ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

இறையின் சிறப்பு !


மகத்து மண்ணில் ஸம் ஸம் ஊற்றில்
நாவினை சுவைக்கும் நீர்!
மக்கள் நிறையும் மக்கமா நகரில்
ஹஜ்ஜினை நிறைவேற்றும் ஹாஜி
சபா மர்வாவில் ஓடும் தொங்கோட்டத்தில்
மாறிடும் வியாதியின் தொல்லை !
வெள்ளை ஆடையில் காபன் உடையில்
மரணத்தை நினைக்கும் உயிர் !
ஈமானிய நெஞ்சத்தில் இனிமையான உணர்வு
படைத்த இறைவனுக்கு நன்றி !
மறுமை வாழ்வில் மண்ணறை வாழ்க்கையில்
தெரியும் இறையின் சிறப்பு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக