தில்
மனிதம் -
அழிகின்றது ...!
பகைவர்களின் எதிர்ப்புக்களில்
உரிமை -
இழக்கப்படுகிறது .....!
தோழியின் மனம் ,
ஏறும்புக் கூட்டங்களினூடே நகர்கிறது ...!
இதயத்தின் ஏக்கங்களோடு,
மனிதர்களின் செயல்களோடு -
காலத்தின் தரிப்பிலே ......!
மனிதர்களின் பகையிலே .....
துயரத்தின் உணர்வுகள் ....
உணர்வுகளின் தாக்கங்கள் ....
இடிபோல
முழங்கியெழும்....!
பட்டாசு போல
சிதரிப் போகும் ....!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)


