செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நோன்பு மாதம்......!

வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து
இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள்  வறியவர்  தீப்பசி  யுணர்ந்து
திருந்திட  அருளிடும்   மாண்பு

மண்ணறை  முஸ்லிம்  மாந்தர்கள்  கூடி
வாழ்த்தி  வரம்   பெறும்  திரு நாள்-அது
தண்மதி  நபிகள்  நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள்  பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள்  வேறாய்
வந்திடும்  பன்னிரு  மாதம்  -அதில்
அருளொளி வீசி  திருமறை   ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

 வாழ்வினை  யுணர்ந்து  தாழ்வினை  மறந்து
வாழ்ந்திட  வழிகளை  காட்டும்  -அது
கூழெளினும் ஏழை குடித்திட  ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய  நபி சொல்! " நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர்  நெஞ்சம்  திருந்திடப் பண்ணும்
திருமறையருள்   நிதம் பொங்கும்'
                                    கலைமகள்  ஹிதாயா றிஸ்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக