புதன், 4 செப்டம்பர், 2013

விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்!




பத்து மாதம் சுமந்தே என்னைப் 
பரிவுடன் வளர்த்தவள் உம்மா !
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை .!

கண்ணே !என்று இமையைப் போலே !
காத்திருப்பாள் இவள் நிதமே !
பொன்னே என்றும் பூவே என்றும்
பொலியும் அன்போர் விதமே !

ஈ யோடெறும்பு எதுவும் அணுகா (து )
இனிதாய் வளர்த்த உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால் என்னைத்
துலங்க வைத்தால் !உய்வோ,ம் !!

பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே !
பண்பாய் அனுப்பி விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாய் !

பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள் !
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் உம்மா !

உதிரம் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊ ட்டி வளர்த்தவள் உம்மா
உள்ளத் துணர்வில் வாழும் இதயம்
இவளை மறவேன் மண்ணில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக