சனி, 8 ஜனவரி, 2011

ஒரு ஆத்மாவின் கதறல்!

சங்கத் தமிழைக் காதலிக்கும்!
தங்கை    என்றன்   உளமின்று
மங்கிப் போன கதை கேளீர்! 
மனதின் நிலையைப் புரிந்திடுவீர்!

மக்களுக்காய் போராடும்!
பாராளுமன்ற சகோதரரே!
கடின உள்ளம் கொள்ளாதீர்!
கண்ணீர் சிந்த வையாதீர்!

விலையேற்ற மென்னே ..?வயிற்றிலே
அடிப்ப தென்ன ..? கூறிடுவீர்!
புள்ளடி வேண்டும் கேளுங்கள்
எங்கள் நிலையைப் பாருங்கள்!

எம். பி. மாரே! தம்பி மாரே!
அழகுத் திருநாட்டின் காவலரே!
உண்மையாக கேட்கின்றேன்!
விலையேற்றத்தை குறைத்துத் தாருங்கள்!

மனம் கலங்கி கேட்கிறேன்!
பாவை  புலம்பிக் கதறுகிறேன்!
விலை ஏதும் ஏற்றாமல் நீங்கள்
எங்கள் ஏழ்மையினைத் துடையுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக