செவ்வாய், 13 நவம்பர், 2012


சகீ
நீ
அன்பை பேசி பேசி
எனக்குள்
சிறைப்பட்டுப் போய்
நாட்கள் கரைந்து விட்டன

நான் சாதாரமாகத்தான்
உன்னை எண்ணினேன்

ஆனால்
தினம் தினம்
உன்
இனிய பேச்சுக்கள்
உன் இதயத்தை
இமயமென
எனக்கு பறை சாற்றியது
அதனால் தானே
என் இதயத்தோடு

இப்படி
இறுகிப் போனாய் ...
எம் தாய் மண்ணின்
தொப்புள் கொடி உறவோடு
ஓட்டிப் போனாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக