ஞாயிறு, 16 டிசம்பர், 2012


சேனைப் பயிரைத் திருட வரும் கிளியினத்தை
தேனளைய குரல் காட்டித் திரத்துகின்ற - மானைப்
பெண்ணெற்று சொல்லின் பெரும்பிழையே தேவதையின்
கண்ணிரண்டும் காதற் கயல்

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்
சேலையுடுத்த கிளி செல்வந்தி -ஆளை
மயக்கும் மாறனவன் மலர்ப்பே விழி மலர்கள்
நயதொழுகும் அவை நின்று நறை

சோளக் கதிரோ சுவையான மாதுளையோ
வாளென்ன நிற்கும் வடிவமது -காளை
இதய்த்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது
ஏது வென்று புரிய வில்லை ஏய்


வெண்டைவிரல் வடிவம் வேல் வடிவம் உள்ளங் கை
கொண்டை சிறு பூசணிக்காய் கோலை யிதழ்தண்டும்
கரங்கள் காலிரண்டும் செங்கதலி கன்னியவள்
அருங் காதல் நெஞ்சத்து அலை

வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு
கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் -இடித்த
ஏலக்காய் போலே இவள் பேச்சு தமிழ் மணக்கும்
காலத்தால் அழியாத கலை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக