திங்கள், 15 செப்டம்பர், 2014

எனக்குள் நானே..!



பெண்ணுக்கு சிறப்பு பொறுமை ...!
ஈரமாகும் மன மெல்லாம்
சிரிப்பு ....!
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு ....!
இரட்டைத் தாயின்
ஒற்றைக் குழந்தை போல ....!
பொறாமையில்லா பொறுமையினை
உன்னில் கண்டேன்
அந்த மதிப்பு !
பெண்ணை தூற்றி வசை பாடும் உலகத்தில்
பொறுமையோடு
பெருமை தேடும்
ஒருத்தி நீ ....!
கவியாற்றலை
வரமாய் வாங்கி வந்த நீ
பொறாமை பிடித்தவர்கள் மத்தியில்
பொறுமையைவரமாய் பெற்றுக் கொண்டாய்.....!
சிந்தனை கிணற்றை தோண்டின்
மரியாதை ஊற்று உறைந்து போகுமோ?
மானம் மரியாதையாய்
நீ
இருந்தாலும்-வாழ்ந்தாலும்
போட்டி , பொறாமை , சூது , வாது இல்லாத
மனசு உன்னிடம்...!
உன் நட்பினை பின் தொடர
என் மனசோ ஏங்கித் தவிக்கும்....!
ஒரு நதியாய் பாய்ந்தோடுவாய்
பள்ளத்தை நோக்கும் வெள்ளமாய்
என்னைக் மூழ்கடிப்பாய் ....!
தாகம்மெடுக்கின்ற நேரத்தில்
வரட்சியாய் இருப்பாய் ....!
வரட் சியாய் இருக்கும் நேரத்தில்
குளிர்சியாய் இருப்பாய்.....!
உன் மௌனம்
வெளியேறிச் செல்ல காத்திருந்து
மனசு உருகித் தவிக்கையிலே
உன் சிந்தனைதுளிகளால்
ஒவ்வொரு நாளும்
நான்
குளிர்த்து கொண்டிருக்கின்றேன் .....!
மழைக்காலத்தில் துளிர்க்கும்
புல் பூண்டாய்
எனக்குள் நானே
மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழுகிறேன்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக