ஞாயிறு, 16 டிசம்பர், 2012


என்னையும் உன்னையும்
இணைக்கிறது
நட்பு

உறவு வந்ததில்
தொலைந்து போனது
மன வேதனை

பாசம்
மழையாய் பொழிகின்றது
இதயம் குளிர்கின்றது

நட்பு தொடர
உறவில் மகிழ்கிறது
மனம்

பாசம் அணைக்கிறது
குழந்தை அழுகிறது
வயிற்றுப் பசி

உறவிலிருந்து
விடைபெறும் உயிர்கள்
மரணத்தின் அழைப்பு

மாமரம்
பயன்பட்டது
மீசான் கட்டை

வியாதிக்கு
மருந்து கொடுக்கிறது
நட்பு

தோழர்களின்
சரித்திம்
முக நூல்

இருள் வீட்டுக்கு
(வெளிச்சமாய்) சுடர் கதிர்கள்
சூரியன்

பலஸ்தீன உறவே ஏன் நொந்து அழுகின்றாய்
பச்சிளம் பாலகரை இழிமதியர் கொலைசெய்தற்க்கா ...?
இஸ்லாமிய மதத்தை பிறந் தேன் துடிகின்றாய்
பலஸ் தீனம் தீன் கொடி அழிந்து விட்டதென்றா ...?
வெந்து மனம் நொந்து அழுகின்ற உள்ளங்களின்
துயரத்தின் கண்ணீரெல்லாம் தாக்குதலின் வெளிப்பாடா ..?
தீ னொடு நிறைந்த பாலஸ்தீன தாய் மண்ணே
தாவ ரத மானாய் இஸ்ரேலியாரின் தீச் செயலால்

இஸ்லாம் மலர்ந்த தீனின் பலஸ்தீனத்தை
இஸ்ராயிலே நீயழித்துச் கொலைகாரன் ஆகினை யே
தினமும் இறைபணியில் நடைபயிலும் தீனோர் உன்னருகில்
வாழ்வதே உன் பசிக்கு தீனுடல்கள் தேவை யென்றா
தூவியே குண்டுகளை அப்பாவியுடல்களைக் துளைக்க வைக்கிறாய்
தனலில் எமதிதயம் சுட்டுக் கரிந்தது போல்
அல்லாஹ்வே துடிக்கிறதே பாவிகள் கொடுஞ் செயலால்

தேனான மார்க்கத்துள் திடமான நெஞ்சோடு
தேர்ந்தஅறிவாற்றல் சிறந்த நற் கொள்கை
நிறைந்த தீனோர்களின் புனிதமான பாதையிலே
புரளாது வாழ்ந்த மக்கள் புனிதவுயிர் பிரிந்ததுவோ
நாடு அழிந்ததுவோ உலகெங்கும் பேரதிர்ச்சி
இஸ்ராயிலரின் வெறி செயலுக்கு பலஸ்தீனியர் தான் இரையோ
இஸ்லாமிய நாடே பத்ரு சகாபாக்களும்
மடிந்து தான் போனார்கள் மரணித்தோர் சுவக்கமாவார்கள்

காரனத்தை என்ன சொல்வேனான் ...?
...................................................................
நவம்பர் டிசம்பர் மாதம் தான் குட்டை குளம் நிரம்பும்
குளிர் கால மழை வந்தாலே போதும் -அவள்
ஒட்டி உறவாடி நித்திரையில் காதுக்குள்

மதலை மொழி பேசி மகிழ வருவாளாம்
சட்டென அடித்து விட்டு சனியனே போ என்றாலும்
வெட்கப்படாமல் திரும்பி வருவாளாம் -அவள்
பாசமுடன் நம்முடலை உறிஞ்சி எடுக்கலாமென்ரென்னி
சட்ரென்று முத்த மழை பொழி வாளாம்
கட்டில்படுக்கையானாலும் கல்யாண வீடே யானாலும்
போகுமிடமெல்லாமே காதல் -நாம்
மண்ணிலே கிடந்தாலும் மாடி வீட்டில் வாழ்ந்தாலும்
உறவெனக் கொஞ்சி மகிழ் வாளாம்
அனுமதியின்றி எமையானுகி குருதியை வயிறா ர
உரிமையுடன் தானுறிஞ்சுவாளாம் -இந்தக்
பென்னழகி தன்னை யொரு காளையனும் விரும்பாத
காரனத்தை என்ன சொல்வேனான் ...?

பாசமற்ற இப் பேரழகி எதிரியாய் எமையணுகி
விரக்திக்குட் படுத்துவாளாம் -தினம்
நள்ளிரவு நேரத்திலும் நம்முடைய உறக்கத்தை
எழுப்பி விட்டு விடு வாளாம்
எட்டிப்பிடிக்காதயிவள் கட்டிப் பிடிக்கத்தான்
சங்கிதம் பாடி வருவாளாம் -மிக
கெட் ட உறவாலே மலேரியா டெங்கு தந்துயிரை
மரணத்துக்குத் தள்ளி விடும் பாவியிவள் நுளம்பு ..

உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது
இதயத்தின் உணர்வுகள்

வயிற்றுப் பசியின் கொடுரம்

குடல் சுருங்கி அழுகிறது
வறுமையின் வெளிப்பாடு

பட்டம் பதவி கௌரவம்
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு ...
உயிரான அன்புடையவர்களின்
இதயங்களை நினைக்கையில்
தனிமை கூட சுகமே...
சகீ
என்னை நினைத்துப் பார்க்காத
மனசு
உன்னை மட்டும் நினைத்து துடிப்பது
ஏன் ..?

கன்னி யான் மலரே என்னைக்
காளையோர் தேனின் வண்டாய்
பின்னியே நாளும் சுற்றிப்
பிரியமாய்க் கூடு கின்றான்
மன்னவன் அழைப்பில் யா னும்

மகிழ்கிறேன் சொர்கம் கண்டே


காதலே கொண்டான் என் மேல்
காந்தமாய் கவர்ந்து கொண்டான்
மோதலோ மெக்குள் இல்லை
காதலே வருநாள் மட்டும்
சத்தம் இணைந்து நிற்போம்

தேவதை என்றான் என்னில்
தேன் வதை உண்டு நின்றான்
காவலன் என்றான் என்னைக்
கள்வனாய்க் கவருகின்றான்
பாவலன் அவனின் கையில்
பாவிதழ் ஆனேன் நானும்


வாழ்வெனும் பூங்காவிற்குள்
வந்தநல் தென்றற் கற்றாய்
சூழ்ந்துமே என்னை நாளும்
சுகத்தினில் ஆழ்த்துகின்றான்
ஆள் கடல் அன்பில் தோய்ந்து
அணு தினம் மகிழ்கின்றேன்

சேனைப் பயிரைத் திருட வரும் கிளியினத்தை
தேனளைய குரல் காட்டித் திரத்துகின்ற - மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும்பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல்

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செல்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் மலர்ப்பே விழி மலர்கள்
நயதொழுகும் அவை நின்று நறை

சோளக் கதிரோ சுவையான மாதுளையோ
வாளென்ன நிற்கும் வடிவமது -காளை
இதய்த்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
ஏது வென்று புரிய வில்லை ஏய்


வெண்டைவிரல் வடிவம் வேல் வடிவம் உள்ளங் கை
கொண்டை சிறு பூசணிக்காய் கோலை யிதழ்தண்டும்
கரங்கள் காலிரண்டும் செங்கதலி கன்னியவள்
அருங் காதல் நெஞ்சத்து அலை

வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் -இடித்த
ஏலக்காய் போலே இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை..
தமிழ் மண்ணிலே தோன்றியே-நல்ல
பாவினை ஊட்டினான் மனங்களிலே
சுவையுடன் கவி பாடினான் -தமிழ்
உணர்வு யில்லாதோரைத் தூற்றினான் /தூண்டினான் /

ஆழமாய் கவிதைகளைப் படைத்தான் - கெட்ட
சாதி பேதங்களை மாற்றினான்
உழைத்து வாழப் பாடினான் -வீணே
சோம்பரியாய் கிடப்போரை விரட்டினான்

கெட்ட உள்ளங்களைச் சாடினான் -அதை
உயர்வாய் மதித்து போற்றினான்
பாவினிலே மெரு கேற்றினான் -தமிழ்
பற்றின் உயர் வினைக் கூட்டினான்

பெண்ணின் பெருமையை போற்றினான் -அவர்களை
மதித்து நின்று வாழ்த்தினான்
மண்ணின் மாணிக்கம் அவளென்று --என
பாடிப் புகழ்ந்து காட்டினான் மானிடர்க்கு

அடிமைத் தனத்தை சாடினான்
நாட்டின் நடப்புக்களையும் பாடினான்
சாவுக் கஞ்சாது எழுதினான் -மண்ணில்
மாறாப் புகழினை பெற்றிட்டான்

பாரதிக்கு பா வடிக்கவே -என்
சிந்தனை துளி உற்றெடுக்கும் வெள்ளமே
மண்ணில் பிறந்தவன் கவி மனங்களிலே -அந்த
மா கவி பாரதி விண்ணிலே
கலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...!

மாவனெல்லை மண்ணு பெற்றெடுத்து பெருமை கூறும்
தவப் புதல்வி சைபா மலீக்யெனும்
புகழ் பரப்பும் இவள் புதுமைகளால்

பூத்து மணக்குமாம் புவி ..!


இலக்கியக் கவிதைகளை வாயி லெந்தி
வாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்
துலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து
தூது விடும் கலையாம் கண்கள் ...!

கவிதைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்
கலையழகு கலைமகளின் மடியில் வாழும்
புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
புதுயாம் இவள் திறப்பு ..!

ஆயகலை பலதும் இவள் கைகளால்
ஆடி மகிழுமாம் தமிழை வணங்கி
தூயவை தொட்டு கட்டிடும் தாலி
தொடரும் பணியாம் வேலி!

கவிதை நாவி லேந்திவாசிக்கின்ற முத்துக்கள்
எழுந்து நடக்கணும் மனித/மனதிலும் / மண்ணிலும்
மா ளாது வாழும் மா பணி உச்சம்
மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...!

பாவரசி காணுகின்ற /பாவாசிக்கின்ற / முகம் நீ
பக்கத்து துணையானாய் பாவுக் குள்ளே
நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து
நலம் பெறுமாம் நயந்து

பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை

(குறிப்பு இலங்கை மண்ணில் இருந்து முதல் தடவையாக என் குரல் ஒலித்தது என் சகோதரியை பாராட்டி வாழ்த்திய கவிதைஇது (first audio london lovdo)

சனி, 17 நவம்பர், 2012

உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ .........................................................................................


வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள் 
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும் 
சோகம் நிறைந்த காட்ச்சியினை காண வாரீர் 
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ 

உடுக்களெனக் கூரையிலே பொத்தலுண்டு 
சூரிய ஒளி அவ் வழியில் பார்வை யிட 
ஒளி வீசும் கதிர் அங்கே நேரே பார்த்து
தரையதனை முத்தமிடக் காண்பீர் வின் மீன்

குடிசையின் அறைக்குள் தலையைப் போட்டு
தவிக்கின்ற நிலை தென்றற் காற்றிற் கில்லை
இனிமையானசுடர் தன்னை எந்த நாழும்
எம் வீட்டுக்குள் வீசினாலும் ஏற்ப்போம்

வான் முகத்திலிருந்து கண்ணீர்சிந்தும் மழை துளிகள்
வந்தெமது லயங்களுக்குள் வழிந்தோடும்
சோகம் நிறைந் காட்ச்சியினை காண வாரீர்
உலகமெங்கும் எங்களைப்போல் ஏழைகழுண்டோ

எங்களைப் போல் ஏழைகள் எவறுமில்லை
அல்லாஹ்விடம் கூட எமக் கேள்வி கணக்கில்லை
இங்கெமது ஓட்டை லயத்தின் இடத்தை பார்த்து
இருக்கிறனர் நண்பர்களும் எமக்குதவி யில்லை
உள்ளத்து உணர்வில் நட்பை வளர்த்தல் 
பார்ப்பவர்களுக்கு இல்லை தொல்லை
பகை என்பது புகைக்குச் சமன் 
நெருப்பாய் சுடும் மனம்
உள்ளத்துவானில் உதித்து வரும் உதயமாம் 
நல்லத்தை சொல்லும் வார்த்தை
பெரியவரை மதித்து கண்ணியமாய் வாழும் 
இதயம் கண்டு விழி
கற்கும் கல்வியது வாழ்கையின் சிறப்பு 
பொறுமையோடு கற்பது மகிழ்வு
நட்பினை மதிக்கும் மாபெரும் தளம் 
முக நூலின் நட்பு
கல்வி அறிவுக் கண் களாகும் 
நல்லதை தேடிப் படி
ஆசான் என்போர் உயிரின் நாடி 
நேசித்து நிழல் பெறு
பெண் என்பவள் உலகத்துக் கண்ணாடி 
உடையாது காப்பது நேயம்

நட்பு வாழும் உயிராழும் உறவே 
அன்பு புரிந்தோர் இதையாரிவர்
தமிழ் அழகு தனி அளவு 
தமிழ்கென்றும் இலை யழிவு
தமிழ் மதித்தோன் வாழ்வு நிலைக்கும் 
மொழியின் தரம் சிறக்கும்
சகீயவள்  நா அன்பைச் சொல்லும் 
பாசமலரின் பார்வையது நேசத்தைக் காட்டும் 
முகஅழகில் உறவின் மொட்டு வளரும் 
அன்பது தரும் மிதயத்தில் நானே சொர்க்கம்
துயரச் சுமைகள் பட்டுத் தெறிக்க -குருதி வற்றி 
நிம்மதியிழந்திருக்கு மானிடர் 
இத்தரை தன்னில் நல்ல இன்னொளிகண்டு வாழ்வின் 
இருளெல்லாம் நீங்கி உய்ய 
முஹர்ரம் இஸ்லாமிய ஆண்டே 
பூத்து நீ வருக பொலிந்து
அனலில் என்னிதயம் அறுந்து விழுந்தது போல்
துடிக்கிறதே அவளின் நினைவுகள்
உடம்பை மறைத்து பேணிக் காத்தல் 
பெண்ணுக்கு நிகராம் பெறுமை
மனத்தை காக்கும் மகராசி என்றும் 
மரியாதையின் உயர் படைப்பு
எழுத்துலகில் நின்று கலை பணிபுரியும் 
பெண்ணவள் பெரும் சொத்து
பொய்யது பேசாது நாவினை மதிப்பாள் 
இறையோனின் மதிப் பெண்
தாயாக நின்று பிறர் மானம் காத்தல் 
மரியாதைக்கு இவள் நிழல்
மண்ணிலே இஸ்லாமெனும் எங்கள் 
மாமறை /அருள்மறை /வளர்த்த செம்மல் 
அண்ணலார் நபியை நாமும் -இங்கு 
அனுதினமும் நினைத்து வாழ்வோம்
மாதர் தம்மை ஏய்போர் -இந்த 
மண்ணில் பலருண்டு -தூய
காதல் பூவைக் கசக்கும் தீயோர் 
கருகும் நிலை யுன்டு ..
தாய்மையைப் போற்றுவோம்! கயமையை வேரறுப்போம்!!
பெண்களை . பெண்மையை மதிக்காதவதர்கள் 
உலகில் சாதித்ததாக சரித்திரம் இல்லை

செவ்வாய், 13 நவம்பர், 2012


சகீ
நீ  வாழ்த்திய என் இதயம்
உன்னை
விழிகளால் தேடுகின்றது..

பாச உயிரின் உறவு விண்ணிலே .
..........................................................
இதய  மண்ணில்  தோன்றியே - நல்ல
அன்பினை விதைத்திட்டாள்  ஊன்றியே
பாசமுடன் அன்பு காட்டினாள் -இழி
மதபேதம்  வேண்டாமெனத்  தூற்றினாள்

நல்லன்பு மனம் கொண்டவள்  - கடும்
சாதி பேதங்களை உடைத்தவள்
நட்பு     உள்ளங்களை  நேசிப்பவள்  கெட்ட
பொலி உறவுகளை சபிப்பவள்


மூடத் தனங்களை  வெறுப்பவள்  அதை
முற்றாய் மாற்றி வாழ்பவள்
நட்பிலே  சுடரெற் ரினாள்   அன்பு
உள்ளத்தின் ஆழத்தினை காட்டினாள்


பெண்ணின் பெருமையை காட்டினால்  பாச
அன்னையின் பற்றினை பாடினால்
சாதிக்  கஞ்சாது  வாழ்ந்திட்டாள்
சாகப் புகழினை பெற்றிட்டாள்


அன்புக் கடைக் களம் கொடுத்தே  நல்ல
பாசம் நிலைத்து நிற்கும் இதயமே
வேரிட்டவள் கலைமகள்  இதயமண்ணிலே
பாச உயிரின் உறவு விண்ணிலே ..


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

சகீ .
நான்
காலத்தை  நேசிக்காதவள்
இற்றுப்போன
சமுதாய  நாற்றத்துக்குள்
நீ மட்டும்
எப்படி -
எனக்கு
நட்பு  மணம்  தந்தாய் ...?

சகீ
நீ
அன்பை பேசி பேசி
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன

நான் சாதாரமாகத்தான்
உன்னை எண்ணினேன்

ஆனால்
தினம் தினம்
உன்
இனிய பேச்சுக்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்கு பறை சாற்றியது
அதனால் தானே
என் இதயத்தோடு

இப்படி
இறுகிப் போனாய் ...
எம் தாய் மண்ணின்
தொப்புள் கொடி உறவோடு
ஓட்டிப் போனாய் ...?

ஞாயிறு, 11 நவம்பர், 2012


அன்பை 
விதையாக வீசினாய் 
பதியமாகி விட்டது 
இதயம்...
நீ 
என்னை நேசித்தாய் 
பாசம் 
உனக்குள் வந்த போது
நான் உன்னை 
நேசிக்கின்றேன்
நீ
எனக்குள் சுவாசமாகிப் போனதால் ...!
உன் நினைவுகள்
மழை போல் பொழிகின்றன
உருஞ்சி எடுத்த பின்புதான்
மன தூசுகள் அடங்கி
இதயப் பூமி செழிக்கின்றன ....!


எத்தனை ஆயிரம் அரிசி மணிகள் சாப்பிட்டோம்
சோறாக .
அத்தனையிலும்எண்ணிக்கைகள் இருக்குமா ?
நினைத்துப் பாருங்கள்
வயிறு பதில் சொல்லுமா ?

பசியின் பதட்டம்
நடத்தும் போட்டியில் கேள்வி கேட்டால்
பத்தும் பறந்து போகும்
சோர்வும்
நிறைந்து சேரும்

இதயத்தில் கொஞ்சம் உதறல்

வாழ்க்கையிலும் வறுமைவந்து போகும் நிலையால்
மனதில் வெறுமை
 
ஏதோ மருந்தும் கையுமாய்
போகிறது 
வாழ்க்கை 


உலகில் நடமாடும் பிணம்
பணம் வைத்திருந்தும் தள்ளாடுகிறார்
சீமான்கள்


இறை பணியில் கவனமாய்
தொழுகையோடு பிராத்திக்கிறேன்
தேவையான எதிர்பார்ப்புக்கள்

மன்றாட்டமாய் கேட்கிறேன்
மௌலவி குத்பா நடாத்துகின்றார்
ஏழ்மை வாழ்கை சிறந்தது என்று !
உன் அன்பு 
என்னுடலில 
ஓடுகின்ற குருதித் துளி 



இதயத்துக்குள் துடிக்கும் உணர்வு
பாசம்
உனக்குள் இருக்கும் உறவு
நட்பு


சகீ !
எனக்கு நீ வேண்டும்
உனக்கு நான் வேண்டும்

சரி… நம்முடைய
தாய் மண்ணின் பிரசவம்
எம் மண்ணின் உறவு
எப்படிப்பட்டது ......?
சகீ 
மூச்சைப் போல்
நினைவுகளும் சுகமானது தானே 
நீ தாரலமாய் சுவாசிக்கலாம் 

நீ ஒளி நிறைந்த சூரியன்
நான் இரவு சுமந்த இருள்
நான் உன்னை
எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம்!

உன்னால்
எனக்கு
முதன்முதலாக வந்தது

பாசமான நட்பு !
நேசமான உறவு ...!!
அன்பான அரவனைப்பு ...!!!.
உறங்கிக் கொண்டே
பால் குடிக்கும் பூனையைப் போல
தூங்கிக் கொண்டே
நீ
கனவு காண்கிறாய் 


பிரிவைச் சுமக்க
காரணமானாலும்.
உன் நினைவுகள்தான்
என்னை
மகிழ்ச்சிப் படுத்துகின்றன


நான்
தேடிக் கொண்டே
உன்
நினைவுகளைச் சுமக்கின்றேன்..
எப்படி சொல்வது 
என்று தெரியவில்லை

முதல் வார்த்தை 
ஆரம்பிக்கும் போது
என் நாவில்
எண்ணற்ற உமிழ் சுரப்பிகள்

அன்பின் வெளி ப்பாடு இது
இப்போது பேசும் போது
நாவில்
உதிப்பது அன்பு மொழி தான்.
இவை நம்
இதயங்களின் சுரப்பிகள்

அன்பு காட்டி விடு
மனதில்
பல நூறாய்.உறைந்து ..கிடக்கும்
ஆசைகள்
சொல்லவில்லை இவை
இதயத்து உணர்வுகள்
உதிர்க்கும் வார்த்தைகள்

பேசி விடு ...
இனி நான் வார்த்தைகள் இல்லை
உன் நாவுதான்
என்னை நேசிக்கும் 
நட்புள்ளத்தின்அணைப்பில் 
என்னை நினைத்துப் பார்கிறேன்

ஈரமிருக்கும் இடமெல்லாம்
அடி வேரை நகர்த்திச் செல்லும்
வேர் போல தொடரும்
என்னுறுப்புக்களின் நரம்புகளில்
நீயும் நகர்கின்றாயோ யானறியேன்..

ஓட்டை லயங்களுக்குள்
சூரியனை தரிசிக்கின்ற உன் வாழ்க்கை
என் மூச்சிக்களை சுவாசங்களாக்கிக்-கொண்டு
உன்னுயிர் என்னுயிராகி
என்னுயிர் உன்னுயிராகி
நீ நேசித்த உறவின் ஆழத்தைப் பற்றி
எத்தனை நினைவுகள் என் மனதில்!

உன் பாச பின்னல்களுக்குள்
சிக்கிக் கொண்ட முடிகளைப் போல்
எனக்குள் நண்பியாகிக் கொண்டாய்!!!!

அன்புறவியின் பிரசவத்தில்
நட்புக் கொடியாய் படர்ந் தாய்!
இப்போது நீ
தொப்புள் கொடி உறவா....????
சிவப்புக் கொடியின் நிழலா...????
பச்சைக் கொடியின் சின்னமா...???
இதயத் துவாரங்களால் வெளியேற்ற-முடியாத

இறுகிய பாசம்
உன்னை நேசித்த பின்னே
மறக்கக் கூட முடியவில்லை எனக்கு...
உன்னை எப்படி பிரிந்து வாழ முடியும்...
உன்னை இழந்து விட்டு நான் வாழும் -இவ் உயிர்
உயிருள்ளவரை நீ கூட
சுவாசித்திராத மூச்சு கண்ணே.....
பாசம் தொலைந்து மனம் வெறுத்து 

இதயம் நொந்து வேதனையில் வீழ்ந் து 

மனப் பாயில் உள்ளம் படுத்து 

அன்பு உயிர் நிம்மதி விடுத்த

சாதி பேத இழிநிலை கண்டு

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்பு ..!



மூச்சுக்கள் சுவாசம் ஆகி உறவில்

அணைத்திட வைக்கும் நேசத் தோழர்

இறக்கம் பொழிந்திட கருணை நிறைந்திட

பொறாமை நெஞ்சத்தினர் பகை உள்ளத்தார்

பாசம் பொலிந்தலும் வார்த்தை சொரிவதும் .

நட்பு உள்ளத்தில்வேதனை நெருப்பு ...



இதயத் தரையை செழிப்புடைய தாக்கி

இதயத்தை அடைந்திட நினைத்திடும் உறவு

பேசிய மானிடர் புலம்பல் வார்த்தையினை

கண்டு நொந்து மனம் பொல்லா

இருண்ட உறவு வளந்திடக் கண்டு

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்பு


போட்டி பொறாமை வஞ்சகம் சூது

முட்டி மோதி சாகும் இனவெறி

அன்புள்ளத்தார் அழிந்து இழந்து

அடிமைத் தளையிடை அவதிப் படுந் துயர்

.தேடி வந்திட உணர்வை புரிந்திட

நட்பு உள்ளத்தில் வேதனை நெருப்
சகி 
நான் 
ஓயாமல் கிளம்பும் கடலலையாய் 

விடாது தொடரும் 

கண் இமைகளின் சிமிட்டல் களாய்


சுவாசமாய் நகரும்

மூச்சுக்களின் காற்றாய் சுவாசிப்பேன்


நீ

மின்னலோடு தொடரும்

இடியாய் மாறினாலும்

சுனாமியாய் மாறும்

பேரலையாய் கிளம்பினாலும்

நான்

தாக்குப் பிடிப்பேன்


ஏனெனில்

நான் உன்னுயிராக வேண்டும்

நீ -

என்னுயிராக வேண்டும் ...!..