ஞாயிறு, 16 டிசம்பர், 2012


என்னையும் உன்னையும்
இணைக்கிறது
நட்பு

உறவு வந்ததில்
தொலைந்து போனது
மன வேதனை

பாசம்
மழையாய் பொழிகின்றது
இதயம் குளிர்கின்றது

நட்பு தொடர
உறவில் மகிழ்கிறது
மனம்

பாசம் அணைக்கிறது
குழந்தை அழுகிறது
வயிற்றுப் பசி

உறவிலிருந்து
விடைபெறும் உயிர்கள்
மரணத்தின் அழைப்பு

மாமரம்
பயன்பட்டது
மீசான் கட்டை

வியாதிக்கு
மருந்து கொடுக்கிறது
நட்பு

தோழர்களின்
சரித்திம்
முக நூல்

இருள் வீட்டுக்கு
(வெளிச்சமாய்) சுடர் கதிர்கள்
சூரியன்

பலஸ்தீன உறவே ஏன் நொந்து அழுகின்றாய்
பச்சிளம் பாலகரை இழிமதியர் கொலைசெய்தற்க்கா ...?
இஸ்லாமிய மதத்தை பிறந் தேன் துடிகின்றாய்
பலஸ் தீனம் தீன் கொடி அழிந்து விட்டதென்றா ...?
வெந்து மனம் நொந்து அழுகின்ற உள்ளங்களின்
துயரத்தின் கண்ணீரெல்லாம் தாக்குதலின் வெளிப்பாடா ..?
தீ னொடு நிறைந்த பாலஸ்தீன தாய் மண்ணே
தாவ ரத மானாய் இஸ்ரேலியாரின் தீச் செயலால்

இஸ்லாம் மலர்ந்த தீனின் பலஸ்தீனத்தை
இஸ்ராயிலே நீயழித்துச் கொலைகாரன் ஆகினை யே
தினமும் இறைபணியில் நடைபயிலும் தீனோர் உன்னருகில்
வாழ்வதே உன் பசிக்கு தீனுடல்கள் தேவை யென்றா
தூவியே குண்டுகளை அப்பாவியுடல்களைக் துளைக்க வைக்கிறாய்
தனலில் எமதிதயம் சுட்டுக் கரிந்தது போல்
அல்லாஹ்வே துடிக்கிறதே பாவிகள் கொடுஞ் செயலால்

தேனான மார்க்கத்துள் திடமான நெஞ்சோடு
தேர்ந்தஅறிவாற்றல் சிறந்த நற் கொள்கை
நிறைந்த தீனோர்களின் புனிதமான பாதையிலே
புரளாது வாழ்ந்த மக்கள் புனிதவுயிர் பிரிந்ததுவோ
நாடு அழிந்ததுவோ உலகெங்கும் பேரதிர்ச்சி
இஸ்ராயிலரின் வெறி செயலுக்கு பலஸ்தீனியர் தான் இரையோ
இஸ்லாமிய நாடே பத்ரு சகாபாக்களும்
மடிந்து தான் போனார்கள் மரணித்தோர் சுவக்கமாவார்கள்

காரனத்தை என்ன சொல்வேனான் ...?
...................................................................
நவம்பர் டிசம்பர் மாதம் தான் குட்டை குளம் நிரம்பும்
குளிர் கால மழை வந்தாலே போதும் -அவள்
ஒட்டி உறவாடி நித்திரையில் காதுக்குள்

மதலை மொழி பேசி மகிழ வருவாளாம்
சட்டென அடித்து விட்டு சனியனே போ என்றாலும்
வெட்கப்படாமல் திரும்பி வருவாளாம் -அவள்
பாசமுடன் நம்முடலை உறிஞ்சி எடுக்கலாமென்ரென்னி
சட்ரென்று முத்த மழை பொழி வாளாம்
கட்டில்படுக்கையானாலும் கல்யாண வீடே யானாலும்
போகுமிடமெல்லாமே காதல் -நாம்
மண்ணிலே கிடந்தாலும் மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
உறவெனக் கொஞ்சி மகிழ் வாளாம்
அனுமதியின்றி எமையானுகி குருதியை வயிறா ர
உரிமையுடன் தானுறிஞ்சுவாளாம் -இந்தக்
பென்னழகி தன்னை யொரு காளையனும் விரும்பாத
காரனத்தை என்ன சொல்வேனான் ...?

பாசமற்ற இப் பேரழகி எதிரியாய் எமையணுகி
விரக்திக்குட் படுத்துவாளாம் -தினம்
நள்ளிரவு நேரத்திலும் நம்முடைய உறக்கத்தை
எழுப்பி விட்டு விடு வாளாம்
எட்டிப்பிடிக்காதயிவள் கட்டிப் பிடிக்கத்தான்
சங்கிதம் பாடி வருவாளாம் -மிக
கெட் ட உறவாலே மலேரியா டெங்கு தந்துயிரை
மரணத்துக்குத் தள்ளி விடும் பாவியிவள் நுளம்பு ..

உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது
இதயத்தின் உணர்வுகள்

வயிற்றுப் பசியின் கொடுரம்

குடல் சுருங்கி அழுகிறது
வறுமையின் வெளிப்பாடு

பட்டம் பதவி கௌரவம்
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு ...
உயிரான அன்புடையவர்களின்
இதயங்களை நினைக்கையில்
தனிமை கூட சுகமே...
சகீ
என்னை நினைத்துப் பார்க்காத
மனசு
உன்னை மட்டும் நினைத்து துடிப்பது
ஏன் ..?

கன்னி யான் மலரே என்னைக்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்

மகிழ்கிறேன் சொர்கம் கண்டே


காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்

தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்


வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்

சேனைப் பயிரைத் திருட வரும் கிளியினத்தை
தேனளைய குரல் காட்டித் திரத்துகின்ற - மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும்பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல்

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செல்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் மலர்ப்பே விழி மலர்கள்
நயதொழுகும் அவை நின்று நறை

சோளக் கதிரோ சுவையான மாதுளையோ
வாளென்ன நிற்கும் வடிவமது -காளை
இதய்த்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
ஏது வென்று புரிய வில்லை ஏய்


வெண்டைவிரல் வடிவம் வேல் வடிவம் உள்ளங் கை
கொண்டை சிறு பூசணிக்காய் கோலை யிதழ்தண்டும்
கரங்கள் காலிரண்டும் செங்கதலி கன்னியவள்
அருங் காதல் நெஞ்சத்து அலை

வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் -இடித்த
ஏலக்காய் போலே இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை..
தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் - கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று --என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே
கலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...!

மாவனெல்லை மண்ணு பெற்றெடுத்து பெருமை கூறும்
தவப் புதல்வி சைபா மலீக்யெனும்
புகழ் பரப்பும் இவள் புதுமைகளால்

பூத்து மணக்குமாம் புவி ..!


இலக்கியக் கவிதைகளை வாயி லெந்தி
வாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்
துலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து
தூது விடும் கலையாம் கண்கள் ...!

கவிதைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்
கலையழகு கலைமகளின் மடியில் வாழும்
புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
புதுயாம் இவள் திறப்பு ..!

ஆயகலை பலதும் இவள் கைகளால்
ஆடி மகிழுமாம் தமிழை வணங்கி
தூயவை தொட்டு கட்டிடும் தாலி
தொடரும் பணியாம் வேலி!

கவிதை நாவி லேந்திவாசிக்கின்ற முத்துக்கள்
எழுந்து நடக்கணும் மனித/மனதிலும் / மண்ணிலும்
மா ளாது வாழும் மா பணி உச்சம்
மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...!

பாவரசி காணுகின்ற /பாவாசிக்கின்ற / முகம் நீ
பக்கத்து துணையானாய் பாவுக் குள்ளே
நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து
நலம் பெறுமாம் நயந்து

பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை

(குறிப்பு இலங்கை மண்ணில் இருந்து முதல் தடவையாக என் குரல் ஒலித்தது என் சகோதரியை பாராட்டி வாழ்த்திய கவிதைஇது (first audio london lovdo)