திங்கள், 2 டிசம்பர், 2013

கவி பாடினான்




தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று –என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ..

திங்கள், 18 நவம்பர், 2013



சகீ
சூரியன் போல்
உன் -
அன்பை சுடராக
மாற்று ...!


தலைக்கணம் கொண்டு
தன்னைத் தானே
போற்றிப் புகழ்பவன்
சாதனை -
புரிவதற்கு
தகுதி அற்றவன் ..!


நண்பா
முக நூலை
மதிக்கா விட்டாலும்
பரவாயில்லை
அனால் -
அதில் உள்ள உறவுகளை
நீ
மதித்து நாட
மிதித்து நடந்து விடாதே ...!


ஆயிரம்
எதிரிகளுக்கு
மத்தியில்
நீ -
வாழ்ந்தாலும்
நீ நீயாகவே
இருந்து கொள் ..!


தோழி
உயிர்
பிரியும் -போதும்
திருக் கலிமாவை
உரத்துச் சொல்லு


அறிவுள்ளோருக்கு
சொந்தமானவை
நல்ல நண்பர்கள்
நல்ல நூல்கள்

பொறாமைக் காரர்களுக்கு
சொந்தமானவை
இழி மொழிகள்
தீய குணங்கள்

நல்லதை உணர்ந்து எடு
தீயதை அகற்றி விடு