செவ்வாய், 25 நவம்பர், 2014



இறை படைப்பின் தொப்புள் கொடிகள்
வாழையடி வாழையே குட்டியிட்டு நிறைந்தது
தாய் கருவின் விதை நிலத்தில்
சிசுக் குழந்தைகள் தரித்து - பிள்ளை வரம் தரும்
சந்தோசத்தின் எல்லையிலே குருதியை பாலாக்கி
உணவாய் கொடுத்து தேகசுகம் பெறுவேன்
மனமோ நிறைந்த இனிமையது.....!

யாருக்கு உதவ இங்கே மனிதநேயமுண்டு;
பணத்தை தேடுவதில் ரொம்ப போராட்டம் !
இருப்போருக்கு கொடுக்காதே! இல்லாருக்கு கொடுப்பதே!
தவமெனக் கொள்ளத் தகும்


குறைகளில்லாத மனிதர்கள் இல்லை
நோய் இல்லாத உறுப்புகளும் இல்லை
எதையும் தாங்கும் இதயமுள்ளவர்களாக நாம் இருக்கிறோமா?
நிம்மதி கடல் அலையாய் விடாது தொடரும்,
பொறுமையாய் எதையும் தாங்கி வாழ்பவர்களுக்கு....!

நாடி அல்லாஹ்வை தொழுதார், அவனருளைத்
தேடி; ரஹ்மானே உன் குர் ஆனை  - ஓதி
உருகும் அடியாரை காப்பாற்ற வந்த
ரப்பில் ஆலமீனே  சுகத்தை கொடு.....!

தொழுதிடு உள்ளத்தால், இறையருள் வணக்கத்தில்
வாழ்ந்திடு , திக்ர் தவராமல் - செய்திடு
நாடி கேட்கும் வரமெல்லாம் தானடையத்
தேடி வரும் அருள்.....!


வாழ்க்கையது பொய் ; உறவுகளது பொய் ;
வாழ்வது பொய் ; மரணப் படுக்கை
தேடி வருபவர்  யாரெவர் சொல்? வராத யெவரும்
உலக ஆசை மறந்து வாழ்....!


எவ்வளவுதான் செலவு செய்தாலும்
சுகம் தராமல் தேங்கி நிற்கும்
விருப்பமில்லா இருமல் ஒன்று !
மரணம் ஒன்று
வாழ்க்கையை எச்சரிக்க
தாய் பிறப்பிக்கின்றாள் குழந்தை !
மறைத்துவாழ்கின்றேன் நலமென்று
கேட்பவர்களிடமெல்லாம்
விதி செய்த சதி !
இதய மெங்கும்
தவம் கிடைக்கிறது
உன் அன்பினை நாடி !

திங்கள், 15 செப்டம்பர், 2014

எனக்குள் நானே..!



பெண்ணுக்கு சிறப்பு பொறுமை ...!
ஈரமாகும் மன மெல்லாம்
சிரிப்பு ....!
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு ....!
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தை போல ....!
பொறாமையில்லா பொறுமையினை
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு !
பெண்ணை தூற்றி வசை பாடும் உலகத்தில்
பொறுமையோடு
பெருமை தேடும்
ஒருத்தி நீ ....!
கவியாற்றலை
வரமாய் வாங்கி வந்த நீ
பொறாமை பிடித்தவர்கள் மத்தியில்
பொறுமையைவரமாய் பெற்றுக் கொண்டாய்.....!
சிந்தனை கிணற்றை தோண்டின்
மரியாதை ஊற்று உறைந்து போகுமோ?
மானம் மரியாதையாய்
நீ
இருந்தாலும்-வாழ்ந்தாலும்
போட்டி , பொறாமை , சூது , வாது இல்லாத
மனசு உன்னிடம்...!
உன் நட்பினை பின் தொடர
என் மனசோ ஏங்கித் தவிக்கும்....!
ஒரு நதியாய் பாய்ந்தோடுவாய்
பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய்
என்னைக் மூழ்கடிப்பாய் ....!
தாகம்மெடுக்கின்ற நேரத்தில்
வரட்சியாய் இருப்பாய் ....!
வரட் சியாய் இருக்கும் நேரத்தில்
குளிர்சியாய் இருப்பாய்.....!
உன் மௌனம்
வெளியேறிச் செல்ல காத்திருந்து
மனசு உருகித் தவிக்கையிலே
உன் சிந்தனைதுளிகளால்
ஒவ்வொரு நாளும்
நான்
குளிர்த்து கொண்டிருக்கின்றேன் .....!
மழைக்காலத்தில் துளிர்க்கும்
புல் பூண்டாய்
எனக்குள் நானே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறேன்.....!

வரமாய் தந்திடுவாய் ...!



போற்றிப் புகழப்பாடுகிறாய் - என்பதை
அல்லாஹ் நானறிவேன்
தொழுகை சுஜுதினில் – அல்லாஹ் 
மனமுருகியான் தூஆ செய்திடுவேன்....!

உன்னருள் சுரப்பினால் –  உலகம்
குளித்து சுத்தமாகிறது
பாவக்கறை அகற்றிடவோ - சுவாசத்தை
விட்டு அகன்றோடுகிறது.....!

துன்ப துயரங்களை – அகற்றி
உற்றெடுக்கும் ஸம்ஸம் கிணறோ 
உள்ளமெங்குமே – பரவி
இயற்ககைச்சுகம் தருவது 

அருள்மறை திருக்குர்ஆன் - ஓதி
கல்பு மகிழ்கிறது
நன்மை தான் சொறியுமது? – பரக்கத்
பொங்கி நிறைகிறது....!

பொறாமை மறைகிறது - பொறுமையோ
உள்ளத்தில் சேர்கிறது
சாதி வேற்றுமையகன்றே - என்னுளம்
நபிவழி வாழ்கிறது!

உன்றன் நிலையில்லா – வாழ்வில்
மறுமையின் பின்னலே
என்றன் கல்புக்கு - அல்லாஹ்வே
வரமாய் சுவர்க்கம்தந்திடுவாய் ....!


மறந்து விடாதே !
வளரும் கவிஞரை
வளர்த்து விடு....!
கருத்துப் போட்டு
கத்தரித்துவிடாதே....!
கலையுலகில் உனக்கெனப்
புகழ் பாடும் -
இன்னொரு கவிஞன்
இவனாகவும் இருக்கலாம்
மறந்து விடாதே .....!

யார் பறிப்பது .....?



கவிதை
எழுத்தாளர்களின் சிந்தனைத் துளி 
நான் வேர்
நீ -
ஈரமண்
நகர்த்தி நகர்த்தி ஆலமரமானேன் நான்!
.
பாக்கள் வடித்தால்
கவிதை பூக்கும்
உன் வதனத்து வரம்புகளில்
கவிதை
தேனாக இருந்தால்,
ஊரிஞ்சிக் கொண்டே இருப்பேன்
பூவாக இருந்தால்,
மணந்து கொண்டே இருப்பேன்
என்றது களை வண்டு .
கவிதைகள் பூப்பதை யார் பறிப்பது ?
பாக்களை நுகர்ந்த பின்
துன்ப துயரங்களை எழுதிக் கொண்டு
கால நேரத்தை கடத்தினால் கூட,
மனசு வலிக்கவில்லையே
வேதனை சுமந்தால்
பாரம் கூட பாக்களாய் வடிந்து விடுகிறது .
கவிதை
கருங்கல்லுக்குள்ளும்
ஈரமிருப்பதை காட்டி விடக் கூடியது ...!

அற்புதம்...!



சுவாசம்
மூச்சு
இரண்டையும் ஒன்றாக்கி விடுவது 
உயிர்
சொல்லப்படுகின்றது
இறை படைப்புகளுக்கு
உயிர்
கொடுக்கப்படுமென்று .
இறைவனின் அற்புதம்
சிறு துளியில்
உதயமாகின்றது
உலகில் மனித வரலாறு
வாழ்கை
அதில் -
எழுதிச் செல்லாத பல கவிதைகள்
ஒரு புத்தகம்
கவிஞன் எழுதுகிறான்
வாழ்க்கை நிலைக்கும் என்று
இறைவன் தடுக்கின்றான்
வாழ்க்கை நிலைக்காது என்று ..!

நீரில் ஒரு தாமரை..!



தாகம் தீர்(க்)கின்ற
சிவப்புத் துளி
நீரில் ஒரு தாமரை போல 
நோண்ட
நோண்ட
வளர்கிறது
மகிழ்கிறது
என் கரத்தின் நகம் 
உன் நிறை சுமை தான்
அதனால்
விண்ணைத் தொடாத மண்ணாய்
மண்ணைத் தொடாத விண்ணாய்
என்
நாட்டில் பொருட்களின் விலை வாசி
கோடி
கோடி
செல்வத்தை
தேடி
தேடித் தந்து
நாட்டின்
வருமானத்தை கூட்டிச் செல்லும்
கொழுந்து கூடைகள்
நீயென
கவிதைகள் பாடுகிறது
உறிஞ்சி துளைக்கும் அட்டைகளின் அக்கரமிப்பு
என்னை
தேனீ ராக மாற்றி,
உன்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம்
இனி -
குருதி துளிகளும்
தேயிலையாய் மாறலாம்.....!


தாய்மை அடைந்தும்
பலனும் இல்லை
பயனும் இல்லை 
பார்க்க 
கவனிக்க
யாருமில்லாமல்
போராட்டம் ...!


விதி முத்தமிடும் சதி...!
தேடி வரும்
நாடி வரும் சோதனை ...!
அது -
ஒவ்வொரு மனதையும் 
உருக்கி
சுருக்கி
சுண்டலாக்கி
வேக வைக்கும் நெருப்பு
புகையெழுந்து தெளியும்
மனதில் விதி முத்தமிடும் சதி செயல்
பிள்ளைகள் தரும் துன்பம் என்பது.....!

மனிதர் இன்றி மறை இல்லை ..!



அல்லாஹ்
உன்னை நினைத்து தொழும்
எனக்குத் தருவாய் 
சுவனத்தை
பரிசாக ...!
இறை படைப்புக்கு
வரமாய் தந்தாய்
உலகில் படைக்கப்படாத பொருள்
உன்னால்
இறக்கப்பட்ட அல் -குர்ஆன்
ஓதவும் மனனம் செய்யவும் !
.
கூட்டவோ ,குறைக்கவோ
மாற்றவோ, மறைக்கவோ
எவராலும் முடியாது
எந்தக் கவிஞராலும் ,
எழுத்தாளராலும்
எழுத முடியாத ஆயத்துக்கள்
எல்லா அற்புதங்களும் உன்னில்
வருவது
வர இருப்பது
வரப் போவது எல்லாமே
மறையின்றி
மனிதர் இல்லை
மனிதர் இன்றி
மறை இல்லை
அல்லாஹ்
நாம் வாழுகின்றோம்
உன்
திரு மறையில் மனம் மகிழ்ந்து !

வியாழன், 4 செப்டம்பர், 2014

அறியாது புரியாது



மனிதர்கள்
தேனீர் குடித்து தாகத்தை தீர்த்துவிடுகின்றார்கள்
குருதித் துளியென்று 
அறியாது
புரியாது ....!
கரங்கள்
சோர்ந்து விடுவதற்குள்
அட்டைகள் -
உறிஞ்சியெடுத்து விடுகின்றது
உயிர் துளிகளை .....
.
பணம், பொருள், சொத்து ,
தேடியழைகின்றார்கள்
கூடவே வைத்து கொள்வதற்கு அல்ல ,
வாழ்கையை -
வாழ் நாளை
இழந்து போவதற்காக
பாவத்தை
சுமந்து செல்வதற்காக....!


பார்த்தும் பாராமல் ...!
மண்ணில் மட்டுமா வளர்கின்றது
அன்புச் செடி ..?
முக நூலில்
என் நட்பு வட்டத்திலும் வளர்கின்றது
அன்புச் செடி ..!
நேசிக்க ..
நேசிக்க ...
வாழையடி வாழையாய் தொடர்கின்றதே தவிர
வாசம் வீச முடியவில்ல ..!
பார்க்கும் போது
ஆலம்பழத்தைப்போல
ரொம்ப அழகாகத்தான் இருக்கின்றார்கள்
இதழ் விரிக்கும் போது
சில -
பிரயோசனமற்றதாகவே தெரிக்கின்றன
லைக் பண்ணாமல் ,
பார்த்தும் பாராமல்
மௌனமாய் இருக்கும் மனசுகளைப் போலவே..!


அல்லாஹ் வரமாய்
தந்த உயிர்கள்
பெற்றோர்
வயதானதும் 
சில பிள்ளைகள்
தன்னோடு வைத்து மகிழ்கின்றார்கள்
சிலர் -
முதியவர் இல்லத்தில் தள்ளி விட்டு வாழ்கின்றார்கள்
பெற்றவரை பற்றி
சிந்திக்கத் தவறிய மகன்
பேசுகின்றான்
மனைவியின் சொல்லொன்றே
மந்திரமென்று ...!.

நயமடைவார்



ஒவ்வொரு மனிதனும் தன் மனப் போக்கின்
படி ,செயலாற்றுகிறான் -ஆம் !
இவ்வுல காலமும் இறைவனோ நாம் செல்லும் 
பாதையை மாற்றுகிறான் .
மனதின் இச்சைக்கு மதிப்பு கொடுத்து
நடப்பவன் வழி கெடுவான் - எக்
கணத்திலும் மனதை கட்டுப் படுத்தி
வாழ்பவன் மகிழ்ந்திடுவான்....!
முரணான வழியில் இன்பங் காண
முனைகிற மனத்தாலே - மனிதன்
பரமனின் கோபப் பார்வையிற் படுவான்
தன் சிறு குணத்தாலே...!
மனமோ ஆன்மாவுக்குள் இருக்கும்
சுதந்திரப் பொருளாகும் - அதைத்
தினமுஞ் சரிவரப் பேணிடா விட்டால்
துருபிடித் திருளாகும்...!
மனதைக் கட்டுப் படுத்தும் - பலத்தை
உடையோர் ஜெயமுடையார் - நல்ல
குணத்தை கொள்கையை கொண்டவர் இருமை
உலகிலும் நயமடைவார் !



யாவரும் கேளீர்
சாதி ,மத பேத மின்றி
சரி சமமாய் மனிதர் நாம்
மேதினியில் ஒரு குடியாய் 
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம் !
செறிய குருவிக் கூ ட்டமெல்லாம்
சேர்ந்து இனிதே வாழ்கையில்
அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
அழிவுப் பாதைசெல்வதா ..?
உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
ஓடும் குருதி ஒரே நிறம்
கலகம் பண்ணிக் கடிந்த துவாழ்தல்
காட்டு விலங்கின் இழி குணம் !
பிறப்பில் மனிதர் எவரு மிங்கு
பெரிது சிறிது இல்லையே
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
சி ந்தையாலே உயருவர் !
பழிகள் செய்து பாவியாகிப்
பாரில் வாழ்வோர் சிறியவர்
தெளிந்த அழிவு அன்பினோடு
சேர்ந்து இனிது வாழ்வோம் !

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014


நான் நானாக இருகின்றேன்
நீ
நீயாக இரு ..!

கவிதை நம் உயிர் மூச்சு
நல்மனதோடு யோசித்துப் பாரு
துன்பம் துய
ம் போக்க நீ வாழு
போட்டி பொறாமையின்றி எழுது

எழுதிடாதே நீ மனம் நொந்து
வேதனை நுகர்ந்திடுமது உன் மனது
இறைவனை நினைத்து கவிதை பாடு
வந்திடாது உனக் கொரு நாளும் கேடு..!

எப்படி படிக்க...


எப்படி சொல்வது
நாளை என்ன நடக்குமென்று
எதை எதை சந்திப்பது என்று ......?

எப்படி யோசிப்பது
யோசிப்பதெல்லாம் உண்மையாய்
நடக்கும் என்று.....?

கவிதையாவது எழுதியிருக்கலாம்
வாழ்க்கை என்பதன்
வரைவிலக்கணங்கள் எப்படி என்று .....?.

மரணம் ஒன்றே நிச்சய வாழ்வு
என நினைத்திருந்த என்னிடம் ....

வாழ்க்கை ஒரு புத்தகமென்று சொன்னால்
எப்படி படிக்க முடியும் ?
எனக்குத் தெரியாததைப்பற்றி ....

நொந்து வெந்து


துடி துடிக்கும் மீனாய்
நீரில்லாத நிலத்தை நோக்கி
என் உயிர் கொதித்து அலர்கின்றது

இறைவனின் சோதனையென வியாதிகள்
உடல் வலியெடுத்து

நாடி நரம்புகளில் ஊர்ந்து 
குருதியில் உறைந்து உருவத்தை மாற்றும்

இன்சுலினை உறிஞ்சி சுவாசிக்கும் மூச்சு

மெக்போமின் ,டானியல் சக்கரையின் சமநிலை கட்டுப்பாடு
நொந்து வெந்து வேதனை சுமக்கின்றன
உச்சி முதல் உள்ளன்க்கால் வரை

காச்சலாய் ...தலையிடியாய் ....
நடு நடங்கும் உறுப்புகளாய் ...
நாவுகள் வரண்டு அருவியாய் பாய்ந்தோடும் வியவைத் துளிகள்

மூச்சு வாங்கும் உணர்வுகளின் உறுப்புக்கள்
இருளாய் மாறியும் ... மங்களாய் தோன்றியும் ...
பார்வைகள் தூரப்பார்வையாய் தெளிவற்றுக் கிடக்கும்

சங்கிலித் தொடராய் மாற்றங்கள் தொடர ...
உடம்பில் ஒட்டிக்கிடக்கும் வலி

சாவடிக்கும் நோவு
சோதனை நிறைந்த விதி
பொறுமை சோதிக்கும் வியாதி
தன்னை தங்கவைக்கின்றது வைத்திய சாலைகளில்

வாழ்க்கயின் போலி பிறப்பு
வயிற்றில் கருவாகி , உருவாகி
மண்ணில் சங்கமமாகின்றது

மனதை தடவிய அவள் பாசம்
என்றும் என் சுவாச மூச்சு
இதயம் முக(ர்)ந்த அன்பு
உயிராய் தானே வாழும் ...!

மனம் - பணம் ...!

மனம்
கடலை விட
விசாலாமனது
பணம் -
பிணத்தை விட துருநாற்றமானது

துன்பத்தில்
வாழ்ந்தவனுக்கு 
வாழ்க்கையின் உயர்வு தெரியாது
மகிழ்வு தெரியாது

வசதியில்
வாழ்ந்தவனுக்கு
ஏற்றத் தாழ்வு தெரியாது
பசி கஷ்டம் தெரியாது

படைப்பெல்லாம் இறை படைப்பே
வித்தியாசம்
ஏழை -பணக்காரன்

பணக்கார வாழ்வில்
ஆரோக்கியமான சுகம் இருக்காது
ஏழைகள் வாழ்வில் கோடிப் 
பணமிருக்காது ...!

மறைத்து வைத்தாலும்
பச்சை கற்பூரம்
வாசம் வீசும் ..!

அதே போல்
உன் நினைவுகளை
ஆசைக் கனவுகளை
மனதில்
மூடி மறைத்தாலும்
(மறைத்துப் புதைத்தாலும் )
மரணம் தடவும் வரை
அது மாறாது மனதில் நிலைத்திருக்கும் ...!

என் சிந்தனைத் துளிகள்
தூவுகின்ற பாக்களில்
நான் சுவாசிக்கின்றேன் உன் எழுத்து .

என் மூச்சுக்களை
கவிதையாக எழுதும் போது 
அதில் உள்ளத்து உணர்வுகளாகி ,
உன்னுயிர் ஊசலாடி
என் பாசத்தை பாக்களாய் வடிக்கின்றது ..!

என் அன்புத் தோழியின் நட்பு
பல்லாயிரம் நட்சத்திரங்களாய் தெரிகின்றன
அதற்குள் அவள் இதயம் முழுப் பிறைபோல் பிரகாசம்
என் உயிராக...
என் சுவாசமாக...
என் மூசசுக்களாக...!
என் இதயமாக ..!

சகீ
உன் நட்பை சுவாசிக்க ஆசை
உலகில் வாழும் வரை அல்ல
மூச்சு அடங்கும் வரை !
உயிர் பிரியும் வரை!

நான் எழுதும் என் கவிதைவரிகள்
படிப்பவர்களை -
சந்தோச்ப் படுத்துகின்றதோ
இல்லையோ யான் அறியேன்
ஆனால்
நீ -
என்னுயிர் தோழியென்...
உறுதிபடுத்திபடுத்தி விட்டது ...!

மனித பிறப்புக்களை
தன் படைப்புக்களாய் நினைக்கிறான்
இறைவன்

உணர்ந்து பார்ப்பதில் .....,
வாழ்ந்து காட்டுவதில்.....,
நம்பிக்கையில்லாதிருக்கின்றான்
மனிதன்

உலக வாழ்க்கை 
வெறுமை
உயிர்
உத்தரவுயில்லாது பிரியும்
சுவாசம் .

மரணம் மட்டுந்தான் உண்மை

மனிதன் ...!


நான் வாழுகின்ற
வாழ்க்கை தான்
என்னை
அடையாளம் காட்டுகின்றன
நான்
எப்படிப்பட்டவர் .என்று

மனிதன் 
மதிப்பதில்லை
ஆடம்பரத்தால்
அதிகாரத்தால்
தலைக்கனத்தால்
வாழுகின்ற
வாழ்கையை

அல்லாஹ்
நாடுவதை நிறைவேற்றுகின்றான்
மனிதன்
கொடுப்பதை கெடுக்கின்றான் ...!

மருந்து மாத்திரைகள் தேவையில்லை
உனது
நாடி நரம்புகள் போதும்
உன்னைப் பற்றிய
தகவல்களைப் பெறுவதற்கு...!
.
இதயத்தின்
துடிப்புகேட்கிறது
எனக்கு
உன் சுவாசத்தின் போது 
.
உன்
பெறு மூச்சுக்களினால்
என் -
பரிசோதனைபேசப்பட்டது

ஆமாம் -
நோயாளி விதியாளியானால் .
வைத்தியர் பேராளி என்று

மண்ணறை தாயின் கருவறையாம்...!


மனித ஆத்மாக்கள் மகிழ்ந்து வாழ்ந்தாலும்-
ஈடில்லை -
அல்லாஹ்வின் அன்புக்கு ...!
அவனது சந்தோசத்துக்கு ....!!

அல்லாஹ்விடம் கையெந்தி பிராத்திக்கும் போது,
மனசு தேடுகிறது அருட் கொடை நாடி

அல்லாஹ் பெரியவன் ((அல்லாஹு அக்பர் )
அவனின்றி நாம் இல்லை

அல்லாஹ் விரும்புகின்றான்
தன அடியார்கள் -
இறை பக்தியோடு வாழ வேண்டுமென்று

எனக்கு கரு அமைத்து
உயிர் கொடுத்து வளர்த்தவன்
அல்லாஹ் ..!

உன்னை தொழுதும் போதும் , வணங்கும்போதும் தான் நான் உணர்கின்றேன்
அல்லாஹ்வின் ரஹ்மத் எப்படி என்று ..!

உன்னை நினைத்து வாழும் எந்த ஆத்மாவுக்கும்
மண்ணில் எக்கவலையுமில்லை

பரிசுத்த மனதோடு -
மனித ஜீவன்கள் வாழ்வது தான்
அல்லாஹ்வின் விருப்பம் .!

தன்னை நினைத்து வாழ்பவர்களுக்கு
ஆபத்தை விட்டும் காப்பாற்றுகின்றான் அல்லாஹ்..!

சைத்தான்களுக்கு அவ்வளவு ஆசை
நல்லடியார்களை தன பக்கம் திசை திருப்புவதற்கு !.

அருள் மழை சொரிய
நல்லடியார்களை தேடி பாக்கின்றான்
வல்ல பெரியோன் அல்லாஹ் ! .

உனக்குஉயிர் கொடுக்கும் போது உள்ள சந்தோசம்
உன்னுயிர் எடுக்கும் போது வருமா உன் பெற்றோருக்கு ...?

மண்ணறை தாயின் கருவறையாம்
கவிஞர்கள் .கவி பாடுகின்றார்கள்

உன்னைபார்த்துக் கொண்டிருக்கும் ,
மலக்குமார்கள் சொல்கின்றார்களாம்
மண்ணில் செய்த நன்மைக்கு
வின்னிலிருந்து கூலி கிடைக்கின்றதாம் என்று 

தடுமல் பிடித்த தும்மல்


சிந்தனைத் துளிகள் 
என் வியர்வை
கவிதையென வடிக்கின்றது
நாசிக்குள் தடுமல் பிடித்த தும்மல் 
.
கவிதை
கட்டுரை
கதை
பாடல்
விமர்சனம்
நாவல் உற்றெடுத்து
பாய்கின்றது
குருதி ஊற்று ...!

ஈரமாகின்றது
முக நூல்
இணையத் தளங்கள் நிரம்பி வடிகின்றது
போட்டி பொறாமைகளால்...!

விமர்சங்களில் தொற்று நோய் பரவி
வாட்டி வதைக்கின்றது
கொசு தொல்லைகள்
பெரிசுகள் தடை
இளசுகள் வளரும் வரை ....!

விதைத்திடும் உலகில் மாற்றம்....!


உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குறுக்கிடில் அழிந்து போகும்

ஒளியது மறைந்து போக
உறைந்தும் இருளைப் போல
வளர்ந்த நல் உறவும் தேயும்
வளரும் சந்தேகத்தாலே ....

ஒரு மொழி பேசும் நல்ல
ஈரின மாந்தர் நம்முள்
பிரிவினை எதனால்....?நல்ல
புரிந்துணர் வற்ற தாலே

"சீதனம்"தன்னைச் சாடி
சீற்றமாய் எழுது வோரும்
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்...!

நெஞ்சினில் அன்பு பாசம்
இறைவனின் மாறா நேசம்
விஞ்சிய கல்வி நாட்டம்
விதைத்திடும் உலகில் மாற்றம்....!

கறுமைத் திரை கிழிய கவிதை கருவாகும்....!



உள்ளதின் விரிப்புகளில்
மதுவாக இனிக்கும்
கலைக் களங்கள்
புதுக் கவித் தளங்கள்....

பேனாவின் சக்தியில்
பிறந்து வரும்
எழுத்துச் சிசுக்கள்
கற்பனைத் தெளிவில்
விரியும்
புதுக் கவிதை பூக்கள்!

ஒருயுக விடிவில்
கலை நோய் பிடித்த
உள்ளங்களின்
வெளியீட்டு நோக்கில்
குணப் படுத்த -
மருந்தாய் மலிந்த
புதுக் கவிதை தொகுதிகள்.....

தளம்பி வீழும்
மரபுகளில்
ஒரு சிறு
வழுக்கலை நீக்கும்
புது வடிவங்கள்!

கசிவுகளாய்
உள்ளத்து ஊற்றுக்களில்
நிறையும் கவிதைப் பதிவுகள்
தனி ரகமாய் ஜொலிக்கும்

விமர்சனம் வீச -
மனப் பூ மலர்ந்து
பாராட்டு மலர்களால்
தூவ....
அதற்குள்
பொன்னாடை போர்வைகளின்
மகிழ்ச்சி பொங்க
இதயம் தடவும்......

கவிதைகளின் பிறப்பு
கலை நயம் சுரந்து
பதிவுகளின் பரப்பில்
நாமங்கள் வீச......

வலிமை இலக்கியத்தின்
ஷேமம் விசாரிக்கும்
சில தளங்கள்!

கால நகர்வில்
கற்பனை வாத
அடித்தளத்தில்
கறுமைத் திரை கிழிய
கவிதை கருவாகும்....!

கவிதை பதிவுகளில்
முளைத்த வித்துக்கள்
நாளை
விருட்சமாகி
மனித வாழ்வின்
ஆழ அகலங்களை
வேரோடிக் களையும்

இலட்சிய நோக்கில்
தாமாக எழுச்சியுறும்
உண்மைச் சொரூபத்தில்
உயர்ச்சி -
காண விழையும்...

தேங்கிக் கிடக்கும்
அறிவின் புழுக்கம்
வேர்த்துப் போக
ஒப்பீட்டளவில்
இவை ஒரே ராகம்!
இது ஒரு -
கொம்பியூட்டர் யுகம்
சர்வதேச பதிவுகளின் தளம்
பதிவுகளோ நவ யுகம்.....!!

மறப்பது,மன்னிப்பது மனிதனின் இயல்பாகும்
அதில் வியப்பில்லையே!
இறப்பது அன்பென இருந்துவிடில்
அதிலிருப்பது மகிழ்வில்லையே ஏன் ..?

உள்ளத்து வேதனைகளை (அனைத்தையும்)
கவிதையில் கொட்டித் தீர்த்துவிடலாம்
மன ஆறுதலுக்கு -
கவிதைதான் வடிகால்

பொறாமை பிடித்தோர் கெட்டவரென் றெண்ணி
வெறுப்பை வெளிப்படுத்து வோர்தம் – மனமெல்லாம்
காலத்தின் போக்கில் மாறுமென நினைத்தால்
பொறுமை தான் மருந்து சொல்லு !

நிம்மதியில்லா மனசுடன் இணைந்திட்டாள் தேவி
சந்தோசமாய் அமையவில்லை வாழ்க்கை - தீச்சுடராய்
எரியும் இல்லறத்துக்காய் நட்பணி செய்ய
அடுக்கியெடுத் தாள் விறகுத் துண்டு !

எமக்கு இல்லை..!



கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்
வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்
பசியாற உண்பதற்கு உணவு மில்லை
நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை
நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ வில்லை

கால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்
இம்மையிலே நமது இடம் நரகமாகும்

பசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் தனவந்தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்
வகையான உணவுகளும் எமக்கு இல்லை

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்

இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்

பிறக்கும் போது தெரிவதில்லை
வாழ்க்கை எப்படிஎன்று !
மரணிக்கும் போது புரிவதில்லை
இறப்பு இது தான் என்று ...!

உம்மா -
பிறக்கும் போது,
நான் எதையும் கொண்டு வரவில்லை…
ஆனால்,
இறக்கும் போது ஒன்றை மட்டுமே கொண்டு செல்வேன்…
வாழும் காலம் வரை
நான் தேடிய
அமல்களை மட்டுமே …!

உன்னுறவு ..!


அன்பு காட்டும் உன்னை
நினைத்துப் பார்க்க தவறுவதில்லை
என் மனம்

அன்பு வார்த்தை சொல்லி சந்தோசமாய்
வாழவைத்திடும் என் நாவு

கண்ணீர் துளி தூவி 
நன்றிக் கடன் தீர்க்கத் துடிக்கின்றது

சிறு பொழுதினில் கனவாய் வந்து நிழலாய் தடவி -
உறக்கத்தை விடியலாக்கி விடுகிறாய்..!

சுவாசிக்கின்ற சுவாசத்திலே உயிர் மூச்சு நீயெனக்கு
அன்பைக் காட்டி பாசத்தை சொரிகின்றாய்

மனித நேயத்துக்குள்
விடி வெள்ளியாய் உன்னினைவுகளை உதயமாக்குகிறாய்
உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கிய்ப் படுத்துகிறாய்

கவலைகள் மறந்து
சந்தோசம் நிறைந்து
மகிழ்சி தொற்றும் போது
விழித்துக்க்கொள்ளும் என் மனம்

உள்ளத்தில் உன்னை நினைத்து …
அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கின்றது
வரமாய் உன்னுறவு இதமாய் கிடைத்தமைக்கு ..!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014



பிறப்பு என்பது சாதனையில்லை -அல்லாஹ்வின்
படைப்பின்அற்புதங்கள்
ஏற்றத் தாழ்வு வேண்டாமே - அவை
மனதின் வேறு பாடுகளே 
மறுமை வாழ்வின் அடைக்களமெங்கே -யாரை
நாடிச் செல்வதங்கே
வாழும் வரை நாம் காணல் நீரே  வெறும்-
கண்ணாம் பூச்சி விலையாட்டே ...!



என்தோழி நானெது செய்தாலும் - அதில்
   எக்  குறைகளும்  காண்பதில்லை ;
என்றும் என்உடல் நலக்குறைவை -அவள் 
  சிறிதளவும் தாங்குவதில்லை...!



சகீ
பறப்பதற்கு 
எனக்கு -
சிறகு முளைத்தால்
அது
பறந்து வந்து உட்காரும் இடம் 
உன் அன்னை மடி தான்!

மனசு
உன்னை சந்திக்க
துடிக்கின்றது
நினைவுகளில்
 நீ -
நிழலாடிக் கொண்டேயிருப்பதால் ...! 

என் சுவாசம் கூட
ஒவ்வொரு மூச்சுக்களாய்
உன்னை சுவாசிக்கின்றது 

உன் நினைவு
என்னை
தடவிச் செல்லும் போது!


உள்ளத்து உணர்வுகளில்
நீ-குருதியாகி  

ஓடிக் கொண்டிருக்கிறாய்
என் 
சுவாசித்துக் கொண்டிருந்த மூச்சு
 உன்-
உயிரில் கலந்தது
பாசத்தை தேடி ....!