சனி, 8 ஜனவரி, 2011

ஒரு ஆத்மாவின் கதறல்!

சங்கத் தமிழைக் காதலிக்கும்!
தங்கை    என்றன்   உளமின்று
மங்கிப் போன கதை கேளீர்! 
மனதின் நிலையைப் புரிந்திடுவீர்!

மக்களுக்காய் போராடும்!
பாராளுமன்ற சகோதரரே!
கடின உள்ளம் கொள்ளாதீர்!
கண்ணீர் சிந்த வையாதீர்!

விலையேற்ற மென்னே ..?வயிற்றிலே
அடிப்ப தென்ன ..? கூறிடுவீர்!
புள்ளடி வேண்டும் கேளுங்கள்
எங்கள் நிலையைப் பாருங்கள்!

எம். பி. மாரே! தம்பி மாரே!
அழகுத் திருநாட்டின் காவலரே!
உண்மையாக கேட்கின்றேன்!
விலையேற்றத்தை குறைத்துத் தாருங்கள்!

மனம் கலங்கி கேட்கிறேன்!
பாவை  புலம்பிக் கதறுகிறேன்!
விலை ஏதும் ஏற்றாமல் நீங்கள்
எங்கள் ஏழ்மையினைத் துடையுங்கள்

சரித்திரம் அல்ல தரித்திரம்!!!

வரட்சியில் துடிக்கும்
வாலிபத்தின்
மனித நேயமே!
இங்கு-
பாலைவனம் மட்டுமா
வரண்டு  போயின...?
 என்இளமையும்  தான்!
"நா"தவிக்கலாம்
எம்
வலிபமுமா ..?

நிம்மதியை தொலைத்து
இளமையை இழந்து
முகாம்களில் -
அடக்கிலம்  மடைந்து 
உறவுகளைப்  பிரிந்து
அகதிகலாக்கப்பட்டோம்!

வாழ்க்கையே
சஹாராப்பாலைவனமாகிவிட
உஸ்ன நினைவுகளால்
நாம் துடிக்கிறோம்!

எரியும் சுடராக
மனம்-
வேதனை நெருப்பில் சங்கமிக்க
உடம்பில்-தவண்டு  விளையாடும்
உயிர்
புகையாகமாறிக்கொண்டிருக்கும்


எம் வாலிபங்கள்
முதுமையாகிப் போக,
குருதித் துளிகள்-
சிதறிப் போக,
நாங்களென்ன
கருங்கல்லா..?
உணர்ச்சியின்றி கிடப்பதற்கு..!
சந்தோசமின்றி வாழ்வதற்கு

எம் அவலக்குரல் ஓசை
படைத்தவனுக்கு-
கேட்காமளிருப்பதற்கு 
நாங்களென்ன
மீஸான் கட்டைகளா?
அல்லது
உறுகிப்போட்ட
இரும்புத்துண்டுகளா?
உரிமைகள் இழக்கப்படுவதற்கும் 
உடமைகள் எரிக்கப்படுவதற்கும்
உணர்வுகள்-
-புதைக்கப்படுவதற்கும்
மனித நேயத்தின் வாலிபம் -தானா
தேவைப்படுகிறது...?

எம்-
உடலில் நிழலாடும் மூச்சுக்கள்
எதிர்கால சமூகத்தினருக்கு-
சரித்திரம் மட்டுமல்ல!
எம்
சந்தயினரின் தரித்திரியமும் தான்!

உழைத்து வெல்வோம்!!!!

முயற்சியே   எங்கள்  பாதை
 மகிழ்சியே    தேடும்  இல்லம்
உயற்சியே    அடையும்  ஊராம்
  உணர்ச்சியே   பயணத் தேராம்
  அயற்சியை   எதிரிப்  படையாய்
அழித்துநல்  இன்பம்  காண்போம்;
வியர்வையை  வீர  வாளாய்
வீசியே  உழைத்து   வெல்வோம்!
 
 கெட்டதாம்   முயற்சி  காணாக்
கடமையில்   தூய்மை சேரின்
திட்டமாம் கொள்கை நன்றய்
தீட்டிடும் வெற்றி பாரீர்!
தொட்டவை பொன்னாய் மாறத்
துணிவுதான் வேண்டும்! இங்கே
விட்டது அகலும் வினைகள்
வாழ்வது பூக்கும் சிறந்து!

அடுப்பெல்லாம் எரிந்து பசியை
அழித்திடும் உறுதி வேண்டும்!
துடுப்புகள் இளைஞர் நாமே
திருப்பணி தொடங்கி வாழ்வின்
வடுக்களை களைந்து எங்கும்
வெளிச்சத்தை விதைக்க வேண்டும்;
கொடுத்துயர் நீங்கி யார்க்கும் 
களிப்புறும் விடியல் வேண்டும்!

மழைதரும்  மேகம் பார்ப்பீர்!
மண்வளச் சிறப்பை பார்ப்பீர்!
பிழைதராக் கல்வி நெறிகள்
படிகளாய் உயர்வு காட்டும்!
இளைஞரே  எழுவீர்,எங்கள்
இலட்சிய நோக்கம் உழைப்பு
அழைக்கிறேன் வாரீர்! உயர்ந்து
ஆக்குவோம் நிம்மதி வெளிச்சம்!

கரையினில் ஆலைத் தொழில்கள்
திறமொடு கண்டோம்,இன்னும்
கரையிலாக் கடலில் புகுந்து
கொள்ளுவோம்  செல்வத் தொழில்கள்
விரைவுறச் செய்வோம், அறிவால்
விண்ணிலும் அடைவோம் வெற்றி
நிரையெனத்  திரள்வீர்! கணமும்
நன்மைகள் படைப்போம் நெஞ்சே!

அன்பு இதயம்!!!!

நீ-
அன்பை எழுதி எழுதி.....
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன!

நான்-
சாதாரணமாய்த்தான்
உன்னை எண்ணினேன்!

ஆனால்-
வாரத்தில் இருமுறைவரும்
உன்-
வசந்த மடல்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்குப் பறைசாற்றியது!

அதனால்தானே-
என் இதயத்தோடு
இப்படி
இறுகிப் போனாய்!

ப்ரியோய்...
அன்பு தெளித்த
உன் கடிதங்களை...
நான்
அப்படியே
மனதில் எழுதிடுவேன்!
உன்னை நான்
சிறைபிடித்த வரலாறு
தூய்மையானது!

நான்-
காலத்தை நேசிக்கதாவள்;
இற்றுப் போன
சமுதாய நாற்றத்துக்குள்-
நீ மட்டும்
எப்படி...
எனக்கு
நட்பு மனம் தந்தாய்..?

நீ விரித்த
பாசவலைக்குள் சிக்கி
கனநாள்;

கனவாக ஆக்கிவிடாதே...
என்று கதறினேன்!
இன்று-
என் கதறல்
நிரந்தரமாகிப்
போய்க்கொண்டிருக்கிறது!

நீ-
 வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

உன் இதயம்
அன்பிதயம் தானே?

வியாழன், 6 ஜனவரி, 2011

தூசாய் மாற்று!!!!!!!

சமாதானமே! நீயொருக்காய் தென்றலாய்மாறு
அராஜகமாம் அடாவடித்தனத்தை தூசாய் மாற்று!
இப்பூமியில் உன் ஈரநெஞ்சம் காட்டு
புலர் பொழுதில் துயரங்களை சம்பலாகிக்போடு!

பாலகரை கடத்தி நிதம் பணம் கேட்டு
மிரட்டுகின்ற படுபாவி! இதயங் கொண்டு
வாழுகின்ற கொள்ளையர் தம்மை! வாட்டு
வேதனையுற்றிருக்கும் இதயங்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டு!

உடமைகளை சுருட்டுவோரை நண்பர்களாக்கி
நல்லவர்களுக்கு அவமானப் பெயரிட்டு
மணமாரும் இதயங்களுக்கு தீயையூட்டும்
அகிலமெங்கும் உண்மைக்கு சுடரைக் கூட்டு!

எரிக்கப்பட்டு   புதைக்கப்பட்டு இவ் உலகில்
உறவிழந்து வாழுகின்ற நாட்டு மக்கள்
நிம்மதி பெற்று உன்னாலே! கவலை மறந்து!
சுதந்திரமாந்தறாய் வாழ்ந்திடவுன் அருளினைக் கூட்டு !

புதன், 5 ஜனவரி, 2011

பிறந்த பிரக்ஞை!

மனம்
சிதைந்து போகிறது 
கொஞ்சம் கொஞ்சமாக!

உயிர் பாக்கி 
உறுப்பு என்பது இரும்புத் துண்டா.........?

வயசு-
கூடிப்போக வேண்டிய மாற்றம்.
பத்தோடு எட்டு 
பதினெட்டா. ...?

சரியாகத் 
தெரியவில்லை!

தலையின்
கறுப்பு முடி 
நரைத்துப் போகிறது
தினம்! தினம்!!!


நிரந்தரமற்ற 
மனித வாழ்வு 
கலங்கும் அவலம் 
இங்கு.....

ஷெல் வீச்சால் 
காயப்பட்ட 
பார்வதியின்
முகம் மறந்து 
நினைவு சிதறுகிறது
கனவில்.

அங்கம் துண்டிக்கப்பட்ட 
 பாணணாய்த் துடிக்கிறது
பிறந்த  பிரக்ஞை!

சமாதானத் தென்றலின்
தடவலை
அவ்வப்போது சுவாசிக்கையில் 
பாட்டியின் மூச்சு
அடைபட்டு 
உயிர் பிரியத் துடிக்கிறது.

முகத்தில் சொட்டுப் புன்னகை.........

போராட்டம் நிறைந்த
நாட்களில் அழிவை மட்டும்
நினைக்கையில் 
மனம்-
சிதைந்து போகிறது
கொஞ்சம் கொஞ்சமாக!

புயல்!!

சகீ...
நகரும் பாதங்களின்
நெடும் பயணத்தை
விசாரித்துக் கொண்டிருக்கிறாய்  
நீ...

போ...
போய் கொண்டே இரு...!
எத்தனை தூரம்
உன்  பயணம்
தொடருமென்பதை
அறிய வேண்டும்
எதிர்பார்ப்புக்களெல்லாம்      
ஏமாற்றங்களாகிப் போன
உனக்காகவா...
நான்
தவமிருந்தேன்..?

என்
தாகத்தின் அவஸ்த்தைக்கு
ஒரு துளி நீர் ஊற்றுவாய்
என்றெண்ணிய என்
எதிர்பார்புக்களை
வெடித்துச் சிதறும்
இந்தோனேசியாப் பூமியாய்
மாற்றுகின்றாய்
என்னையும்...
என் எதிர்பர்புக்களையும்

இம் மண்ணில்
நீ!
நினைத்த படி வாழ்!
ஆனால்
என் வாழ்க்கை பயணத்தில்
புயலாய்  மட்டும் மாறி விடாதே

கொடுமைக்குக்குறைவில்லை!

கருணை தன்னைக் காசினியில்
காலமெல்லாம் தேடினும்
அரிய சொத்தாய் அது ஆகி
அகிலந்தன்னில் மறைந்துள்ளது!

மடமையோடு மனிதர் தம்
வாழ் நாளினையே அழித்துவிடும்
கொடுமைக்கிங்கே குறைவில்லை
குவலயத்தில் மகிழ் வில்லை!

வஞ்சங்கள் சூ தோடு
வறுமைக் கோலம் துயர் நீங்கி
பஞ் சமா  பா தங்கள்
பாரில் உலவுது காண நாளாய்!

நிறைவு,இன்பம் நெஞ்சத்து
நேர்மை, கருணை எல்லாமே
இணைந்து வருமா வாழ்வினிலே
ஏக்கம் போமா?சொல்லிடுவீர்?

கறுப்பு ஞாயிறு!!!!!!

டிசம்பர் -26
அது வொரு
கருப்பு ஞாயிறு

பல்லாயிரம் இதயங்கள்
உயிரற்றுப் போனதால்
கவலைகளை அனுஷ்டித்த
கருப்பு ஞாயிறு

இனிய காலை நேரத்தில்
சுகந்தம் தடவிய
நம்
தூய இதயங்களை
கடல் அலைகள்
கப்றுகளாக்கிய
சந்தோஷம்
தொலைந்த நாள்
துயரம் நிறைந்த நாள்!

உறவுகளின்
பிரிவுகளினால் -அந்த
ஞாயிருனை
நினைக்கும் போதெல்லாம்...

உயிர் மூச்சுக்களில்
சுவாசித்துக் கொண்டிருக்கும்
வேதனையின் துளிகள்
அலறிக் கொதிக்கும்...
ஆவியாய் பறக்கும்

அன்றைய தினத்தில்
 மரஞ்...செடி...கொடி...
காற்று...மழை...வெயில்...
வானம்...பூமி...
அனைத்தும்
மௌன அஞ்சலி செலுத்தும்
மேகங்கள்
காரிருளாய் மாறும்!!
எம்
இதயங்கள்...உறவுகள்...
சொத்துக்கள் ...சுகங்கள்....
வீடுகள் ...வாசல்கள்...
எல்லாமே...
சுனாமி காட்டிய அட்டூளியப் பிரளயத்தில் 

கல்லறை சமாதிகளுக்கு
நான்
பிராத்தனைப்  பூக்களை
சொரியும் வேளையில்...

உறவினர்கள் சிலர்
குர்ஆனை
தமாம் ஆக்குவதற்கு
தொப்புள் கொடி உறவுகளை (தேடி)
செல்கின்றனர்

இறை அற்புதங்களை
அறிந்து கொள்வதற்கு
சுனாமியின் நினைவூட்டல்கள்
மரணத்தை ஞாபகமூட்டும்

கறுப்பு ஞாயிறு
மறுமையின் பலன்களையும்
இம்மையின் தேடல்களையும்
கற்றுக் கொடுக்கட்டும்

இறைவா!
இயற்கை அழிவுகளினால்
தொடர்ந்தும்
எம் மண்ணுக்கு
சோதனைகளை தந்து விடாது
காப்பாற்றி யருள்  புரிவாய்!!
என்ற
பிராத்தனையின்
ஜனிப்பில் ஜீவிக்கின்றோம்!
அல்ஹம்துலில்லாஹ்!

கன்னியே கவனம்!

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதைதனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காதலெண்டால் கரும்பாவான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலே விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே!

புரட்சி மங்கையர்!!!!

பெண்ணுக்கு உரிமையை மறுத்து விட்டு
பேசிய உலகத்தில் இன்று நாங்கள்
கண்ணுக்கு நிகராக அவரை இன்று
காதலித்துப் போற்றுகின்றோம் அவர்கள் வாழ்க!!!
விண்ணுக்குக் கூடவே பெண்கள் கீர்த்தி
விமானத்தில் பறந்தங்கு சென்ற தாவே
மண்ணுக்கு புதுத்தெம்பு வந்து சேரும்
மாதர் குலம் அதைக்கண்டு மகிழ்ச்சி கொள்ளும்.

பூட்டிய கதவுகளை உடைத்துக் கொண்டு
புரட்சி மங்கையர்கள் எழுந்து விட்டார்
தீட்டுவார் புதுக்கவிதை அதிலே கொஞ்சம்
தீவிரமும் வீரமும் நிறைந்திருக்கும்
வீட்டுக்குள் படுப்பவரும் எழுந்து கொண்டு
விடிவுக்காய் குரல்கொடுக்க வந்து விட்டாள்
நாட்டிலே தமிழ்ப் பஞ்சம் குறைந்து போகும்
நான்கு புறத் திசை இருந்தும் தமிழ் முழங்கும்.

எழுத்துக்கள் எப்பொழுதும் எங்கள் உள்ள
எழுச்சிக்கு துணையாக நிற்க வேண்டும்!
அழுபவர்கள் குரல்களை அடக்கி விட்டு
ஆர்ப்பரித்து அவர் எழும்பச் செய்ய வேண்டும்!
விழுந்து கிடப்பவரை மெல்ல மெல்ல
வீரமுள்ள வீரர்களை மாற்ற வேண்டும்.
பழுது பட்டும் போகாமல் தமிழை என்றும்
பக்குவமாய் நாம் காத்து வளர்க்க வேண்டும்!

சிந்தித்தாயோ?????

தாய்க் குலமே  நீயின்று
தனித் துவத்தை இழந்ததுமேன்?
ஆய் விங்கே நடத்தவில்லை
ஆனாலும் உன்நிலை கண்டதினால்
பாய்ந்து வரும் வேதனையை
பகிர்ந்திடவே நான் முயன்றேன்
தேய்ந்து வருமுன் நிலைபற்றித்
துளியேனும் நீ சிந்தித்தாயா?

ஒரு காலம் கல்வியறிவில்
உனக்கக்கறை அவ்வளவாய்
பெருகி வரவில்லை யெனினும்
பெருமித மடைகிறேன் நீயின்று
அறிவன்ன!ஆய கலைகளென்ன!
அனைத்திலுமே ஆண்களுடன்
சரி நிகராய் முன்னேறும்
சாதூரியம் பெற்றுவிட்டாய்.

உயர் கல்வி கட்பதுவும்
உத்தியோகம் பார்பதுவும்
பயன் நல்கும்.என்றாலும்
பொறுப்புள்ள தாயாய் நிதம்
நயங் கொண்டே இயங்குவதில்
நீ காட்டும் ஆர்வத்தால்
பயன் அதிகம் இல்லையன்ற
புதிர் உனக்கும் புரியவில்லையா?

இன்று பல வாலிபர்கள்
ஏன்? வாலைக்குமரிகளும்
பண்பாடு கலாச்சாரம்
புனித முறும் ஒழுக்க நலன்
என்னவென்று தெரியாது
அகம் போன போக்கினிலே
சென்று கொண்டே இருக்கின்ற
சங்கதியை நீ அறியாயோ?

தான் பிறந்த தாய் நாடே
தனக்கென்றும் பொன் நாடாம்
வான் முகட்டில் வாழ்ந்தாலும்
விண் வெளியில் ஊர்ந்தாலும்
மேன்மையுறத் தன் நாட்டின்
மேன்மைக்காய் ஒவ்வொரு
ஆண் மகனும் பெண்மணியும்
அரும்பணி புரிதல் கடமையே!

இன்றேனோ  அநேகரிடம்
இல்லையென்றோ இப்பண்பு
நன்கிதனை ஆய்ந் திட்டால்
நிச்சியமாய் உன் தவறே
மன்னிப்பாய் மாதாவே!
மதலைக்கு நீயூட்டும் பாலோடு
அன்பகிம்சை நாற்றுப்பற்று
அழுதா நீ ஊட்டினையோ?

மறந்து விட்டேன் 'மகராசி'
மேனியழகு கெடுமென்று
வெறும் புட்டிப் பாலையன்றே
விரும்பி நீயும் ஊட்டுகிறாய்.
பெருகி வரும் தாய்ப் பாசம்
புனித முறும் தேசப்பற்று
அருகி வரும் காரணமே
இன்னும் புரியவில்லையா?

கற்றாய்ந்து நன் முறையில்
கடமைகளைச் செய்யாது
பெற்றோரையும் மதியாது
பெரியோரையும் மதியாது
கற்பிக்கும் ஆசானையும் மதியாது
கடும் போராளிகள் போல
பற்பல இளைஞர் யுவதிகளும்
பாவிகளாகி அலைகின்றார்.

சோலைக் கிளி ஆனபல
சுதந்திரத் தாய்மாரின்
வேலைக்காரப் பெண்களின்
வீட்டு ஆயாமார்களின்
சோலைத்தலைப்பில் வளர்கின்ற
சேய்களுக் கெங்க தாயன்பு?
ஆல் போல் வளர்ந்து நித்தம்
ஆர்க்கப் போதிய வாய்ப்புண்டு.

வரலாறு படைத்த பல
வீர மணித் தாய்மார்கள்
சரித்திரமே அன்னோர்கள்
சமூகம் நாடு உயர்வடைய
அரும் பணிகள் புரிந்ததனை
அழகாகச் சொல்லுவதைத்
தெரியவில்லை யெனில் மீண்டும்
தெளிவாகப் பயின்றிடுவாய்.

இந் நிலை நீடித்தால்
எதிர் காலம் நிலையற்று
அந்த ரத்தில் வாழுகின்ற
அவல நிலை நிச்சியமாய்
வந் தெங்கள் அனைவரையும்
வாட்டி விடும் அறிவாயோ!
நொந் துள்ளம் தளராதே
நெஞ் சுறுதி பூண்டிருவாய்!

அடங் காத காளையர்கள்
அறம் மதியா வாலிபர்கள்
மடம் போணக் கன்னியர்கள்
மாற்றானின் நாகரிகம் தத்துவங்கள்
உடன் கொண்டு-நன்னெறிகள்
உதா சீனம் செய்தந்தோ
தடம் புரளும் இளஞர்கள்
திருந்த வழிசெய்தல் உன்கடனே.