வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

போ நீ

உள்ளத்திலே நிம்மதி யோங்க
மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க
அப்பாவிப் பெண் களாக
வாழ்ந்திடனும் மர்ம மனிதரே ஓடு

...மனிதனை மனிதன் கழித்து
உயிரினை அழித்து விழ்த்திச்
சனியனாம் ஆட்டம் போடும்
கிரீஸ் மனிதரே போ நீ

பாய்ந்து பாய்ந்து நாளும்
பயமுருத்தும் அவலம் மாறி
தாயுடன் பிள்ளை யாகத்
தழுவிடப் பேய்யுருவமே ஓடு

வீ ட்டுக்குள் பெண்களை அடக்கி
வீதியில் ஆண்களை கூட்டி
கூட்டு வாழ்கை யைக் கொல்லும்
கொடிய கள்ளனே ஓடு

அமைதியே சொர்க்க மாகும்
ஆனந்த வெள்ள மஃதே
மனிதரெனும் கொடிய பாவியே
பெண்களை விட்டு ஓடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக