வெள்ளி, 5 ஏப்ரல், 2013





















ஒரு தாயின் பிறப்பு வலியின் மகிழ்ச்சியாய் 
எனக்குள் நுழைவதற்கு நீ

இருடலின் ஓருயிராய்
உட்புலன் உற்று 
கட்புலன் உணர்ந்து 
இயம்பும் உறவு
நெருப்பு தணல்கள் 
எரிந்துக்கொண்டேயிருக்கும்
பொறாமை உள்ளங்கள் 

பாசம் காட்டியும் 
புரிந்து விடவில்லை
சந்தேகம் 

போலி வார்த்தைகள் 
மானம் மரியாதை ஏதும் இல்லை
கையில் போதை (குடி வெறி )

சேவைகள் செய்யும் பேச்சு
பாசம் காட்டி பிச்சை கேட்டு வருகின்றது
அரசியல் வாதிகள்

யாசகம் கேட்டு வந்தவர்
முதலாளியானார்
அவரா இவர் ...?

தாகமென்று தேனீர்
அருந்திக் கொண்டுள்ளார்
பாட்டாளிகளின் வியர்வை

சுற்றி வளைப்பு
ஆட்டாக்கார்களின் தந்திரம்
பணம் சேகரிப்பு ...
துப்பிய உமிழ் நீரில் 
செழித்து வளர்கின்றது 
மனித நேயம்

வேதனைப்படும் மனங்கள் 
உடையா உணவா 
தொல்லை தரும் சமூகம் 

மார்க்க விடயத்தில் 
வாய் பேசா ஊமைகள் 
முஸ்லீம்அரசியல் வாதிகள்

தொழில்யில்லாப் பிரச்சினை
மாணவர்களின் போராட்டம்
மௌனமாய் அரசாங்கம்
பிரசவத்தின் .
உதயம் பிரசவமானாலும் சொல்லடிகளின் கதிர்கள் 
பிரகாசமாகும் போது மரணவலிகள் 
மாப்பிள்ளையின் -
உணர்ச்சிக்கு புரிவதில்லை ! தெரிவதில்லை!!
நான் 
பிறந்த மண்ணில் 
எப்போது சுந்ததிரமாய் 
வாழ்வேன் -
நிம்மதியாய் மூச்சு விடுவேன் ..?
வாழ் நாட்களில் 
ஏதோ சந்தோஷம் இல்லாத உணர்வு 
என்று -மண்ணில் 
நிம்மதி வரமோ ...?

ஆயுள் நாட்களின் நகர்வில் 
செத்துக்கொண்டிருக்கிறது
என் எதிர்பார்ப்பு 
இலட்சியம் 
கனவு 
மனசு 
இத்தியாதி !இத்தியாதி !!
அன்பின் வலியால் மனம் துடிக்க 

அழும் மனம் தந்தாய் -கண்ணீர் 

துளியால் இமயச் சிகரம் தாண்டும்

நினைவை தந்துவிட்டாய்!