ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

முட்கள் நிறைந்த மலரில் ரோஜா பூ....!



என் தோழி
போட்டி 
பொறாமை
சூது -வாது
பொய் களவு
வேஷம்
நடிப்பு
எதுவுமே அற்ற உறவு !

சத்தியமாக இல்லை
கெட்ட குணம்
அவள் மனம்
மல்லிகை வாசம் !

சுயநல வாதிகள்
சிலர் -
உலா வருகின்றார்கள்

முக நூலில்
நட்பு யென்ற
அடை மொழியில் !

கள்ளமில்லாத
என் சகீ
கருணை காட்டுகின்றாள் !

அவளிடம்
மனம் குளிர
உதவிகள் பெறுகின்றார்கள்

ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி
அதன் பின் நீ யாரோ நான் யாரோயென்று ...!

வாழுகின்றாய் -சகீ
ஏழைகள் இதயத்தை
இறைவனின்
காணலாமென்ன்று !

என்
நாவுகள் வரட்சி யாகின்றன

பாலை வனம் மட்டுமல்ல
உள்ளத்து உணர்வுகளும் !
இதயத்தின் துடிப்புகளும்
மனதின் எதிர்பார்ப்புக்களும்
உன் நினைவுகளும் சேர்ந்து .!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக