சனி, 13 ஆகஸ்ட், 2011

வெளிச்சத்துக்கு வந்து விடு...... !!


நீ
வெளிச்சத்தின்
விலாசத்தை
விசாரிக்கிறாய்
பிறரிடம்
அது உன்
விழி வாசல்களில்
உட்கார்ந்திருப்பதை
உணராமல்
சமூக விலங்குகளுக்கு
சத்தியம் செய்து கொடுத்தாய்
சத்தியம் எது
என்று உணராமல்
இப்போது
உன்
உடல் காட்டுக்குள்
உணர்ச்சித் தீ
அடிக்கடி
பற்றிக் கொள்ள
நீ
அவதிப்படுகிறாய்
வெளியுலகத்திற்கு
நீ தூய்மையானவள் தான்
இருந்தாலும்
உள்ளத் தூய்மைக்கு
உணர்ச்சித் தூரிகை
உரசி உரசி
அடிக்கடி
வண்ணம் தீட்டுகிறதே
உணர்துக் கொள்
இன்னும் உன்
உணர்ச்சிக் கலை
உறங்கவில்லை என்று
இங்கே
ஒரு சோலைவனம்
உனக்காக காத்திருக்க
நீ ஏன் இன்னும்
பாலைவனத்துக்கு
பல்லைக் காட்டுகிறாய்
போலி வாழ்க்கைக்கு
கட்டிய தாலியை
கழற்றி எறி
உனக்காக ஏற
இன்னும் ஒரு தாலி
இங்கே காத்திருக்கிறது
உன்
உணர்ச்சித் தொட்டாக்களே
ஒரு நாள்
சமூக விலங்குகளை
சுட்டு வீழ்த்தும்
அதற்கு முன்னே
கழற்றி
எரிந்து விட்டு
நீயே வந்து விடு
இருட்டுக்குள் நீ
குருட்டுக் கண்
கண்டது போதும்
இனி
வெளிச்சத்துக்கு வந்து விடு......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக