திங்கள், 2 டிசம்பர், 2013

கவி பாடினான்




தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் – கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று –என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே ..

திங்கள், 18 நவம்பர், 2013



சகீ
சூரியன் போல்
உன் -
அன்பை சுடராக
மாற்று ...!


தலைக்கணம் கொண்டு
தன்னைத் தானே
போற்றிப் புகழ்பவன்
சாதனை -
புரிவதற்கு
தகுதி அற்றவன் ..!


நண்பா
முக நூலை
மதிக்கா விட்டாலும்
பரவாயில்லை
அனால் -
அதில் உள்ள உறவுகளை
நீ
மதித்து நாட
மிதித்து நடந்து விடாதே ...!


ஆயிரம்
எதிரிகளுக்கு
மத்தியில்
நீ -
வாழ்ந்தாலும்
நீ நீயாகவே
இருந்து கொள் ..!


தோழி
உயிர்
பிரியும் -போதும்
திருக் கலிமாவை
உரத்துச் சொல்லு


அறிவுள்ளோருக்கு
சொந்தமானவை
நல்ல நண்பர்கள்
நல்ல நூல்கள்

பொறாமைக் காரர்களுக்கு
சொந்தமானவை
இழி மொழிகள்
தீய குணங்கள்

நல்லதை உணர்ந்து எடு
தீயதை அகற்றி விடு


பெண்மனதினை பூவிலும்மென்மையென எழுதுகின்றீர் --முகப்
பொலிவினைப் ரோஜா இதலென்று வரணிகின்றீர் ;
கண்களை மீன்னெச் சொல்கின்றீர் --மலர்
பெண்மையினை ஏன் வசைமாறி பொழிகின்றீர்..?


பெண்கள் எழுதுவதுண்டோ –ஆணினத்து
புலம்பல்கள் யாவையும் கவிதையின் வரிகளில்
என்றுமே வடிப்பதுண்டோ ?
வேதனை தருவது துண்டோ- அந்த
வேதனை விவாதங்களில் எழுதிடும் யாவும்
ஆணினத்தை தூற்றுவதுண்டோ?


பெண் எழுத்தாளர்கள் மனச் சிந்தனைகளில்
கவிமலர் பூத்திருக்கும்-அதில்
சந்தோசமே நிறைதிருக்கும் !
பாவரிகளை களத்தில் பதிய வைப்பதில்
போட்டிகள் விவாதமாயிருக்கும் –மனம்
மெல்லவே நொந்திருக்கும் ...!



பெண்கள் பிரச்சினைகள் ஒன்றிரண்டா மனமோ
வேதனையில் துடிக்கிறதே-எழுத்து
நொந்து போகின்றதே..!
போட்டிகள் பொறாமைகள் எத்தனை எத்தனை
துயரம் வாட்டுகிறதே- உண்மை
புதைந்து மறைகிறதே..!


எழுதிய கவிதைகள் வயதின் உயர்வுக்கு மேல்
பகட்டு கிடையாது- அதன்
தரத்தின் நிகர் .ஏதோ .?
வாசிக்கும் கண்கள்கூட புருவத்தை உயர்த்துமே
படித்தல் அதன் பெருமை - என்றும்
வீண் புகழ்ச்சி அதில் இல்லை நிறைவு அதில் உண்மை ..!


மனிதர்கள் மனம் பொறுமையாம் - அவை
வேதனையெல்லாம் தாங்குவதில்லை- யாவும்
பொறுத்து நடப்பதில்லை!
சாதி கொடுத்திடும் வேறு பாடுகளிலும் மனம்
எல்லாம் பொறுப்ப்பதில்லை- பொறுமை
எல்லாம் நிலைப்பதில்லை..!

இருளில் புதையும் எழுத்துக்கள்....!

பொறாமைத்தீ மனதில் எரிவதனால்
நம்மில் -
புகை குப்பைகள்

உள்ளவரையில்
அறியாமையின் அகங்காரம்

தலைககனம் பிடித்தாடிக்
கொண்டேயிருக்கும் ..!



திறமையானவர்களை
இருளில் புதைக்கும்
துரோகிகள்
இனிமேலும்
எம்முறவுக்குத் தேவையில்லை..!



பத்திரிகைகளுக்கு
தூசு தட்டி
எழுத்துக்களுக்கு
தடை விதிக்கச் சொன்னவர்களை
நடுத்தெருவில்
எச்சில்களாய்ப் பார்ப்போம் !

எச்சங்களாய் நோக்குவோம் !!



வேடிக்கை என்ன வென்றால்
எங்களுக்கு
கவிதைகளின் விலாசம்
பெற்றுத் தருவதாக
எழுத்துக் குவியல்களை
அள்ளிச் சென்றவர்கள்
எங்களிடமிருந்த
நல்லென்னங்களையும்
நாசமாக்கி விட்டுச் சென்றனர்


பொறாமை புகைச்சளோடு தான் ...!


இவர்களின்
சூதாட்ட குணங்களினால்
சுரண்டப்பட்ட
நம் கலையுலகம் இன்று
வீதியில் விமர்சனமாய் நிற்கின்றது !



தூரங்கள் எதுவுமின்றி
எழுதிக் கொண்டிருந்த
கவியுள்ளங்களும்
முடமாக்கப் பட்டு விட்டன





அடக்கு முறை
பேச்சுக்களால்
உரிமைக் குரல்கள்
உருக்குலையும் வேளைகளில்
ஐஸ் கட்டிகளாய்
மனசு கரைந்து விடுகின்றன


இதயங்களை
கழுவி விட்டு
பதவியில
நறுமணம் பூசிக் கொண்டிருக்கும்
பச்சோந்திகள்(நய வஞ்சகர்கள்)
வாழும் வரையில்
ஈழத்து பெண் இலக்கியம்
என்றென்றும்
இருளினுள்ளேயே
இருக்கும் ....!

எலும்புக் கூடுகளாய்...




வைத்தியசாலைகளில்
நோயாளர்களின் வேதனைகள் -
தலை விரித்தாடும்

நாடி நரம்புகளை
உறுப்புக்களை உடைத்தபடி
கண்ணீர் விழிகளினால்
அழுது வடிக்கும் -
மனசு !

நிச்சயம் இல்லாவாழ்வில்
எதிர்காலம் -
உறிஞ்சும் நிலமாய்
மாறிப் போகும் !
வரண்டு போகும் !!

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதினால் ,
வாழ்வே
சோகமானாதால்
தூக்கமுடியாத சுமைகளாய்
உள்ளத்தின் உணர்வுகள்
பகலை இருளாக்கும்
இருளைப் பகலாக்கும் !

சளித் தொல்லைகள்
இருமல் பாசையால்
ஒப்பாரிவிட்டு அலறும்
தலைவலிகளை
உடம்பு -
விரும்பிச் சுவைக்கும்

கட்டில் படுக்கைகளின்
பெயர் பட்டியல்களை
மருந்துக் கலவைகள்
ஊசி மாற்றங்கள்
குத்தி பதம் பார்க்கும் !

நடுங்கி நடனமாடும்
ஜுரப் போர்வைக்குள்
தாதிமார்களின்
குளிசைகள்
வியர்வைதுளிகளை வடிக்கும்

அதே நேரம்
பிரசவ வேதனையில் துடிக்கும்
தாய்மார்களின்
கண்ணீர் துளிகள் வெள்ளமாகும்

உடம்பின் சுரப்பிகளை தடுத்து
நிரழிவு வியாதியாக்கி
சீனியையும்
இனிப்பு பண்டங்களையும்
தடுத்து நிறுத்தும் !

அழகான் மனித தோற்றம்
எலும்புக் கூடுகளாய்
பரிணாமிக்கும் வரையில்
ரணங்கள் பதிவாகும் !
உணவுகள் குறைவாகும் !!
நிம்மதிகள் தூரமாகும் !!!
கவலைகள் அதிகமாகும் !!!!
இன்னும் இன்னுமாய் !!!!!
பல பல தொடரும் ..!!!!!!


பெண்களின் மகிமையை உலகினில் ஒளிரக் காட்டு
ஆண்களின் ஒற்றுமைக்கு உரமிட்டு ஒளியை ஏற்று
எப்போதும் நல் மனம் கொண்டு வாழு
வந்திருக்கும் வீண் தொல்லைகளை அகற்றிப் போடு ..!


பெண்ணினத்தின் பெருமை நீயென்றே சொன்னார்
முகநூலிலேன் தேவையற்ற கருத்துக்களை நாடி நின்றாய்?
போட்டிபோட்டே பொறாமையில் முன்னேற்றம் கண்டார்
அவமானச் சின்னங்களோடு நீயேன் நட்புவைத்தாய்?

வரும் மாற்றம் ....!



உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குறுக்கிடில் அழிந்து போகும்

ஒளியது மறைந்து போக
உறைந்தும் இருளைப் போல
வளர்ந்த நல் உறவும் தேயும்
வளரும் சந்தேகத்தாலே ....

ஒரு மொழி பேசும் நல்ல
ஈரின மாந்தர் நம்முள்
பிரிவினை எதனால்....?நல்ல
புரிந்துணர் வற்ற தாலே

"சீதனம்"தன்னைச் சாடி
சீற்றமாய் எழுது வோரும்
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்...!

நெஞ்சினில் அன்பு பாசம்
இறைவனின் மாறா நேசம்
விஞ்சிய கல்வி நாட்டம்
விதைத்திடும் உலகில் மாற்றம்....!


கவிதையென்னும் பெயராலே கபடி விளையாட்டு வேண்டாம்
மூச்சு விட்டு மூச்சு வாங்குவது போல் வாசிப்புடன் யாசிப்பும் வளர
மாறா அலை போலென சிறப்பு பெறுவாய்
எதிர் காலம் உன் கையில் வரமாய் பனி புரிவாய் ..!


பெண்ணினத்துக்குப் பாதுகாப்புரிமை வழங்க வேண்டும்
உலமெங்கும் மதித்து வாழுகின்ற நிலைமை வேண்டும்
எழுத்துக்களால் பயனில்லை பெண்களைப் போற்றி
இலட்(ச்)சியத்தாலே உன் திறமை விளங்கச் செய்வாய்!


சேற்றினிலே மிதிக்கின்ற செருப்பை போல
காலத்தை வீணாக்கி கழுவிட வேண்டாம்
இருளையகற்றி யெழுந்தே வெளிச்சமாக்கும்
சூரியனாய் தமிழுணர்வில் எழுச்சி பெறுவாய்!


வாய் பேசும் மனிதரிலும்
மேலானதா
வாய் பேசாத மிருகங்களிளின்
அன்பு

என் உறவு .....!



அன்பு நிறைந்திட பாசம் காட்டிடத் தோழியானாள்
மனதில் நுழைந்தவள் உயிரினில் கலந்திடும் குருதியானாள்

உண்மை நட்பு நெருங்கிட சுடர் தரும் சூரியனா னா ள்
மனம் குளிந்திட பாசம் காட்டிட்டும் அன்னை யானாள்

துன்பம் துளைந்திட இனிமை த ந்திடும் உயிரானாள்
கவிதை எ ழுதிட மனதை தூண்டிடும் கு(க )ருவானாள்

கருணை கா ட்டியவள் சகலமு மறிந்தவள் முக நூலில்
அன்பு தொடந்திட இனிது மகிழ்ந்திடும் என்னுற வானாள் 



ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

மீட்டெடுப்போம் ..




துடித்து மடியும்
அப்பாவி உயிர்களை
காப்பாற்றும் பணியில்
தவமாயிருக்கும் 
ரஷ்யா நாட்டவரே ...

இந்த குழந்தைகளின்
பிரிவுத் துயரினைப் பார்த்து
போராட்ட தளத்திற்கு
விரைந்து வாருங்கள் !

அமெரிக்காவின் தோழமையுடன்
சகாவாசம் வைத்திருக்கும்
கொடூர வல்லரசுகளுக்கு
உயிரின் பெறுமதியை
செயல்களால் காட்டுவோம் ..!

சிரியா நாட்டில்
அங்கவீணர்களாயிருக்கும்
அப்பாவிமக்களை
காப்பாற்ற பிராத்திப்போம்

உயிர்களை கொலை செய்கின்ற
படு பாவிகளுக்கு
உணர்வுகளின் வலியினை
வேதனைகளாய் கொடுபோம் ..!

எங்கள் உறவுகளில்
இருக்கையை போட்டமர்ந்துள்ள
ஒட்டுண்ணி விரோதிகளை
அடித்துத் துரத்திடுவோம்

அப்பாவி உயிர்களிருந்து
குருதி நீரைப் பிழியும்
மனிதாபிமானமற்றவர்களே ...,

உயிருக்காய் போராடி
அவலக் குரலெழுப்பும்
அப்பாவி உயிர்களை மீட்டெடுப்போம் ..!

தலைக்கனம்பிடித்த மனித நேயமற்ற
தலைவர்களை -
ஆட்சியில்லாமல்
,வல்லரசுகளின் கைப்பிள்ளைகளாயிருக்கும்
துரோகிகளை
காப்பாற்றுவோம் ..!

வாழ்வதற்கும்
சாவுவதற்கும் ...வழி
காட்டிக் கொடுக்கும்
அக்கிரமக்காரர்களுக்கு .
இறைவனின் விலாசத்தினை
விசாலப் படுத்துவோம் ..!...

பணப் போர்வைகளிலுள்ள
பாவிகளுக்கு -
அடிமைச்சேவகம் புரியும்
கொலைகார நாடுகளை
விடுதலை செய்விப்போம் ...!

இஸ்லாமிய மண்ணின்
இனிய பிறப்புக்களே..., ...
அருள் மறை
அல் -குர்ஆனை ஓதி
அல்லாஹ்விடம் தூஆ கேளுங்கள் ..!

திருந்தாத உள்ளங்களினால்
துருப்பிடித்துபோன்
இரும்பு உள்ளங்களுக்கு
ஐந்து நேர அதான் ஓசை
ஆரோக்கியம் கொடுக்கட்டும் ..!

சிரியா நாட்டு
அகதிகளுக்கு -சவூதியாவது
குவைத்தாவது ...
கட்டாரவது ...
.ஈரான் -ஈராக்காவது ..
உதவிகள் செய்யட்டும்...!

மக்களை பிடிக்கும்
போட்டி பொறாமைகளுக்கும் ....
நய வஞ்சகததனத்திற்கும் .

இஸ்ராயிலின் பணிக்கு
அல்லாஹ் -
சுனாமியைக் கொடுக்கட்டும் ...!
அழிவைக் கொடுக்கட்டும்
நாசமாய்போகவைக்கட்டும் ..!

இனிமேலாவது -
இந்த -
தாய்யுள்ளங்களின்
பிறப்பின் வலி புரிந்தாவது
மானிட ஜெனமங்கள் திருந்த்ட்டும்..!
இதயங்கள் திறக்கட்டும் ...!!
நிலையற்ற வாழ்வினை உணரட்டும் ....!!!

புனிதம் மணக்கும் ஹஜ்




மண்ணாக வாழ்வில் முஸ்லிம்
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜு க்கு முண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பா வென மாற்றும் ஹஜ்ஜை
தாபமாய் தரிசித் தோர்கள்
தரணியில் ஹாஜி யாவார்


இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்போர் ஹஜ்ஜில் தானே


சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே

ஆடைகள் புதிதாய்ப் பூண்டு
அகத்தினில் மலர்ச்சி பூண்டு
வாழ்வோருக் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே


ஸம்ஸம் தண்ணீர் மாற்றிப்
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ த்திடும் ஹஜ்ஜே வாழி 

என் வீட்டும் பூனை



ஒரு பூனை
அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டு
கதறித் துடிப்பதாக
கனவு கண்டு 
நித்திரையினை தொலைத்தேன்
நிம்மைதியினை இழந்தேன் ...!

காக்கா கோழிகளின்
சங்கீத ராகம்
என் காதுகளை குடையவே
முற்றத்துப் பக்கம் பாதங்கள்
கோலம் வரைந்தன ..!
கண்ககள் நிஜங்களை
தேடி அழைந்தன ...1


என் ராக் கனவுகள் -
என்னை
ஏமாற்ற வில்லை
துரோகமிழைக்கவுமில்லை .!
சில முக நூல் உறவுகளைப் போல்

மன சந்தோஷத்தால் ...!
என் -
இதய மலர் சிரித்து கொட்டியது
அழகான குட்டிகளின்
பிறப்பினைக் கண்டு ...,
வருகையைக் கண்டு ....!


நீண்ட தொல்லைகளுக்குப்
பின் இன்று தான்
என் சுவாச மூச்சுக்கு
மன நிம்மதி கிடைத்தது


இரவு நேர இருளில்
அந்த உடுப்பு பெட்டிக்குள்
எலிகளின் அட்டகாசமா ....?
அல்லது
விளையாட்டு பொம்மைககளின் ?
குரலோசைகளா ..?.
அல்லது
உணர்வுகளின் சப்தங்களா ....?

உன் சுவாசம் பட்ட
வீட்டு சந்து பொந்துகளில்
மூலை முடுக்குக்குகளில்
சூரியனைக் கண்ட பனி போல
மாறத் தொடங்கியுள்ளன

உடம்பினைப் போர்த்திய
துண்டினைப் பார்த்து
உன் இதயம் -
அழுது வடித்தேன் ..?

அதனால் தான் போலும்
உன் உள்ளத்துக் கதவுகளை
அடிக்கடி மூடி
திறந்து எனக்குள் ,
உண்ணாவிரதம்செய்தனவோ ..?
ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

என் ஜீவன் -
எலி ,பல்லி ,கரப்பத்தான் .....,
நுலும்பு கொசு ,எறும்பு
எதுவுமே அற்ற
படுக்கையில் மன நிம்மதி நாடி
உறங்க அழைந்தேன்

உன் குட்டிகளை கண்ட
சின்ன எலிகலெல்லாம்
உன்னைப் போலவே
மரம் விட்டு மரம் தாவும்
மந்திகளைப் போலவே
இடம்மாறி தடம் மாறிப் போயின
நிலை மாறி ..!


சில கனவுகள் பலிக்கும்
நினைவுகள் நிறைவேறும்
என்ற நம்பிக்கைகள்
எனக்குள் வாழ்கின்றன
என் எதிர் பார்ப்புகளின் இலட்சசியங்களில்
ஆரம்பமாகும்
திசைகாட்டும் கப்பலைப் போல் ..!
என் வீட்டும் பூனைகளும் ...!

ஏனம்மா ?



இயற்கை அழகு உனக் கிருந்தால்
செயற்கை மேக்கப் ஏனம்மா ?
மானின் விழிகள் உனக் கிருந்தால்
'மை 'யைப் பூசல் ஏனம்மா ?

இயற்கை கூந்தல் அழகிருக்கு
டிஸ்கோ வெட்டு ஏனம்மா ?
அன்ன நடையின் அழ கிருந்தால் 
அடியுயர் பாதணிகள் ஏனம்மா ?

பவளச் சொண்டு உனக்கிருந்தால்
பளிச்சிடும் சாயம் ஏனம்மா ?
அதிசய வாசனை உனக்கிருந்தால்
அத்தர் வாசனை ஏனம்மா ?

வழிகள் காண்போம் !



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

தீர்வு விரல்



பிணமாக நினைத்துப் போய்
பணமாகத்

திரும்பி வரும் 
மீனவரே ...!

உன் -
வெற்றுடம்பில்
எத்தனையெத்தனை
வேதனைக் கீறல்கள்
அத்தனையும் உன்
வறுமையின் கொடுகள் ..!

மீன்களைப் பிடிக்கும்
மடி வெடிப்புக்கள்
வலைகளின் துண்டுகளை
கிழித்து வீசுவதால்
ஏழை மனசுகள்
கண்ணீர் கசிவுகளை
தண்ணீராய் குடிக்கும்

வானத்து விளக்கு
நூ(ர்)ந்து மறையும்
நடு ஜாமத்தில் மனத்துயரமுடன்
வீட்டரசியின்
கைத்தொலை பேசியும்
தொல்லை தரும் ....,

அறுக்குளா வலை
கீறி வலை
மாயவலை
நெத்தலிவலை
இத்தியாதி இத்தியாதி!!

படகு இயந்திரத்தைவலைகளுடன் செலுத்த
சந்தோசம் நிறைந்து நடுக் கடலில்
நிதமும் மீன்
குஞ்சுகள் நிறையும் ,

சின்ன சின்ன
கனவு வலைகளைக்
கரை சேர்பதற்க்காக
கரங்களில் பொத்தியிருக்கும்
சின்ன நூல்களையும்
இராட்சத மீன்கள்
சில -
அரித்துச் செல்லும் ..!

மாலைச் சூரியனின் மறைவுடன்
கடலில் நுழைந்து
காலைச் சுடருடன்
கரைகள் திரும்பும்
களைப்பு உள்ளங்களின்
உழைப்புக்களை
பணக்கார கரங்கள்
அபகரித்துச் செல்ல
விலை பேசி குறை போடும் ..!

கண் இமைகள்
உரக்கக் கடலில்
சங்கமிக்கும் வேளை
வியாபாரம் செய்யும்
விவஸ்த்தையற்றவர்களுக்கு
மீனவரின் அவஸ்த்தையின் வலிகள்
புரிவதில்லை ...!

கசந்த அநுபவங்களினால்
நொந்த மனசுகளின்
நசிந்த-
வாழ்வுக் கரங்களின்
உரிமைகளை பெற ,
பிச்சை கேட்டு அழையும்
எம்பிமாரும் தம்பிமாரும்
இந்த தேர்தல் மூலம்
தீர்வு விரல் கொடுப்பார்களா ..?


வாழ்க்கை என்பது பொய்யடா
காற்று அடைத்த பையடா
வாழ்ந்து தான் என்ன பயன்டா
எல்லாமே மண்ணின் புதையல்டா


நெஞ்சம் வறண்டு நினைவொடுங்கி மெய்சோர்ந்து
கண்பஞ் சடைந்திருளும் காலம்வரை - என்கரங்கள்
ஓயா தெழுதும்பா உண்மை தழைத்திடவே
தோய்வாயல் லாவென் துணை

மனித ஆத்மாக்கள்




பரந்த பூமியில் வாழுகின்ற
மனித ஆத்மாக்கள் -
மரணத்தை நாடியே 
மண்ணில் வாழுகின்றன !

வயசுத் தரையில்
பதியமிட்ட -
வாழ்க்கைப் பூக்கள்
மரணத்தின் தென்றலிலே
வாசத்தை நூகரச் செய்கின்றன !

இயந்திர உலகில்
ஓயாத இரைச்சல்களாய்
ஓலமிடும் .....
கடல் அலைகள் முதல்

தண்ணீர்
காற்று
நெருப்பு
மழை
பசி
பட்டாணி
நோய்
இன்னும் ..இன்னுமாய்
உன்னை
நேசிக்கின்றன (ஆராதிக்கின்றன )

தூசாய் பறக்கும்
பணத் தாள்களும் ,
கவலைகளெதுவுமின்றி
கறுப்போடு மாறும் வெள்ளை முடிகளும்
வறுமை பாய் விரிக்கும்

கிராமத்து லயங்களின்
தொட்டில் பிடவைகளும்
இதயத்தில்
பல கவிதைகளுக்கு
கருகொடுக்கும் ...!

என்
கவி வரிகளும் ,
இன்னும் பல
நினைவுகளுயும் மரணத்தையே
ஞாபகப்படுத்திக் கொண்டுள்ளன ..!

உன் -
மண்ணறை நாடி
நேசிக்கும் இதயம்

என் -
வெள்ளைநிறப் பேனைத துண்டு
மிஸான் கட்டையில்
அடையாளம் காட்டி
அடக்கம் செய்வது போல ..!

படைத்த மா பெரியோனே .....

உண்மையாக நான்
இந்த மண்ணில்
நடமாடும் ஒரு பிணம் தான்

சொல்லப் போனால்
சொத்து
சுகம்
பட்டம்
பதவி
அந்தஸ்த்துகளுக்கு
சொந்தக் காரணல்ல
நான்...
உன் அளவற்ற அருட் கொடைகளுகளுக்குள்..!


உலக வாழ்வில்
பலநூறு மனங்கள்
பலவிதம் வாழ ....,
ஈமானிய கொள்கைகளை
அனுசரித்து நிற்கும்
இலட்சிய வித்து
நான் .

மனித வாழ்வில்
பிறப்பு -இறப்பினை
அறிமுகப்படுத்தியவனே .....,

இன்று -
எனது கவிதைகள்
மண்ணறை வாழ்க்கை பற்றியும்
எழுதிக் கொள்ளும் .,


நீ -
கடைபிடிக்கச் சொன்ன
நடைமுறைகள்
என் -
இதயத்தின் நாடி நரம்புகளில்
பதிந்துள்ளமையினால்

நீ -
மூச்க்சுக்களாய் தந்துள்ள
இயற்க்கை சுவாசங்களால்
என் -
ஆத்மாவின் உணர்வுகளுக்கு
ஈமானிய உயிப்பினைக் கொடுக்கின்றேன்

புகழ் அனைத்துக்கும் சொந்தக் காரனே ..!

இந்த -
புரியாத மனிதர்களுக்கும்
உயிரை மதிக்காத ஜென்மங்களுக்கும்
வாழ்க்கை பயணத்தில்
நேரான வழியைக் கொடு ..!

என் -
கவிதை வரிகளுக்கு
விமோசனம் காட்டி விடு !

எல்லா மனிதர்களும்
சிந்திக்கட்டும் -இந்த
உற்றெடுக்கும்
கவிதை வரிகளினால்

என்-
உள்ளத்து உணர்வுகளுக்குள்
ஜீவித கரங்களுக்குள்
பிண்ணப்பட்டிருக்கும்- இந்த
முடி தூரிகையினை
முஹம்மது நபியின் போதனையாக
இறைவா நீயே
விளக்கம் கொடுத்து விடு ...!

அப்போது தான்....
சாதி மத வேறுபாடுககின் புற்றிலிருக்கும்
போலி பேச்சுக்களின்
வீண் விவாதங்களை நீக்கி ...
.
மனிதர்களை கெடுக்கும்
முட்டாள்களை விரட்டி

நிம்மதி வாழ்வினை
மண்ணில் நாடலாம் (வாழலாம் )

மண்ணறைக்கு நல்லவற்றை
கொண்டு போகலாம் ....!

பெண் பூவை வாழ விடு.....!




மண்ணோடு 
மண்ணாகிப் போகும் 
இந்த மனித நேயம் -
பயிர்களுக்கு
உரமாகத் துடிக்கின்றது ..!
காம வெறிபிடித்த குண்டு விதைகள்
பெண் பூக்களின்
உயிரிதழ்களைத் தேடுகிறது
இறை படைப்பில்
நிறம் மாறாத
குருதிக்குள்ளும்
ஏன் இத்துனை வேற்றுமைகள் ...?
மனிதனை
மனிதன் கொல்லும்
கொடுமைச் செயலை
எந்த தலைமைத்துவத்தின்
ஆட்சியில் -
முற்றுப் புள்ளி வைக்கப்போகிறார்கள்...?
மரணத்திற்கு அத்திவாரம்
கொலை .களவு .கற்பழிப்பு
துப்பாக்கிச் சப்தம்
இந்த கொடுரம்
எம் மண்ணில் எதற்கு ...?
பொறுமையாய் வாழும்
பெண்புறாக்கள் 
செத்துப் போகட்டுமென்றா .?
ஊமையாய் வடியும்
மனிதப் பிணங்களில்
வெள்ளைப் புறாக்கள்  நீந்தட்டும் மென்றா ...>
மண்ணோடு மண்ணாகும்
மனித நேயமே !
உன் நிழலிலாவது
பெண் பூவை வாழ விடு
சுத்தந்திரப் பூவை
மணக்க விடு ..!
சமாதனம் தேடும் இதயங்களாவது
மானத்தை காக்கும் பெண்களாவது -அதனை
முத்தமிடட்டும
எமது மூதாதையர்
மூளையுடன் நடந்திருந்தால்
எம் பெண்கள்
மானம் இழந்திருக்காது
எமது கால்கள்
இன்று
சருகு களாயிருக்காது
சிந்திய குருதிகளை
சேகரித்து -
கவிதையெழுதும்
எம்முயிருக்கும் -
என்ன உத்தரவாதம்
உணர்வுகள் வரண்டு
நிம்மதியின்றி வாழும
எமக்கு
என்ன 'நாமம '
தெரியுமா ?
காலத்தால் மாறாத
மனித நேயங்களின்
அகராதியில்
நாம்
'அகதி' என்று ...!
அல்லது
பிண மென்று ....!

புதன், 4 செப்டம்பர், 2013

ஏன் படைத்தான் இறைவனும் ....?



கூரையிலே ஆயரங்கண் !கொளுத்தும் வெயில்
குடியிருக்கும் உள் வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே உடலுறைந்து போகும் !எங்கள் 
வாழ்க்கையெலாம் துன்பமாய் மாறிப் போகும் !

பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்!
பசியாற உண்பதற்கு உணவு மில்லை !
நோயில்லா வாழ்மெக்கு அமைய வில்லை
நொடிப் போதும் எமையின்பம் தழுவவில்லை!

கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தா னெமக்குத் தோழ ராகும் !
இம்மையிலே நமது இடம் நரகமாகும் !

பசி வரவே மாத்திரைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந் தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாயக ளுண்ணும்
வகையான உணவுகளும் எமக் கில்லை !

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்தவைத்துக் கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு !பணத் துடிப்பு
பகையாகிப் போனதனால் வீணில் வாழ்ந்தோம் !


இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன்படைத்தான் இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான் நம்மை விட்டு ?


நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில் கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம் !

உண்மை ....!



பொறுமை வாழ்கையின் வெற்றி ...!
பொறாமை வாழ்கையின் தோல்வி ...!!


உங்கள் மனங்களில் என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!



என் அன்பை 
புரிந்து கொள்ள முடியாதென்று 
சொல்பவர்கள்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை அகற்றி விடுங்கள்!

என்னைத் தெரியாது 
என்று சொல்பவர்களும்
உங்கள் மனங்களில் 
இருந்து என்னை நீக்கி விடுங்கள்!

என்னை நேசித்துப் பார்க்க
வெண்டும் என்ற
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே
உங்கள் மனங்களில்
என்னை நட்பாக வைத்துக் கொள்ளுங்கள்...!

நட்பு



ஒரு உண்மையான நட்புக்கு இதயமாக இரு ...!
துரோகமாய் வாழ்ந்து (மாறி )விடாதே ...!

படைப்பு.....!




இறைவன் படைப்பதை மனிதன் பிறப்பிக்கின்றான் 
மனிதன் பிறப்பிப்பதை இறைவன் படைப்பிக்கின்றான்..! 


உயிரின் நாடி



எல்லையி(ல்)லாக் கல்வியெனும் ஒளியைப் பெற்று 
இவ்வுலக வாழ்க்கையிலே ! ஏற்றம் பெற்று 
தொல்லையி(ல்)லா திவ்வுலகில் துருவ மாகத் 
துலங்கிடவே தூய்மையொடு கல்வி கற்போம் !


குருட்டு நெறியால் மனதைக் குரூர மாக்கிக்
கொண்டிழிவு புரிவதனை அறவே நீக்கி !
புரட்சி யினால் இவ்வுலகில் புதுமை பூக்க
பொலிவோடு கல்வியினைத் துணையாய்க் கொள்வோம் .!


கடல் போன்ற சொத்தெல்லாம் அழிந்து போகும்.
காலமெலாம் சேர்த்த பணம் கரைந்து போகும்
உடலோடு உயிரொன்றி வாழு மட்டும்
உயர்வான கல்வியது இணைந்து வாழும் !

ஒன்று குலம் ஒரு ஜாதி ஒன்றே மக்கள்
ஒற்றுமை தான் வையத்தின் உயிரின் நாடி
என்ற நிலை யோடு தினம் இணைந்து வாழ !
இணையில்லாக் கல்விய தன் துணையே வேண்டும் !


இளமையது வாழ்க்கைய தன் வசந்த காலம்
இவ்வுலகின் பொறுப் பெல்லாம் மனிதர் கைக்கே !
தெளிவுடனே இளமையிலே கல்வி தன்னைத் ,
தேடிடுவோம் வையத்தை திருத்தம் செய்வோம் !

விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்!




பத்து மாதம் சுமந்தே என்னைப் 
பரிவுடன் வளர்த்தவள் உம்மா !
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை .!

கண்ணே !என்று இமையைப் போலே !
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொன்னே என்றும் பூவே என்றும்
பொலியும் அன்போர் விதமே !

ஈ யோடெறும்பு எதுவும் அணுகா (து )
இனிதாய் வளர்த்த உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால் என்னைத்
துலங்க வைத்தால் !உய்வோ,ம் !!

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே !
பண்பாய் அனுப்பி விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாய் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள் !
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் உம்மா !

உதிரம் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊ ட்டி வளர்த்தவள் உம்மா
உள்ளத் துணர்வில் வாழும் இதயம்
இவளை மறவேன் மண்ணில்

மனித வாழ்க்கை




பகலுக்குள் இரவும
இரவுக்குள் பகலும் 
மறைந்து இருப்பது போல் தான் 
மனித வாழ்க்கையும் 

வாழ்வுக்குள் மரணமும்
மரணத்துக்குள் வாழ்வும் 
ஒழிந்து இருக்கின்றது..!

தாய் ...!



என் இதயத்தில் 
சுரப்பது கவிதை அல்ல
என்னுயிர் தாயாரின் 
குருதித் துளிகள்


என் நினைவு....!



கடற் கரை மணற் பரப்பில்
இரவின் இருளில் நிழலொழுகும்!
அலைகளின் இன்னிசையூடே
நிலாவை(நிழலை ) ரசித்திருப்பேன்!

மௌனமான இரவிலும்
என் இதயம் இறைவனை தரிசிக்கும்!
நல்லுள்ளங்களை தடவிக்
கொள்ளும் தென்றல் நான்!

உள்ளத்தின் பாச சுரப்பை
இந்த இரவில் பெருக்கினேன்..

காற்றின் தடவல்களை
தனிமையின் ஸ்பரிசத்தை
இயற்கையின் தழுவலை
வழிந்து நிறையும் மனதின் பரிவு!

வான் முழங்கும் மின்னல் ஒளியுறைவில்
கார் மேகங்களின் புற நீக்கல்
இதயங்களின் வளர்ச்சியும்
ஆழலின் மாறு தவிப்பும்..

நட்சத்திரங்களின் சிதறல்களில்
சுடரைக் காண்போர் எவருமில்லை

கடலை பார்க்கிறேன்
ஆண் அலையும் பெண் அலையுமாய் சீரி பாய்ந்து
என் முகம் கழுவிச் செல்லும்..
தடவிக் கொண்ட சுகத்தால்
சுவாசிக்கும் மூச்சுக்களாய் உணர்வுகள்!

என் இதயத்து லயங்களிலும்.........
நாடி நரம்புகளிலும்............


தென்றலூடே
ரத்தம் சுரக்கும் எலும்பிலும் மச்சைகளிலும்.....
சுற்றி தவழும் என் நினைவு....!

ஒன்றே ..!



கரையை தொடும் - அலை 

மரணத்தை தடவும் - உயிர் 

சுவாசமும் மூச்சும் ஒன்றே ..!

அலையும் கரையும் ஒன்றே ..!

மனசு....!



கல்லிலும் ஈரம் கசியும், 
மணல் உறிஞ்சிக் கொண்டு 
ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஆனால் -
சில மனசுகள் 
வரண்ட பாலை வனப் பூமியை விட 
கொடுரமாய் இருக்கும்
காய்ந்து போய் கிடக்கும் ..!