வியாழன், 8 நவம்பர், 2012


சகி
உலகமே உன்னை நேசிக்காவிட்டாலும்
உன்னை
நேசிக்க இந்த உயிர் இருக்கின்றது
கவலைப்படாதே!

என்னை இப் பூமியில் எங்கும் தேடி அழையாதே
உன்
தொப்புள் கொடி உறவுக்கு -
உரிமை தந்த தாயாய் !
நானிருப்பேன்

பூவே நீ எப்போதும்
புன்னகைப் பூவாய் இதழ் விரிப்பாய்
அது
பகைவனைக் கூட சுவாசமாக்கும்
வாடி விடாதே
அது நண்பனைக் கூட சருகாக்கி விடும்
அதனால்
என்றும் செழிப்போடு இரு !

அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே

உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் மட்டும் தான் இருப்பேன்
உன்மையான -
உன் உயிர்த் தோழியாக
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக