ஞாயிறு, 6 செப்டம்பர், 2015


01-அல்லாஹ்வின் அருட்கொடை தனிலே அருளுண்டு
ரப்பில் ஆலமீன் ரஹ்மத்தாலே - நல்ல
வரங்கொண்ட வல்லோன் அருள்மறை ஓதுகின்ற
நாவல்லவோ தீனுல் இஸ்லாம் !


02-இல்மை கற்பிக்கும் இதயம் வேண்டும் இறைவனே 
அருளை தந்தான் அல்குர்ஆணை; இறக்கினான்
அறிவினை தொலைக்காதே அல்லாஹ்வை தொழுதுபார் !
சுஅரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !


03-
அரபா நாள் ! அல்லாஹ் தந்த ஹஜ்ஜு நாள் !

.மனம் மகிழும்நாள் ! மக்கா நகரில் 
மானிடர் வரவைக் கண்டு களிக்கும்நாள்!
எண்ணி லடங்கா ரஹ்மத் .

இறையின் சிறப்பு !


மகத்து மண்ணில் ஸம் ஸம் ஊற்றில்
நாவினை சுவைக்கும் நீர்!
மக்கள் நிறையும் மக்கமா நகரில்
ஹஜ்ஜினை நிறைவேற்றும் ஹாஜி
சபா மர்வாவில் ஓடும் தொங்கோட்டத்தில்
மாறிடும் வியாதியின் தொல்லை !
வெள்ளை ஆடையில் காபன் உடையில்
மரணத்தை நினைக்கும் உயிர் !
ஈமானிய நெஞ்சத்தில் இனிமையான உணர்வு
படைத்த இறைவனுக்கு நன்றி !
மறுமை வாழ்வில் மண்ணறை வாழ்க்கையில்
தெரியும் இறையின் சிறப்பு !

சனி, 28 பிப்ரவரி, 2015



உன் உயிரில்,
உன் உறவில்,
உன்சுவாசத்தில் ,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால்
யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக !

அவள்
மனசு எனக்கு தெரியாது
என் மனசு
அவளுக்கு தெரியாது
ஆனாலும் -
"ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகளாய்"


கருவில் வளர்ந்து கல்பில் நிறைந்து
அன்னையின் வடிவமாய் அப்படியே இருக்க
உயிரும் உள்ளத்தின் உணர் வுகளுமே
கண்ணில் காணும் கனவு !

அன்பின் மனசு காட்டுவது அருட்கொடை!
உள்ளத்தின் உணர்வும் வரமாகி உயிரும்
உண்மையின் பேரெழில் ! உத்தம நண்பியை
இதயத்தில் வைத்தே இரு.

அன்புகாட்டும் பாசமிகு அண்ணியை உள்ளத்தினில்!
அணைத்தேன் அம்மாவைப் போல் அப்படியே -துள்ளும்
இதயத்தில் பாசத்தை ஊட்டினேன் உள்ளக்
கதவும் திறந்தது கண்டு