ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கலைமகளின் கவிதைக்குள் ஒரு கவி ...!

மாவனெல்லை மண்ணு பெற்றெடுத்து பெருமை கூறும்
தவப் புதல்வி சைபா மலீக்யெனும்
புகழ் பரப்பும் இவள் புதுமைகளால்

பூத்து மணக்குமாம் புவி ..!


இலக்கியக் கவிதைகளை வாயி லெந்தி
வாசிக்கின்ற படையல்கள் தமிழே யாகும்
துலக்கிடும் இலக்கியங்கள் தூரமே நடந்து
தூது விடும் கலையாம் கண்கள் ...!

கவிதைக்குள் நாகொட்டி வாசிக்கு மிவனின்
கலையழகு கலைமகளின் மடியில் வாழும்
புவி வெல்லும் பூரணப் பெட்டகத்தின்
புதுயாம் இவள் திறப்பு ..!

ஆயகலை பலதும் இவள் கைகளால்
ஆடி மகிழுமாம் தமிழை வணங்கி
தூயவை தொட்டு கட்டிடும் தாலி
தொடரும் பணியாம் வேலி!

கவிதை நாவி லேந்திவாசிக்கின்ற முத்துக்கள்
எழுந்து நடக்கணும் மனித/மனதிலும் / மண்ணிலும்
மா ளாது வாழும் மா பணி உச்சம்
மச்சத்தைப் பதிக்குமாம் மகிழ்ந்து ...!

பாவரசி காணுகின்ற /பாவாசிக்கின்ற / முகம் நீ
பக்கத்து துணையானாய் பாவுக் குள்ளே
நாமுரசு கொட்டும் நல்லினிய வாழ்த்து
நலம் பெறுமாம் நயந்து

பாவரசி கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை

(குறிப்பு இலங்கை மண்ணில் இருந்து முதல் தடவையாக என் குரல் ஒலித்தது என் சகோதரியை பாராட்டி வாழ்த்திய கவிதைஇது (first audio london lovdo)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக