திங்கள், 18 நவம்பர், 2013



சகீ
சூரியன் போல்
உன் -
அன்பை சுடராக
மாற்று ...!


தலைக்கணம் கொண்டு
தன்னைத் தானே
போற்றிப் புகழ்பவன்
சாதனை -
புரிவதற்கு
தகுதி அற்றவன் ..!


நண்பா
முக நூலை
மதிக்கா விட்டாலும்
பரவாயில்லை
அனால் -
அதில் உள்ள உறவுகளை
நீ
மதித்து நாட
மிதித்து நடந்து விடாதே ...!


ஆயிரம்
எதிரிகளுக்கு
மத்தியில்
நீ -
வாழ்ந்தாலும்
நீ நீயாகவே
இருந்து கொள் ..!


தோழி
உயிர்
பிரியும் -போதும்
திருக் கலிமாவை
உரத்துச் சொல்லு


அறிவுள்ளோருக்கு
சொந்தமானவை
நல்ல நண்பர்கள்
நல்ல நூல்கள்

பொறாமைக் காரர்களுக்கு
சொந்தமானவை
இழி மொழிகள்
தீய குணங்கள்

நல்லதை உணர்ந்து எடு
தீயதை அகற்றி விடு


பெண்மனதினை பூவிலும்மென்மையென எழுதுகின்றீர் --முகப்
பொலிவினைப் ரோஜா இதலென்று வரணிகின்றீர் ;
கண்களை மீன்னெச் சொல்கின்றீர் --மலர்
பெண்மையினை ஏன் வசைமாறி பொழிகின்றீர்..?


பெண்கள் எழுதுவதுண்டோ –ஆணினத்து
புலம்பல்கள் யாவையும் கவிதையின் வரிகளில்
என்றுமே வடிப்பதுண்டோ ?
வேதனை தருவது துண்டோ- அந்த
வேதனை விவாதங்களில் எழுதிடும் யாவும்
ஆணினத்தை தூற்றுவதுண்டோ?


பெண் எழுத்தாளர்கள் மனச் சிந்தனைகளில்
கவிமலர் பூத்திருக்கும்-அதில்
சந்தோசமே நிறைதிருக்கும் !
பாவரிகளை களத்தில் பதிய வைப்பதில்
போட்டிகள் விவாதமாயிருக்கும் –மனம்
மெல்லவே நொந்திருக்கும் ...!



பெண்கள் பிரச்சினைகள் ஒன்றிரண்டா மனமோ
வேதனையில் துடிக்கிறதே-எழுத்து
நொந்து போகின்றதே..!
போட்டிகள் பொறாமைகள் எத்தனை எத்தனை
துயரம் வாட்டுகிறதே- உண்மை
புதைந்து மறைகிறதே..!


எழுதிய கவிதைகள் வயதின் உயர்வுக்கு மேல்
பகட்டு கிடையாது- அதன்
தரத்தின் நிகர் .ஏதோ .?
வாசிக்கும் கண்கள்கூட புருவத்தை உயர்த்துமே
படித்தல் அதன் பெருமை - என்றும்
வீண் புகழ்ச்சி அதில் இல்லை நிறைவு அதில் உண்மை ..!


மனிதர்கள் மனம் பொறுமையாம் - அவை
வேதனையெல்லாம் தாங்குவதில்லை- யாவும்
பொறுத்து நடப்பதில்லை!
சாதி கொடுத்திடும் வேறு பாடுகளிலும் மனம்
எல்லாம் பொறுப்ப்பதில்லை- பொறுமை
எல்லாம் நிலைப்பதில்லை..!

இருளில் புதையும் எழுத்துக்கள்....!

பொறாமைத்தீ மனதில் எரிவதனால்
நம்மில் -
புகை குப்பைகள்

உள்ளவரையில்
அறியாமையின் அகங்காரம்

தலைககனம் பிடித்தாடிக்
கொண்டேயிருக்கும் ..!



திறமையானவர்களை
இருளில் புதைக்கும்
துரோகிகள்
இனிமேலும்
எம்முறவுக்குத் தேவையில்லை..!



பத்திரிகைகளுக்கு
தூசு தட்டி
எழுத்துக்களுக்கு
தடை விதிக்கச் சொன்னவர்களை
நடுத்தெருவில்
எச்சில்களாய்ப் பார்ப்போம் !

எச்சங்களாய் நோக்குவோம் !!



வேடிக்கை என்ன வென்றால்
எங்களுக்கு
கவிதைகளின் விலாசம்
பெற்றுத் தருவதாக
எழுத்துக் குவியல்களை
அள்ளிச் சென்றவர்கள்
எங்களிடமிருந்த
நல்லென்னங்களையும்
நாசமாக்கி விட்டுச் சென்றனர்


பொறாமை புகைச்சளோடு தான் ...!


இவர்களின்
சூதாட்ட குணங்களினால்
சுரண்டப்பட்ட
நம் கலையுலகம் இன்று
வீதியில் விமர்சனமாய் நிற்கின்றது !



தூரங்கள் எதுவுமின்றி
எழுதிக் கொண்டிருந்த
கவியுள்ளங்களும்
முடமாக்கப் பட்டு விட்டன





அடக்கு முறை
பேச்சுக்களால்
உரிமைக் குரல்கள்
உருக்குலையும் வேளைகளில்
ஐஸ் கட்டிகளாய்
மனசு கரைந்து விடுகின்றன


இதயங்களை
கழுவி விட்டு
பதவியில
நறுமணம் பூசிக் கொண்டிருக்கும்
பச்சோந்திகள்(நய வஞ்சகர்கள்)
வாழும் வரையில்
ஈழத்து பெண் இலக்கியம்
என்றென்றும்
இருளினுள்ளேயே
இருக்கும் ....!

எலும்புக் கூடுகளாய்...




வைத்தியசாலைகளில்
நோயாளர்களின் வேதனைகள் -
தலை விரித்தாடும்

நாடி நரம்புகளை
உறுப்புக்களை உடைத்தபடி
கண்ணீர் விழிகளினால்
அழுது வடிக்கும் -
மனசு !

நிச்சயம் இல்லாவாழ்வில்
எதிர்காலம் -
உறிஞ்சும் நிலமாய்
மாறிப் போகும் !
வரண்டு போகும் !!

அமைதியும் நிம்மதியும்
காணாமல் போய்விட்டதினால் ,
வாழ்வே
சோகமானாதால்
தூக்கமுடியாத சுமைகளாய்
உள்ளத்தின் உணர்வுகள்
பகலை இருளாக்கும்
இருளைப் பகலாக்கும் !

சளித் தொல்லைகள்
இருமல் பாசையால்
ஒப்பாரிவிட்டு அலறும்
தலைவலிகளை
உடம்பு -
விரும்பிச் சுவைக்கும்

கட்டில் படுக்கைகளின்
பெயர் பட்டியல்களை
மருந்துக் கலவைகள்
ஊசி மாற்றங்கள்
குத்தி பதம் பார்க்கும் !

நடுங்கி நடனமாடும்
ஜுரப் போர்வைக்குள்
தாதிமார்களின்
குளிசைகள்
வியர்வைதுளிகளை வடிக்கும்

அதே நேரம்
பிரசவ வேதனையில் துடிக்கும்
தாய்மார்களின்
கண்ணீர் துளிகள் வெள்ளமாகும்

உடம்பின் சுரப்பிகளை தடுத்து
நிரழிவு வியாதியாக்கி
சீனியையும்
இனிப்பு பண்டங்களையும்
தடுத்து நிறுத்தும் !

அழகான் மனித தோற்றம்
எலும்புக் கூடுகளாய்
பரிணாமிக்கும் வரையில்
ரணங்கள் பதிவாகும் !
உணவுகள் குறைவாகும் !!
நிம்மதிகள் தூரமாகும் !!!
கவலைகள் அதிகமாகும் !!!!
இன்னும் இன்னுமாய் !!!!!
பல பல தொடரும் ..!!!!!!


பெண்களின் மகிமையை உலகினில் ஒளிரக் காட்டு
ஆண்களின் ஒற்றுமைக்கு உரமிட்டு ஒளியை ஏற்று
எப்போதும் நல் மனம் கொண்டு வாழு
வந்திருக்கும் வீண் தொல்லைகளை அகற்றிப் போடு ..!


பெண்ணினத்தின் பெருமை நீயென்றே சொன்னார்
முகநூலிலேன் தேவையற்ற கருத்துக்களை நாடி நின்றாய்?
போட்டிபோட்டே பொறாமையில் முன்னேற்றம் கண்டார்
அவமானச் சின்னங்களோடு நீயேன் நட்புவைத்தாய்?

வரும் மாற்றம் ....!



உப்பு நன் நீருள் வீழ்ந்தால்
உடன் கரைந்தழியுமாப் போல்
ஒப்பிலா நட்பும் பொய்மை
குறுக்கிடில் அழிந்து போகும்

ஒளியது மறைந்து போக
உறைந்தும் இருளைப் போல
வளர்ந்த நல் உறவும் தேயும்
வளரும் சந்தேகத்தாலே ....

ஒரு மொழி பேசும் நல்ல
ஈரின மாந்தர் நம்முள்
பிரிவினை எதனால்....?நல்ல
புரிந்துணர் வற்ற தாலே

"சீதனம்"தன்னைச் சாடி
சீற்றமாய் எழுது வோரும்
காதலை மறந்து "காசைக்"
கண்டிடில் மாறுகின்றார்...!

நெஞ்சினில் அன்பு பாசம்
இறைவனின் மாறா நேசம்
விஞ்சிய கல்வி நாட்டம்
விதைத்திடும் உலகில் மாற்றம்....!


கவிதையென்னும் பெயராலே கபடி விளையாட்டு வேண்டாம்
மூச்சு விட்டு மூச்சு வாங்குவது போல் வாசிப்புடன் யாசிப்பும் வளர
மாறா அலை போலென சிறப்பு பெறுவாய்
எதிர் காலம் உன் கையில் வரமாய் பனி புரிவாய் ..!


பெண்ணினத்துக்குப் பாதுகாப்புரிமை வழங்க வேண்டும்
உலமெங்கும் மதித்து வாழுகின்ற நிலைமை வேண்டும்
எழுத்துக்களால் பயனில்லை பெண்களைப் போற்றி
இலட்(ச்)சியத்தாலே உன் திறமை விளங்கச் செய்வாய்!


சேற்றினிலே மிதிக்கின்ற செருப்பை போல
காலத்தை வீணாக்கி கழுவிட வேண்டாம்
இருளையகற்றி யெழுந்தே வெளிச்சமாக்கும்
சூரியனாய் தமிழுணர்வில் எழுச்சி பெறுவாய்!


வாய் பேசும் மனிதரிலும்
மேலானதா
வாய் பேசாத மிருகங்களிளின்
அன்பு

என் உறவு .....!



அன்பு நிறைந்திட பாசம் காட்டிடத் தோழியானாள்
மனதில் நுழைந்தவள் உயிரினில் கலந்திடும் குருதியானாள்

உண்மை நட்பு நெருங்கிட சுடர் தரும் சூரியனா னா ள்
மனம் குளிந்திட பாசம் காட்டிட்டும் அன்னை யானாள்

துன்பம் துளைந்திட இனிமை த ந்திடும் உயிரானாள்
கவிதை எ ழுதிட மனதை தூண்டிடும் கு(க )ருவானாள்

கருணை கா ட்டியவள் சகலமு மறிந்தவள் முக நூலில்
அன்பு தொடந்திட இனிது மகிழ்ந்திடும் என்னுற வானாள்