ஞாயிறு, 16 டிசம்பர், 2012


கன்னி யான் மலரே என்னைக்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்

மகிழ்கிறேன் சொர்கம் கண்டே


காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்

தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்


வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக