திங்கள், 18 நவம்பர், 2013

இருளில் புதையும் எழுத்துக்கள்....!

பொறாமைத்தீ மனதில் எரிவதனால்
நம்மில் -
புகை குப்பைகள்

உள்ளவரையில்
அறியாமையின் அகங்காரம்

தலைககனம் பிடித்தாடிக்
கொண்டேயிருக்கும் ..!



திறமையானவர்களை
இருளில் புதைக்கும்
துரோகிகள்
இனிமேலும்
எம்முறவுக்குத் தேவையில்லை..!



பத்திரிகைகளுக்கு
தூசு தட்டி
எழுத்துக்களுக்கு
தடை விதிக்கச் சொன்னவர்களை
நடுத்தெருவில்
எச்சில்களாய்ப் பார்ப்போம் !

எச்சங்களாய் நோக்குவோம் !!



வேடிக்கை என்ன வென்றால்
எங்களுக்கு
கவிதைகளின் விலாசம்
பெற்றுத் தருவதாக
எழுத்துக் குவியல்களை
அள்ளிச் சென்றவர்கள்
எங்களிடமிருந்த
நல்லென்னங்களையும்
நாசமாக்கி விட்டுச் சென்றனர்


பொறாமை புகைச்சளோடு தான் ...!


இவர்களின்
சூதாட்ட குணங்களினால்
சுரண்டப்பட்ட
நம் கலையுலகம் இன்று
வீதியில் விமர்சனமாய் நிற்கின்றது !



தூரங்கள் எதுவுமின்றி
எழுதிக் கொண்டிருந்த
கவியுள்ளங்களும்
முடமாக்கப் பட்டு விட்டன





அடக்கு முறை
பேச்சுக்களால்
உரிமைக் குரல்கள்
உருக்குலையும் வேளைகளில்
ஐஸ் கட்டிகளாய்
மனசு கரைந்து விடுகின்றன


இதயங்களை
கழுவி விட்டு
பதவியில
நறுமணம் பூசிக் கொண்டிருக்கும்
பச்சோந்திகள்(நய வஞ்சகர்கள்)
வாழும் வரையில்
ஈழத்து பெண் இலக்கியம்
என்றென்றும்
இருளினுள்ளேயே
இருக்கும் ....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக