ஞாயிறு, 16 டிசம்பர், 2012


உள்ளன்பு இருந்தும்
வெளிக்காட்ட முடியாது
இதயத்தின் உணர்வுகள்

வயிற்றுப் பசியின் கொடுரம்

குடல் சுருங்கி அழுகிறது
வறுமையின் வெளிப்பாடு

பட்டம் பதவி கௌரவம்
அப்படியே தந்தை மாதிரி
தன் குருதி

கவிதை எழுது கவிதை எழுது
வாசித்துக் கொண்டேயிருக்கும்
வானொலி

பொறாமையை விட
பொறுமைதான் தான் முக்கியம்
பெண்ணுக்கு அழகு

சோதன வராமலிருக்க
பிராத்தித்துக் கொண்டிருக்கிறது
மனசு

இதயத்தின் வாரிசு
பிரசவம் இல்லாமல் பிறந்தது
நட்பு

சுவாசிக்க முடியாமல்
மூச்சு அடைபடுகின்றது
தோழியின் நினைவு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக