சனி, 11 ஜூன், 2011

மிதக்கும் கனவுகள்...!!

மனசு
வெறிபிடித்த கணவரின் போராட்டத்தில்
துடிக்கும்..

கற்பனைகள்
என் உள்ளத்தின் உணர்வுகளாய்
பிம்பம் சேர்க்கும்...

சுவாசத்தின்
ஏக்கப் பெரு  மூச்சு
என் கவலைக்கு தீ மூட்டும்

பிள்ளைப் பேறு நேரம்
தாய் மடிக்கு வரும் சின்ன ஊற்று
இதயத்துக்கு குளிர்ச்சியைச் சேர்க்கும்..

சிசுவின் கதறல்களுக்கு பால்
கொடுக்க
என் நெஞ்சுச் சூட்டில் முகம் பதிய
சின்னக் கரங்கள் விளையாடும்.
பாசம் சுரந்து
தாய்மையின் உணர்வுகளில்
என் மன விழிகள்..!!

ஆத்மாக்களின்
பரிதாப அவலங்கள்
காணாமல் போக
சிசுக்களின் பிறப்புக்களில்
இதயம் மகிழும்...

இல்லற வாழ்விலே
இணைந்து போக
கனவுகள் மிதக்க
என் தமிழைப் போல்
எழுத்துக்கள் கவிதையாகும்
கலையுலகில்....